Latest Updates
-
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்..
டெய்லி 'இத்தனை' மணி நேரத்திற்கு மேல உட்கார்ந்து இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கிறதாம்!
இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையை கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்து செய்யும் வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஆபத்தான சுகாதார நிலைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், உங்கள் உடல் செயல்பாடுகள் குறையத்தொடங்கும். இது அதிகரித்த உடல் பருமன், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் ஓரிடத்தில் அதிக நேரம் அமர்ந்திருக்கும்போது, மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், இரத்த உறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. விமானம், கார், பேருந்து அல்லது ரயில் உட்பட வாகனத்தில் நான்கு மணிநேரத்திற்கு மேல் செலவழிக்கும் எந்தவொரு பயணியும், இரத்தக் கட்டிகளுக்கு அல்லது ஆழமான நரம்பு இரத்த உறைவுக்கு (DVT) ஆளாக நேரிடலாம்.
த்ரோம்போசிஸ்
த்ரோம்போசிஸ் என்பது இரத்த உறைவு என்று அழைக்கப்படுகிறது. விமானம், ஆட்டோமொபைல், பஸ் அல்லது ரயிலில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்பவர்களுக்கு இரத்த உறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. பயணத்தின் போது இது உங்கள் கால்களின் நரம்புகளில் உருவாகலாம். ஏனெனில் நீங்கள் நீண்ட நேரம் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருப்பீர்கள்.
இருப்பினும், இரத்தக் கட்டியின் ஒரு பகுதி உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் போது ஒரு தீவிரமான சுகாதார நிலையை ஏற்படுத்தலாம். இது நுரையீரலில் பல்மோனரி எம்போலிசம் பாதிப்பை ஏற்படுத்தலாம். பல்மோனரி எம்போலிசம் என்பது நுரையீரலில் உள்ள தமனிக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் மற்றும் நிறுத்தும் ஒரு இரத்த உறைவு ஆகும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரத்த உறைவு காலில் ஒரு ஆழமான நரம்பு பகுதியில் தொடங்கி நுரையீரலுக்கு செல்கிறது. அரிதாக, உடலின் மற்றொரு பகுதியில் ஒரு நரம்பில் உறைவு உருவாகிறது. இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது.
நல்ல செய்தி என்னவென்றால், பயணத்தின் போது நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் சமயங்களில் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், இரத்த உறைவு அபாயத்தைக் குறைக்கவும் நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ள்ளுங்கள்.
ஆபத்து காரணிகள்
சில உடல்நல காரணிகள் இரத்த உறைவுக்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்கலாம். பெரும்பாலான மக்களுக்கு இரத்தக் கட்டிகளை உருவாக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்து காரணிகள் உள்ளன. அவை என்னென்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- உடல் பருமன்
- முதுமை (40 வயதிற்குப் பிறகு ஆபத்து அதிகரிக்கிறது)
- சமீபத்திய அறுவை சிகிச்சை அல்லது காயம் (3 மாதங்களுக்குள்)
- ஈஸ்ட்ரோஜன் கொண்ட கருத்தடைகளைப் பயன்படுத்துதல்.
- ஹார்மோன் மாற்று சிகிச்சை (மாதவிடாய் நிறுத்தத்தின் விளைவுகளை குறைக்க ஹார்மோன்கள் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை)
- கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலம் (பிரசவத்திற்குப் பிறகு 3 மாதங்கள் வரை)
- முந்தைய இரத்த உறைவு அல்லது இரத்தக் கட்டிகளின் குடும்ப வரலாறு
- செயலில் உள்ள புற்றுநோய் அல்லது சமீபத்திய புற்றுநோய் சிகிச்சை
- வீங்கிய மற்றும் வலிக்கிற நரம்புகள்
அறிகுறிகளை அறிதல்
ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT) என்பது ஒரு ஆழமான நரம்பில் இரத்த உறைவு உருவாகும்போது ஏற்படும் ஒரு சுகாதார நிலை. இந்த கட்டிகள் பொதுவாக கீழ் கால், தொடை அல்லது இடுப்பு பகுதியில் உருவாகின்றன. சில சமயங்களில் அவை கைகளிலும் ஏற்படலாம்.
இந்த பிரச்சனை உள்ளவர்களில் 50% பேருக்கு எந்த அறிகுறிகளும் ஏற்படுவதில்லை. உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் (கால்/கை/நுரையீரல்) ஏற்படும் இரத்தக் கட்டிகளின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு.
- கால் அல்லது கை வீக்கம்
- நீங்கள் விளக்க முடியாத வலி அல்லது மென்மை
- மூச்சுத்திணறல் ஏற்படுவது
எவ்வாறு பாதுகாப்பது
உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் உட்கார்ந்திருக்கும் நேரங்களில் இரத்த உறைவு ஏற்படும் அபாயத்தை எவ்வாறு குறைப்பது என்று நீங்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நீண்ட நேர பயணங்களின்போது உங்கள் கால்களை அடிக்கடி நகர்த்தவும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உங்கள் தசைகளுக்கு உடற்பயிற்சி செய்யவும் வேண்டும்.
நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், உங்கள் கால்களை நீட்டி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒரு முழங்காலை மார்பை நோக்கி இழுத்து, 15 விநாடிகள் உங்கள் கீழ் காலில் கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் நேரங்களில் இதை 10 முறை வரை மீண்டும் செய்வது உங்கள் கால்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
நீங்கள் ஆபத்தில் இருந்தால், இரத்தக் கட்டிகளை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். உதாரணமாக, சுருக்க காலுறைகளை அணிவது சிலருக்கு உதவக்கூடும். தினமும் 30 நிமிடம் குறைந்தபட்ச உடல் செயல்பாடுகளை செய்வது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












