Latest Updates
-
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும் -
கோடையில் உங்க வீட்டை குளுகுளு-ன்னு வெச்சுக்கணுமா? அப்ப இந்த 5 டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! -
இந்தியாவில் இரண்டு தலைநகரங்கள் உள்ள தனித்துவமான மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான வாழைக்காய் புளி கூட்டு ரெசிபி: ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும்
உகாதி பண்டிகைக்கான பூஜை அறை அலங்காரம்

மாவிலை தோரணங்கள்
இந்திய பண்டிகைகளில் மார்ச் மாதத்தில் வருவது உகாதி புத்தாண்டு. இந்த மாதத்தில் மா மரங்கள் பூத்து, காய்த்து அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும். எனவே மாவிலைத் தோரணங்களால் வீடு வயில்களையும், பூஜை அறையை அலங்கரிப்பது சிறப்பாக இருக்கும். மா முருகக்கடவுளுக்கு உகந்த கனியாகும். எனவே மாவிலைத் தோரணம் கட்டுவது முருகப் பெருமானை வரவேற்பது போன்றதாகும்.
கலச கும்பம்
எந்த ஒரு பண்டிகை என்றாலும் பூஜை அறையில் கலசம் வைத்து வழிபடுவது வழக்கம். புத்தாண்டுக்கு ஒரு கும்பத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் தேங்காய், வைத்து சுற்றிலும் மாவிலையால் அலங்கரிக்க வேண்டும். கும்பத்தின் நடுவில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து பூஜை அறையில் வைப்பது தெய்வீக அருள் கிடைக்கும்.
வர்ண கோலங்கள்
கோலம் என்பது தெய்வீக அருளை தரக்கூடியது. உகாதி பண்டிகை அன்று ஸ்பெசலாக வர்ணக் கோலமிடுவது சிறப்பு. பச்சரிசி மாவில் கோலமிட்டு வர்ண பூக்களால் அலங்கரிக்கலாம். அதன் நடுவில் கலசத்தை வைப்பது கூடுதல் அழகு தரும். பூஜை அறையின் நான்கு மூலைகளிலும் இதுபோல வர்ண கோலமிடலாம்.
நறுமண பூக்கள்
புது வருட தினத்தில் பூஜை அறையில் உள்ள படங்களுக்கு நறுமணம் மிக்க பூக்களால் அலங்கரிக்க வேண்டும். மல்லிகை, செவ்வந்தி மலர்களாலும், துளசி இலை கொண்டும் அலங்கரிக்கலாம். சந்தனம், பன்னீர் தெளிப்பதன் மூலம் பூஜை அறையில் நறுமணம் வீசும்.
இது போன்ற அலங்காரங்களை பூஜை அறையில் செய்வதன் மூலம் இல்லமே இறைத்தன்மை நிறைந்ததாக திகழும்.



Click it and Unblock the Notifications











