Latest Updates
-
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்!
ஓமிக்ரான் உங்களுக்கு வரக்கூடாதா? அப்ப இனிமேல் இத ஃபாலோ பண்ணுங்க...
ஓமிக்ரானை எதிர்த்துப் போராடும் அளவில் நோயெதிர்ப்பு சக்தியைப் பெற ஒருவர் தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகமும் கொரோனா என்னு வைரஸ் தாக்கத்தால் பேரழிவை சந்தித்து வருகிறது. என்ன தான் இந்த வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு கொரோனாவின் டெல்டா மாறுபாடு இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்தி குறுகிய காலத்தில் பல உயிர்களைப் பறித்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மனதில் மீண்டும் அச்சம் அதிகரிக்கிறது.

எதுவாயினும், ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால், எப்பேற்பட்ட வைரஸையும் எதிர்த்துப் போராடலாம். இந்த ஓமிக்ரான் மாறுபாடும் கொரோனாவைப் போன்றே காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல், மூக்கு ஒழுகல் மற்றும் தொண்டைப் புண் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆகவே ஓமிக்ரானை எதிர்த்துப் போராடும் அளவில் நோயெதிர்ப்பு சக்தியைப் பெற ஒருவர் தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். இதைப் பின்பற்றினால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ளலாம்.

பழக்கம் #1
கோவிட்-19 வைரஸ் அல்லது ஓமிக்ரான் மாறுபாட்டின் தாக்கத்தைத் தடுக்க ஒருவர் முதலில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பழக்கம் என்னவென்றால், அது தினமும் நீரை நன்கு கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நிலையில் குடிப்பது தான்.

பழக்கம் #2
ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை எப்போதுமே வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள நெல்லிக்காய் ஜூஸ், கற்றாழை ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்க வேண்டும்.

பழக்கம் #3
தினமும் வழக்கமாக குடிக்கும் நீரில் சிறிது துளசி சாற்றினை அல்லது துளசி இலைகளைப் போட்டு குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, எப்போதும் வலிமையாக இருக்கும். இதனால் எப்பேற்பட்ட வைரஸ் அல்லது பாக்டீரியாவும் அவ்வளவு எளிதில் உடலினுள் சென்று உயிர் வாழ முடியாது.

பழக்கம் #4
நாம் அன்றாட சமையலில் சேர்க்கும் ஓர் மசாலா பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் ஆன்டி-வைரல் போன்று செயல்பட்டு, நோய்த்தொற்றில் இருந்து உடலைப் பாதுகாக்கும். இத்தகைய மஞ்சளை அன்றாட உணவில் சேர்ப்பதோடு, தினமும் வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வாருங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்.

பழக்கம் #5
பழங்காலம் முதலாக நமது உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால், நம் அம்மாக்கள் அல்லது பாட்டிமார்கள் செய்து தரும் ஓர் பானம் தான் கசாயம். அதுவும் கொரோனா பரவ ஆரம்பித்த காலத்தில், நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர், இஞ்சி மஞ்சள் கிராம்பு கசாயம் என பலவிதமான கசாயங்களை தயாரித்து குடித்து வந்தோம். அதை ஓமிக்ரான் பரவும் காலத்திலும் தவறாமல் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ளலாம்.

பழக்கம் #6
5 துளசி இலைகள், 4 மிளகு, 3 கிராம்பு, ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றை 1 டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

பழக்கம் #7
நீங்கள் ஒரு டீ பிரியராக இருந்தால், ஓமிக்ரான் பரவும் இக்காலத்தில் தினமும் பால் டீ குடிப்பதற்கு பதிலாக, எலுமிச்சை பாதியை வெட்டி, 2 டம்ளர் நீரில் போட்டு, அத்துடன் 2 கிராம்பு, சிறிது இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பழக்கம் #8
நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது. குறிப்பாக சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், சுவாச பிரச்சனைகளைத் தடுக்கலாம். அதற்கு வேப்பிலைகள், குக்குலு, பிசின், தேவதாரு மற்றும் 2 கற்பூரங்களை ஒன்றாக வைத்து எரித்து, அந்த புகையை வீடு முழுவதும் பரப்புங்கள். இதனால் காற்றில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிந்துவிடும்.



Click it and Unblock the Notifications