Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
குளிர்சாதன பெட்டியில் ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பு வைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
மழைக்காலம் என்றாலே அனைவருக்கும் குதூகலம்தான். மழைக்காலம் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் அளிக்கும் அதே நேரத்தில் சில ஆரோக்கிய பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது. மழைக்காலம் பல தொற்றுநோய்கள் பரவும் காலமாக இருக்கிறது. இது மட்டுமின்றி, மழைக்காலத்தில் வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பதால், நாம் வீட்டில் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களும் சேதமடையக்கூடும்.
குறிப்பாக, குளிர்சாதன பெட்டியின் உள்ளே ஈரப்பதமும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் விரைவாக கெட்டுப்போகத் தொடங்குகின்றன. இந்த பிரச்சனையை தவிர்க்க, ஒரு கிண்ணம் உப்பு போதும். உப்பு எப்படி உங்கள் குளிர்சாதனப் பெட்டியைப் பாதுகாக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மழைக்காலத்தில் குளிர்சாதன பெட்டியில் என்ன நடக்கும்?
மழைக்காலம் தொடங்கியதும், சுற்றுச்சூழலில் ஈரப்பதமும் அதிகரிக்கிறது, இதனால் பல பொருட்கள் கெட்டுப்போகத் தொடங்குகின்றன. குறிப்பாக, குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் காய்கறிகள் ஈரப்பதம் காரணமாக விரைவாக கெட்டுப்போகத் தொடங்குகின்றன. காய்கறிகள் கெட்டுப்போகத் தொடங்கினால், அவை துர்நாற்றம் வீசத் தொடங்குகின்றன. காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்களும் கெட்டுப்போகத் தொடங்குகின்றன. குறிப்பாக சர்க்கரை எளிதில் ஈரப்பதம் அடைகிறது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகுவது குளிர்சாதன பெட்டிகள் துர்நாற்றம் வீசுவதற்கு வழிவகுக்கும். இது குளிர்சாதன பெட்டியின் கதவைத் திறக்கவோ அல்லது அதில் எதையும் வைக்கவோ நீங்கள் விரும்பாத அளவுக்கு அது மோசமாகலாம்.
உப்பு எப்படி பயன்படும்?
உப்பு நம் அன்றாட உணவின் ஒரு தவிர்க்க முடியாத பொருளாகும். உப்பை நாம் எப்போதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த்திருக்க மாட்டோம். ஆனால் எப்போதாவது குளிர்சாதன பெட்டியில் உப்பை வைக்க முயற்சித்திருக்கிறீர்களா? உங்கள் குளிர்சாதன பெட்டியை மழைக்காலத்தில் பாதுகாக்க ஒரு கிண்ணம் நிறைய உப்பை அதில் வைக்கவும். குளிர்சாதன பெட்டியில் உப்பு வைத்திருப்பது அதை எப்படி பாதுகாக்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
நீங்கள் குளிர்சாதன பெட்டியை அடிக்கடி திறக்கும்போது, உள்ளே இருக்கும் காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவு ஆகியவை உள்ளே ஈரப்பதத்தை அதிகரிக்க வழிவகுக்கும். ஈரப்பதம் அதிகரிக்கும் போது, அனைத்து உணவுப் பொருட்களும் விரைவாக அழுக ஆரம்பிக்கும். இதனால் காய்கறிளில் ஈரப்பதம் காரணமாக பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பு உருவாகிறது.
உப்பு இயற்கையாகவே ஈரப்பதத்தை உறிஞ்சுவதால், ஒரு கிண்ணத்தில் உப்பை வைப்பதன் மூலம், அது குளிர்சாதன பெட்டியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால், குளிர்சாதன பெட்டியின் உள்ளே இருக்கும் ஈரப்பதம் குறைந்து, அதை உலர்ந்ததாகவும், சுத்தமாகவும் மாற்றும்.
குளிர்சாதன பெட்டியில் உப்பு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
குளிர்சாதன பெட்டியில் உப்பு வைக்கும்போது, ஈரப்பதத்தால் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கும். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் பழங்கள், காய்கறிகள், சமைத்த உணவு, பால், தயிர், வெண்ணெய் போன்றவை வாயுக்களை வெளியிடத் தொடங்குகின்றன, இதன் காரணமாக குளிர்சாதன பெட்டி துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், குளிர்சாதன பெட்டியின் எந்தப் பகுதியிலும் ஒரு கிண்ணம் உப்பை வைக்கவும். அது ஈரப்பதத்தையும் வாசனையையும் உறிஞ்சும்.
உப்பை எப்படி வைக்க வேண்டும்?
நீங்கள் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கையளவு உப்பைப் போட்டு குளிர்சாதன பெட்டியின் எந்தப் பகுதியிலும் வைக்கலாம் . தூள் உப்பை விட கல் உப்பாக இருந்தால் அது கூடுதல் நல்லது. 5 நாட்களுக்குப் பிறகு, அந்த உப்பை மாற்றி விட்டு புதிய உப்பை வைக்கவும். ஈரப்பதம் மற்றும் வாசனையை உறிஞ்சிய பிறகு, உப்பின் பண்புகள் பயனற்றதாகிவிடும்.



Click it and Unblock the Notifications
