Latest Updates
-
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21?
காபி பிரியரா நீங்கள்? காபி குடிக்கும் போது செய்யும் இத்தவறுகள் ஆயுளை குறைக்கும் தெரியுமா?
நீங்கள் உங்களுக்கு பிடித்த காபியைத் தயாரிப்பதில் சிறந்தவராக இருக்கலாம். ஆனால் காபி குடிப்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அது மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
பலருக்கும் காலையில் எழுந்ததும் ஒரு கப் காபியைக் குடித்தால் தான் படுக்கையில் இருந்தே எழ முடியும். அந்த அளவில் காபி அவர்களுக்கு மிகவும் பிடித்த பானமாக இருக்கும். காபி குடிப்பது குறித்து பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. அறிவியலின் படி, காபி குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். அதே நேரம், அது நமது உடலில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டது என்பதையும் மறுக்க முடியாது.

காபியானது மனநிலை, செறிவு நிலை மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் காபியானது ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு நன்மைகளையும் வழங்குகின்றன. இதனால் பல்வேறு நாள்பட்ட நோய்களின் அபாயம் குறைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு குடிக்கும் காபியை சரியாக காய்ச்சினனால் மட்டுமே, இந்த ஆரோக்கிய நன்மைகள் அனைத்தையும் பெற முடியும்.
நீங்கள் உங்களுக்கு பிடித்த காபியைத் தயாரிப்பதில் சிறந்தவராக இருக்கலாம். ஆனால் காபி குடிப்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அது மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடும். இப்போது காபி குடிப்பதில் செய்யும் சில தவறுகளைக் காண்போம்.

காபி மூளைக்கு எவ்வளவு பயனுள்ளது?
காபியில் காப்ஃபைன் உள்ளது. இது அடினோசின் ஏற்பிகளுடன் தொடர்பு கொள்வதால், மத்திய நரம்பு மண்டவத்தைப் பாதிக்கிறது. இந்த நரம்பு ஏற்பிகளுடன் காப்ஃபைன் பிணைக்கப்படும் போது, அது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிட்டு, விழிப்புணர்வுடன் இருக்க வைக்கிறது. அதனால் தான் காபி குடித்ததும், நாம் சற்று சுறுசுறுப்பானது போன்ற உணர்வைப் பெறுகிறோம். ஆய்வுகளானது, காப்ஃபைன் மூளையின் செயல்பாட்டை குறுகிய காலத்தில் அதிகரிப்பதாக கூறுகின்றன. மேலும் இது மனநிலை, கவனம், கற்றல் திறன் மற்றும் பிற மன செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன. ஆனால் காபி பிரியர்கள் செய்யும் ஒருசில தவறான விஷயங்களால் இந்த நன்மைகள் குறைக்கப்படுகின்றன. இப்போது அந்த தவறுகள் என்னவென்பதைக் காண்போம்.

அளவுக்கு அதிகமான காபி
காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்றாலும், ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் காபி குடிக்கக்கூடாது. ஒரு நாளில் 2 கப் காபியில் உள்ள 500 ml காப்ஃபைனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இதற்கு அதிகமாகும் போது தான் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

அதிக காபியால் சந்திக்கும் பிரச்சனைகள்
ஒருவர் காபியை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது அடிவயிற்று வலி, வலிப்பு, இரத்த அமில அளவு அதிகரிப்பது, வேகமான அல்லது முறையற்ற இதயத் துடிப்பு மற்றும் இதயத்திற்கு குறைவான இரத்த ஓட்டம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். காலப்போக்கில் இந்த காரணிகள் ஆயுளைக் குறைக்கும். அதோடு, இது அதிகப்படியான மனக்கவலை, தூக்கமின்மை மற்றும் எப்போதும் சோர்வுடன் இருப்பதை உணர வைக்கும்.

அதிகமான சர்க்கரை சேர்ப்பது
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் வெற்று கலோரிகள் மற்றும் ஜீரோ ஊட்டச்சத்துக்கள் மட்டுமே உள்ளன. நீங்கள் காபிக்கு அடிமையாகி, அதிகளவு சர்க்கரையை சேர்த்து குடித்தால், அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். பொதுவாக சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது ஆற்றல் செயலிழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே சர்க்கரையை அளவாக சேர்த்துக் குடிக்க முயற்சி செய்யுங்கள். முடிந்தால் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள். அதோடு பட்டைத் தூளையும் இனிப்பு சுவைக்கு சேர்த்துக் கொள்ளலாம்.

மதியம் 2 மணிக்கு மேல் காபி குடிப்பது
உலகிலேயே காபி மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். எப்போதெல்லாம் நாம் சோர்வாக அல்லது மந்தமாக உணர்கிறோமோ, அப்போது உடலுக்கு ஆற்றலை வழங்க ஒரு கப் காபி குடிப்போம். ஆனுல் காபியை மதிய உணவு உண்டதும் குடித்தால், அது தூக்கத்தைக் கெடுத்து, இரவு நேரத்தில் வெகுநேரம் விழித்திருக்க வைக்கும். இரவு நேரம் போதுமான தூக்கத்தைப் பெறாவிட்டால், அது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் மற்றும் மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும். எனவே நீங்கள் மதிய உணவிற்கு பின் காபி குடிக்க நினைத்தால், காப்ஃபைன் இல்லாத பானங்களைக் குடியுங்கள்.



Click it and Unblock the Notifications











