Just In
- 3 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 4 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 4 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 5 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்களிடம் இருந்த அறிகுறிகள் தெரிந்தா...உடனே நீங்க வேலையிலிருந்து பிரேக் எடுக்கணுமாம்...ஏன் தெரியுமா?
உங்கள் உணர்ச்சிகளை அடக்கி, அவற்றை அழுத்தினால், குமட்டல், சோர்வு, வலிகள் மற்றும் தலைவலி போன்ற உடல் அறிகுறிகளை நீங்கள் அடிக்கடி அனுபவிக்கலாம். குறிப்பாக நீங்கள் காலையில் எழுந்திருக்கும் போது (குறிப்பாக வேலை நாட்களில்) இந்த
ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். இது உங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறப்பாக உணர வைக்கும். ஆனால், பெரும்பாலும் பலர் விடுமுறை நாட்களில் கூட வேலை செய்கிறார்கள். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 2018 அறிக்கையின்படி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் விடுமுறை நாட்களைக் கூட எடுப்பதில்லை. ஏறக்குறைய 75 சதவீத இந்தியர்கள் விடுமுறையை இழந்துவிட்டதாக உணர்கிறார்கள், இதுவே உலகிலேயே அதிக விகிதமாகும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திலும், குடும்ப ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க, உங்கள் வேலை, உங்கள் வழக்கம் மற்றும் வாழ்க்கையின் தேவைகள் ஆகியவற்றிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும்.
நீங்கள் விடுமுறைக்கு திட்டமிட்டாலும், தங்குவதற்கு அல்லது உங்கள் சொந்த வீட்டில் வசதியாக சில நாட்கள் இருக்க வேண்டும். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் நீங்கள் முழுவதுமாக பாதிக்கப்படும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக வேலையிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஒரு சில நாட்களுக்கு கூட விலகிச் செல்வது கடினமாக இருக்கலாம். ஆனால், அது நீண்ட காலத்திற்கு உங்கள் நலனை பாதுகாக்கும்.
குமட்டல் அல்லது பயமாக உணர்கிறீர்கள்
உங்கள் உணர்ச்சிகளை அடக்கி, அவற்றை அழுத்தினால், குமட்டல், சோர்வு, வலிகள் மற்றும் தலைவலி போன்ற உடல் அறிகுறிகளை நீங்கள் அடிக்கடி அனுபவிக்கலாம். குறிப்பாக நீங்கள் காலையில் எழுந்திருக்கும் போது (குறிப்பாக வேலை நாட்களில்) இந்த அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும். கூடுதலாக, மனம் உடலை பெரிதும் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் உடல் நலனை கடுமையாக பாதிக்கும். இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், சிறிது நாட்கள் வேலையிலிருந்து ஒய்வு எடுக்க வேண்டும்.
ஆரோக்கியத்தின் தரம் மோசமடைவது
தூக்கமின்மை, அதிக ஓய்வெடுக்கும் இதயத்துடிப்பு, தலைவலி, எடை அதிகரிப்பு அல்லது இழப்பு அல்லது அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கும் போது உங்களுக்கு மிகவும் தகுதியான இடைவெளி தேவைப்படும். அவை இப்போதைக்கு முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால் அவை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். ஆதலால், சிறிது நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியது அவசியம்.
என்ன நடக்கும்?
போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவு உண்ணுதல் மற்றும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்பாடுகளை அனுபவித்த பிறகு நீங்கள் எவ்வளவு நன்றாக உணர்கிறீர்கள் என்று நீங்களே ஆச்சரியப்படலாம். நீங்கள் ஒரு மனநல நாளை எடுத்துக் கொண்டாலும், நீங்கள் எவ்வளவு நன்றாக உணர்கிறீர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
உங்களுக்கு ஊக்கம் இல்லை
நிபுணர்களின் கூற்றுப்படி, வேலையில் சோர்வு மற்றும் மனச்சோர்வு போன்ற பல அறிகுறிகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அதாவது உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சோர்வடைவது, சிறிய பிரச்சனைகளால் எளிதில் எரிச்சல் அடைவது, தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது மற்றும் குறைவாக மதிப்பிடப்பட்டது. இதன் விளைவாக, நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், நீங்கள் ஊக்கத்தையும் இழக்கிறீர்கள். இது உங்கள் உற்பத்தித்திறனுக்கும் தீங்கு விளைவிக்கும். நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்திருக்க சிரமப்பட்டால், வேலை தொடர்பான எதையும் செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் புத்துணர்ச்சியுடனும் ஊக்கத்துடனும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் உடலையும் மனதையும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய சிறிது நாட்கள் ஓய்வெடுப்பது சிறந்தது.
நீங்கள் கவனம் செலுத்துவது கடினம்
உங்களின் வேலை நாள் பகல் கனவு காண்பதா, பேஸ்புக் இல் நண்பர்களுடன் செக்-இன் செய்வதா அல்லது இன்ஸ்டாகிராம் வழியாக ஸ்க்ரோலிங் செய்வதா? பிறகு, நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்தவில்லை என்றால், நீங்கள் பணியிடத்தை விட்டு சற்று விலகி இருக்க வேண்டும். நிச்சயமாக, வேலையில் கவனம் இல்லாதது வழக்கமானது. ஆனால் அலுவலகத்தில் அதிக நேரம் எடுக்கும் போது, உங்கள் இலக்குகளை மறுமதிப்பீடு செய்ய ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் இது.
சக ஊழியர்களுடன் சகஜமாக பேசுங்கள்
ஒரு சராசரி நபர் ஒரு வாரத்திற்கு 47 மணிநேரம் வேலையில் செலவிடுகிறார். இது வாழ்நாளில் 109,980 மணிநேரம் ஆகும். நிச்சயமாக, நீங்கள் உங்கள் சக ஊழியர்களுடன் நிறைய நேரம் செலவிடுவீர்கள். மதிய உணவுகள், கூட்டங்கள், அலுவலக விருந்துகள் போன்றவற்றில் கலந்துகொள்வது பொதுவானது. இருப்பினும், வேலையில் நண்பர்களைக் கொண்டிருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனெனில் உங்களுக்கு நண்பர்கள் இருக்கும்போது வேலை மிகவும் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும், திருப்திகரமாகவும் இருக்கும். அதேபோல், உங்கள் உடலுக்கும் மனதுக்கும் தேவைப்படும்போது, ஓய்வு கொடுங்கள்.