Just In
- 1 hr ago
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- 2 hrs ago
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- 3 hrs ago
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- 4 hrs ago
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
Don't Miss
- Technology
பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.! மிரளவைக்கும் விஞ்ஞானிகள்.!
- News
42 லட்சம் பேர் இணைக்கவில்லை.. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்னும் 3 நாட்களே கால அவகாசம்!
- Movies
தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பால் குடிக்கும் போது இந்த பொருட்களை தெரியாம கூட தொட்றாதீங்க... இல்லனா உங்கள் கதி அவ்வளவுதான்...!
மனித இனத்தின் இன்றியமையாத உணவாக பால் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. சிலர் பாலை சூடாகவோ அல்லது குளிராகவோ குடிக்க விரும்புகிறார்கள், சிலர் சாக்லேட் சேர்த்து குடிக்க விரும்புகிறார்கள், மேலும் சிலர் எடை அதிகரிப்பதற்காக வாழைப்பழத்துடன் குடிக்க விரும்புகிறார்கள். மக்கள் காலை அல்லது இரவில் தங்கள் உணவில் பால் சேர்த்துக்கொள்ள பல வழிகள் உள்ளன.
பால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிக நன்மைகளுக்காக நாம் பாலுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுகிறோம். துரதிர்ஷ்டவசமாக, சில பொருட்கள் பாலுடன் சேரும்போது பல ஆபத்துக்களை ஏற்படுத்தும் பொருளாக மாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மோசமான உணவு சேர்க்கைகள் வயிற்றுவலி, வீக்கம், சோர்வு, வாயு மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் நீண்ட காலத்திற்கு இந்த தவறான உணவு சேர்க்கைகளை உட்கொண்டால், அது பல நாள்பட்ட பிரச்சினைகள் ஏற்படுத்தும்.

மீன் மற்றும் பால்
பால் ஒரு குளிர்ச்சி விளைவைக் கொண்டிருக்கிறது, மறுபுறம், மீன் ஒரு வெப்பமூட்டும் விளைவைக் கொண்டுள்ளது. இந்த கலவையானது உடலில் ரசாயன மாற்றங்களுக்கு வழிவகுக்கும் ஒரு சமநிலையின்மையை உருவாக்குகிறது. மீன் மற்றும் அனைத்து வகையான இறைச்சியையும் பாலுடன் சாப்பிட வேண்டாம், ஏனெனில் இது செரிமான பிரச்சனைகள் மற்றும் எடையை அதிகரிக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வாழைப்பழம் மற்றும் பால்
பாலும் வாழைப்பழமும் ஆரோக்கியமான கலவையை உருவாக்குகின்றன என்று பல காலமாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பால் மற்றும் வாழைப்பழத்தின் கலவையானது கனமானது மற்றும் அது ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும், மேலும் இது உங்களை சோர்வாக உணர வைக்கும். னவே, ஆரோக்கியமான மற்றும் சீரான உணவின் ஒரு பகுதியாக இந்த இரண்டு சத்தான பொருட்களையும் தனித்தனியாக சாப்பிடலாம்.

முலாம்பழம் மற்றும் பால்
அதிக பழங்களுடன் எடுத்துக்கொள்ளப்படும் பால் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு தீங்கு விளைவிக்கும் கலவையாகும். நீங்கள் எப்போதும் மிகவும் ஆரோக்கியமான பாலுடன் ஒரு சூப்பர் ஆரோக்கியமான பழத்தை இணைக்கிறீர்கள் என்றால் அது முற்றிலும் தவறாகும். பால் ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது மற்றும் முலாம்பழம் டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே அவற்றைச் சேர்ப்பது செரிமானப் பிரச்சினைகள் மற்றும் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும், இது மேலும் வாந்தி அல்லது தளர்வான இயக்கங்களுக்கு வழிவகுக்கும்.

முள்ளங்கி மற்றும் பால்
பொதுவாக, முள்ளங்கி எந்த பெரிய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும், உணவை எடுத்துக்கொள்வதற்கு முன்பு அதை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் இதன் வெப்பமான தன்மை காரணமாக வயிற்றில் எரியும் உணர்வை ஏற்படுத்தும். ஆயுர்வேதத்தின்படி, முள்ளங்கி சாப்பிட்ட பிறகும் பால் சாப்பிடக் கூடாது, ஏனெனில் அது பொருந்தாத உணவுக் கலவையாகக் கருதப்படுகிறது. பாலும் முள்ளங்கியும் தனித்தனியாக சாப்பிட வேண்தீயவை, ஏனெனில் அவை செரிமான செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும். முள்ளங்கியில் செய்த பொருட்களை சாப்பிட்டு குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து பால் குடிக்கவும்.

சிட்ரஸ் பழங்கள் மற்றும் பால்
சிட்ரஸ் அல்லது அமிலப் பொருட்களை பாலுடன் கலக்க வேண்டாம். வைட்டமின் சி நிறைந்த பழங்களை கூட பாலுடன் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில், பால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும், மேலும் ஒருவர் பால் மற்றும் எலுமிச்சை அல்லது சிட்ரஸ் பழங்களை ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது, பால் உறைந்துவிடும். இது வாயு மற்றும் நெஞ்செரிச்சலை வரவழைக்கிறது மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது நெரிசல், சளி, இருமல், சொறி, மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றையும் ஏற்படுத்தலாம்.

தயிர் மற்றும் பால்
தயிரை பாலுடன் கலக்கக் கூடாது. ஆயுர்வேதத்தின்படி, புளிக்கவைக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் பாலுடன் கலக்கக்கூடாது, ஏனெனில் அது உடலின் சேனல்கள் அல்லது ஸ்ரோட்டாக்களை தடுக்கலாம் மற்றும் ஆயுர்வேதத்தின்படி தொற்றுகள், வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் உடல்நலக்குறைவு ஆகியவற்றைக் கூட விளைவிக்கலாம்.