உங்க வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கி ஆரோக்கியத்தை அதிகரிக்க இதில் ஒரு பானம் போதுமாம்...!

கோடை காலம் துவங்கிவிட்டால், நாம் அனைவரும் குறைவாக சாப்பிடவும், நிறைய குடிக்கவும் விரும்புகிறோம். அதிகப்படியான வியர்வை காரணமாக இது நிகழலாம், இது சோர்வை ஏற்படுத்துகிறது.

கோடை காலம் துவங்கிவிட்டால், நாம் அனைவரும் குறைவாக சாப்பிடவும், நிறைய குடிக்கவும் விரும்புகிறோம். அதிகப்படியான வியர்வை காரணமாக இது நிகழலாம், இது சோர்வை ஏற்படுத்துகிறது, மேலும் உங்கள் வயிற்றை நிரப்புவது மட்டுமின்றி வெப்பமான கோடைக்காலங்களில் இருந்தும் நிவாரணம் அளிக்கும் பானங்களுக்கான தாகத்தைத் தணிக்கச் செய்கிறது.

Homemade Drinks That Increase Good Bacteria to Improve Gut Health in Tamil

நோய் எதிர்ப்புச் சக்தியைப் போலவே கோடைக்காலத்தில் வயிற்றிலும் பல மாற்றங்கள் ஏற்படும். குடல் நுண்ணுயிரி அல்லது நல்ல பாக்டீரியா சமநிலையை மீறும் போது இது நிகழ்கிறது. இது நிகழும்போது, ​​உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது, இதனால் மக்கள் பருக்கள், வயிற்றுப்போக்கு, UTI கள் மற்றும் அடிக்கடி தலைவலிகளை அனுபவிக்கிறார்கள். எனவே வயிற்றை ஆற்றவும், நிவாரணம் அளிக்கவும் உதவும் உணவுகளை உட்கொள்வது காலத்தின் தேவையாகிறது. குடல் நுண்ணுயிரியை சரியான வகையான நீரேற்றத்துடன் சமநிலைப்படுத்த உதவும் பானங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோர்

மோர்

கோடையில் மோர் சாப்பிடுவது பல நூற்றாண்டுகளாக இருக்கும் பழக்கமாகும். ஏனென்றால், இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் அதே வேளையில் உடல் சூட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் மதிய உணவுடன் இந்த பானத்தை ஒரு கிளாஸ் குடிப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதுமட்டுமின்றி, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் மோர் மிகவும் நன்மை பயக்கும்.

இளநீர்

இளநீர்

சிறுநீரில் எரியும் உணர்வு மற்றும் பிட்டா சமநிலையின்மை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பானம். தேங்காய் நீர் உடலை குளிர்விக்க உதவுகிறது, அதே நேரத்தில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துகிறது. எனவே இந்த பானத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கரும்புச்சாறு

கரும்புச்சாறு

கோடைகாலம் வந்தாலே சாலைகளில் திடீரென கரும்புச்சாறு கடைகளை முளைப்பதை நாம் பார்க்கலாம். அதற்கான உண்மையான காரணம் என்னவென்றால், இந்த சாறு உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் அதே வேளையில் கோடையில் உடலை குளிர்விக்க உதவுகிறது.

வாழைத்தண்டு சாறு

வாழைத்தண்டு சாறு

இது பலருக்கு அறியாத ஒரு விஷயம். ஆனால், வாழைத்தண்டில் பல எசென்டிலா சத்துக்கள் இருப்பதால் கோடைக்காலத்தில் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். உடலில் வீக்கம் உள்ளவர்கள் இந்த சாற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த சாறாகும்.

குல்கந்த் பால்

குல்கந்த் பால்

கோடை காலத்தில், அதிக வெப்பம் காரணமாக பிட்டா சமநிலையை இழக்கிறது, இது மக்களை தொந்தரவு செய்கிறது. எனவே குல்கந்த் மில்க்கை படுக்கைக்குச் செல்வதற்கு முன் உட்கொள்வது அவசியம், ஏனெனில் இது நன்றாக தூங்க உதவும்.

எலுமிச்சைச்சாறு

எலுமிச்சைச்சாறு

கோடைக்காலத்தில் இரவில் மிகவும் வறண்ட மற்றும் சோர்வாக இருப்பவர்கள் ஒரு கிளாஸ் எலுமிச்ச பழச்சாற்றை உட்கொள்ள வேண்டும். சிறந்த பலன்களுக்கு, 1 டீஸ்பூன் சியா விதைகளை அதில் ஊறவைத்து, அவை நன்றாக ஊறியவுடன் குடிக்கவும். இந்த பானம் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை ஊக்குவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, March 4, 2023, 16:00 [IST]
Desktop Bottom Promotion