Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
மூங்கில் செடியை எப்படி பாத்துக்கலாம்!!!

மூங்கில் செடியை எப்படி பாதுகாக்கலாம்?
மூங்கில் செடிக்கு முக்கியமே தண்ணீர் தான். மூங்கில் செடி ஈரப்பதமான சூழலில் நன்கு செழிப்போடு, அதிலும் களிமண்ணில் வளரும். அப்படி களிமண்ணில் மூங்கில் செடியை வைக்கும் முன், தண்ணீரை முன்பே ஊற்றி வைத்துவிட வேண்டும். ஏனென்றால் களிமண் போதிய நீரை மட்டுமே உறிஞ்சும். அப்படி அந்த மண்ணில் செடியை வைத்தப் பின் சுற்றி செங்கற்களை வைக்க வேண்டும். இதனால் நீரானது வெளியில் செல்லாமல் மூங்கில் வளர்வதற்கு ஏற்றவாறு இருக்கும்.
வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் மூங்கில் செடியை சாப்பிடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதில் டாக்ஸிக் ஆசிட் இருக்கிறது, இது விஷதன்மை வாய்ந்தது. இதனால் செல்லப்பிராணிகளை அதற்கு எட்டும் வகையில் வைக்காதீர்கள்.
மூங்கில் செடியை எப்போதும் தண்ணீரிலேயே வையுங்கள். தினமும் அதற்கு தண்ணீர் மாற்றுங்கள். தண்ணீரானது மூங்கிலின் அடியிலிருந்து 1 இன்ச் மேல் வரை இருக்க வேண்டும்.
சிறிய மூங்கில் செடியாய் இருந்தால் நேரடியாக சூரிய ஒளியானது செடியில் படாமல் வைத்திருக்க வேண்டும். அதுவே அதன் வளர்ச்சிக்கு நல்லது.
மூங்கில் செடி ஒரு அடிக்கு மேல் வளர்ந்திருந்தால், அப்போது தினமும் அதன் மேல் 30 45 நிமிடம் சூரிய ஒளி படுமாறு வைக்கலாம்.
மேலும் மாதத்திற்கு ஒரு முறை உரம் போட வேண்டும். ஏனென்றால் அது எப்போதும் நீரில் இருப்பதால் அதை பாக்டீரியா தாக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே மறக்காமல் உரம் போட வேண்டும்.
சில சமயங்களில் மூங்கில் இலையானது மஞ்சள் நிறத்தில் மாறும். அப்படி அது மாறுகிறதென்றால், அது அளவுக்கு அதிகமாக சூரிய ஒளியில் இருப்பதாலும், தண்ணீர் சுத்தமாக இல்லாததாலுமே அதன் நிறம் மாறுகிறது. ஆகவே கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
மேற்சொன்னவாறு பின்பற்றி பாருங்கள், மூங்கில் செடி நன்கு செழிப்போடு நீண்ட நாட்கள் இருக்கும்.



Click it and Unblock the Notifications











