Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் கொரோனாவின் புதிய மாறுபாடு - அதன் அறிகுறிகள் என்ன?
இந்த ஆண்டு மே மாதம் தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் புதிய C.1.2 திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் என்பதுடன், ஒரு வருடத்திற்கு 41.8 பிறழ்வுகளை உருவாக்கும் திறன் கொண்டது.
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரஸின் பிடியில் சிக்கி இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் தோன்றியது முதல் தற்போது வரை பலவாறு உருமாற்றமடைந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மே மாதம் தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் புதிய C.1.2 திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தற்போதுள்ள டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் என்பதுடன், ஒரு வருடத்திற்கு 41.8 பிறழ்வுகளை உருவாக்கும் திறன் கொண்டது. மொத்தத்தில் தற்போதைய உலகளாவிய விகிதத்தை விட தோராயமாக 1.7 மடங்கு வேகமானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த புதிய கொரோனா திரிபு மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. ஆனால் இந்த உருமாற்றமடைந்த விகாரத்தால் ஏற்பட்ட எந்த ஒரு வழக்கும் இந்தியாவில் இதுவரை இல்லை.

C.1.2 மாறுபாடு என்றால் என்ன?
2021 ஆம் ஆண்டு மே மாதம் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட C.1.2 மாறுபாடு, கொரோனாவின் C.1-இலிருந்து உருவானது. C.1 என்பது தென்னாப்பிரிக்காவில் SARS-CoV-2 நோய்த்தொற்றின் முதல் அலையில் ஆதிக்கம் செலுத்திய கொரோனாவின் பரம்பரைகளில் ஒன்றாகும்.

இதுவரை எந்த நாடுகளில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
தென்னாப்பிரிக்காவில் உள்ள தேசிய தொற்றுநோய்களுக்கான நிறுவனம் (NICD) மற்றும் குவாசுலு-நேடல் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு மற்றும் வரிசைத் தளம் (கேஆர்ஐஎஸ்பி) ஆகியவற்றில் உள்ள விஞ்ஞானிகளால் இந்த ஆண்டு மே மாதத்தில் முதன்முதலில் எமுமாலங்கா மற்றும் கவுடெங் மாகாணங்களில் கவலைக்குரிய மாறுபாடான C.1.2 கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான மாகாணங்களில் பரவியுள்ளது. C.1.2 மாறுபாடு சீனா, காங்கோ ஜனநாயக குடியரசு, மொரிஷியஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்த ஆராய்ச்சி இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.

இந்த புதிய மாறுபாடு எவ்வளவு ஆபத்தானது?
முந்தைய மாறுபாடுகளுடன் ஒப்பிடும் போது, C.1.2 மாறுபாடு மிகவும் கொடியது. இது அதிகரித்த பரிமாற்றம் மற்றும் குறைவான நடுநிலை உணர்திறனுடன் தொடர்புடையது. ஒரு ஆராய்ச்சியாளர் இந்த புதிய மாறுபாடு 'கணிசமாக மாற்றப்பட்டுள்ளது' என்றும், வுஹானில் கண்டுபிடிக்கப்பட்ட அசல் வைரஸை விட இது மோசமானது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வேறு உருமாற்றத்தையும் விட முன்னோக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

இது எவ்வளவு வேகமாக உருமாறுகிறது?
ஆய்வின் படி, C.1.2 ஒவ்வொரு ஆண்டும் 41.8 பிறழ்வுகளைக் கொண்டிருக்கலாம். இது தற்போராய உலகளாவிய விகிதத்தை விட சுமார் 1.7 மடங்கு வேகமானது மற்றும் SARS-CoV-2 பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப மதிப்பீட்டை விட 1.8 மடங்கு வேகமாக உள்ளது. ஆல்பா, பீட்டா மற்றும் காமா போன்ற பிற வைரஸ்கள் இதேப்போன்று குறுகிய கால பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அறிகுறிகள் என்ன?
இந்த புதிய மாறுபாட்டின் புதிய அறிகுறிகள் என்ன என்பதை வல்லுநர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அனைத்து கோவிட்-19 வகைகளிலும் பொதுவான அறிகுறிகள் என்றால் மூக்கு ஒழுகுதல், தொடர் இருமல், தொண்டை வலி, உடல் வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, காய்ச்சல், தசைப்பிடிப்பு, சிவந்த கண்கள், வயிற்றுப்போக்கு ஆகியவை.

இது இந்தியாவிற்கு பரவியுள்ளதா?
கொரோனாவின் C.1.2 வகையை இந்தியா இன்று வரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் டெல்டா வகையின் புதிய துணை வரிசை AY.12 ஐக் கண்டறிந்துள்ளது. இந்திய SARS-CoV-2 மரபியல் கூட்டமைப்பின் (INSACOG) சமீபத்திய அறிக்கையின் படி, டெல்டா என வகைப்படுத்தப்பட்ட பல வழக்குகள் இப்போது AY.12 என மறுவகைப்படுத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications