Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
நீங்க துணி மாஸ்க் யூஸ் பண்றீங்களா? அப்ப கட்டாயம் இத படிங்க...
புதிய ஆராய்ச்சியின் படி, பல பிறழ்வுகளைக் கொண்ட மற்றும் வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரானை, துணி மாஸ்க் அணிவதன் மூலம் தடுக்க முடியாது. ஏனெனில் துணி மாஸ்க் பாதுகாப்பைத் தவிர்க்கக்கூடிய சிறிய துகள்களைக் கொண்டிருக்கலாம்.
நாம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸுடன் போராடி வருகிறோம். இந்த வைரஸும் இதுவரை பலவாறு உருமாற்றமடைந்துள்ளது. அதில் தற்போது உருமாற்றமடைந்துள்ள வைரஸ் விகாரம் தான் ஓமிக்ரான். இது மிகவும் வேகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் இது அனைத்து வயதினரையும் எளிதில் தொற்றக்கூடியதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க மாஸ்க்குகளை அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

மாஸ்க்குகளைப் பற்றி கூற வேண்டுமானால், பெரும்பாலான மக்கள் துணி மாஸ்க்குகளைத் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த துணி மாஸ்க்குகள் கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாக்காது என்று பல சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் புதிய ஆராய்ச்சியின் படி, பல பிறழ்வுகளைக் கொண்ட மற்றும் வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரானை, துணி மாஸ்க் அணிவதன் மூலம் தடுக்க முடியாது. ஏனெனில் துணி மாஸ்க் பாதுகாப்பைத் தவிர்க்கக்கூடிய சிறிய துகள்களைக் கொண்டிருக்கலாம்.

துணி மாஸ்க் ஏன் பாதுகாப்பற்றவை?
பெரும்பாலான மக்கள் துணி மாஸ்க்குகளையே அணிய விரும்புகிறார்கள். ஏனெனில் அவை வசதியானவை. இருப்பினும், சுகாதார நிபுணர்கள் சர்ஜிக்கல் மாஸ்க் வடிவத்தைக் கொண்ட துணி மாஸ்க்குகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். மேலும் ஒற்றை அடுக்கு கொண்ட துணி மாஸ்க்குகள் பெரிய நீர்த்துளிகளைத் தடுக்கலாமே தவிர, சிறிய நீர்த்துளிகள் அவற்றால் தடுக்கப்படுவதில்லை. அதுவும் கொரோனா மாறுபாடு மிகவும் வேகமாக பரவக்கூடியதாக இருந்தால், துணி மாஸ்க் அல்லது சர்ஜிக்கல் மாஸ்க் இரண்டுமே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.
உங்களுக்கு ஓமிக்ரைனில் இருந்து சரியான பாதுகாப்பு வேண்டுமானால், துணி மாஸ்க்கை அணிய வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் தொற்றை உண்டாக்கும் சிறிய நீர்த்துளிகள், துணியின் பெரிய துளைகள் வழியாக நுழைந்து தொற்றை உண்டாக்கலாம்.
நீங்கள் அணியும் மாஸ்க்குகளைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

துணி மாஸ்க்
துணி மாஸ்க்கின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அதை ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியும் மாஸ்க்குகளைப் போலின்றி, துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். இந்த மாஸ்க் மற்றவர்களுடன் பேசும் போது மற்றும் மூடிய இடத்தில் ஒருவருடன் நேரத்தை செலவிடும் போது, அவர்களின் நீர்த்துளிகள் மேலே படாமல் இருக்க துணி மாஸ்க்கைப் பயன்படுத்த வேண்டும்.

சர்ஜிக்கல் மாஸ்க்
சர்ஜிக்கல்/அறுவை சிகிச்சை மாஸ்க்குகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இவை ஒரு தளர்வான மற்றும் பொருத்தமான பாதுகாப்பு சாதனமாகும். இந்த மாஸ்க்கானது அணிபவரின் உதடுகள் மற்றும் மூக்குக்கு இடையே ஒரு தடையை உருவாக்குகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் சூழலில் இருந்து உடனடி பாதுகாப்பளிக்கிறது.

துணி மற்றும் சர்ஜிக்கல்
சர்ஜிக்கல் மாஸ்க்குகள் பொருட்களை நன்கு வடிகட்டக்கூடிய ஒரு பொருளால் ஆனது. ஆனால் அவை மெலிதாக இருக்கும். எனவே அதன் மேல் ஒரு காட்டன் மாஸ்க்கை வைப்பது, கசிவைத் தடுக்கிறது. இரண்டாவது அடுக்கை சேர்ப்பது வடிகட்டலை அதிகரிக்கிறது. இதில் ஒரு அடுக்கு 50% துகள்களை வடிகட்டினால், இரண்டாவது அடுக்கு அதோ இணைத்து 75% துகள்களை வடிகட்டுகின்றன.

N-95
அமெரிக்க மாநாட்டின் அரசாங்க தொழில்துறை சுகாதார நிபுணர்களின் படி, நோய்வாய்ப்பட்ட நபர் மாஸ்க் அணியவில்லை என்றால், தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கு குறைந்தது 2.5 மணிநேரம் ஆகும். ஆனால் இருவரும் N-95 முகமூடிகளை அணிந்திருந்தால், வைரஸ் பரவுவதற்கு 25 மணிநேரம் ஆகும்.

WHO வழிகாட்டுதல்களின் படி மாஸ்க் எவ்வாறு அணிய வேண்டும்?
* உங்கள் மாஸ்க்கை அணியும் முன்பும், அகற்றுவதற்கும் முன்பும் பின்பும் மற்றும் ஒவ்வொரு முறை மாஸ்க்கை தொடர்பு கொள்ளும் போதும் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* நீங்கள் அணியும் மாஸ்க் மூக்கு, வாய் மற்றும் தாடை ஆணிய பகுதிகளை நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும்.
* மாஸ்க்கை அகற்றும் போது, அதை ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பையில் வைக்க வேண்டும். அதுவே துணி மாஸ்க் என்றால் தினமும் அதை துவைக்க வேண்டும். ஒருவேளை சர்ஜிக்கல் மாஸ்க்காக இருந்தால், அதை தூக்கி எறிய வேண்டும்.
* வால்வுகளைக் கொண்ட மாஸ்க்குகளைப் பயன்படுத்தக்கூடாது.

நினைவில் கொள்ள வேண்டியவை:
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பது, மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது மற்றும் இருமலின் போது முழங்கை அல்லது டிஸ்வைப் பயன்படுத்துவது போன்ற எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். முடிந்தவரை, வெளியே அதிகம் சுற்றாமல் வீட்டிலே இருக்க முயலுங்கள்.



Click it and Unblock the Notifications