Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
குடிப் பழக்கத்துக்கு 'குட்-பை' சொல்லணுமா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து வெளிவருவது என்பது மிகவும் கடினமானது. மன உறுதியுடன் கைவிடுவதற்கான முயற்சியில் இறங்கினால் மட்டுமே கைவிட முடியுமே தவிர, நினைத்தவுடன் கைவிடுவது என்பது இய
நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா? இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்கிறீர்களா? குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து வெளிவருவது என்பது மிகவும் கடினமானது. மன உறுதியுடன் கைவிடுவதற்கான முயற்சியில் இறங்கினால் மட்டுமே கைவிட முடியுமே தவிர, நினைத்தவுடன் கைவிடுவது என்பது இயலாத காரியம்.

என்ன தான் மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் என்று கூறினாலும், யார் காதில் அது விழுகிறது. மீண்டும் மீண்டும் குடிக்கத் தானே செய்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அது கல்லீரல், இதயம், மூளை போன்ற உறுப்புக்களை மிகவும் மோசமாக பாதிக்கும். அதோடு, கடுமையாக பல வயிற்று பிரச்சனைகளாலும் அவஸ்தைப்பட வைக்கும். இருப்பினும், மிதமான அளவில் மது அருந்தினால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அப்படியே மதுவிற்கு அடிமையாகிவிட்டால் தான் பிரச்சனையே.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால் ஒரு நாள் கூட மது அருந்தாமல் இருக்க முடியாது. மேலும் இது ஒருவிதமான நாள்பட்ட கோளாறாக மாறி, மனதைக் கட்டுப்படுத்த முடியாதவாறு செய்து, பல மோசமான செயல்களில் ஈடுபடச் செய்யும். இதெல்லாம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஆரம்பத்திலேயே மதுப் பழக்கத்தைக் கைவிட முயற்சிக்க வேண்டும். இக்கட்டுரையில் மதுப்பழக்கத்தைக் கைவிட உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

திராட்சை
மது பானங்கள் மற்றும் ஒயின்களில் உள்ள முக்கிய மூலப்பொருளே திராட்சை தான். ஆகவே மதுப் பழக்கத்தைக் கைவிட நினைத்தால், திராட்சையின் உதவியுடன் எளிதில் மறக்கலாம். எனவே உங்களுக்கு மது அருந்த வேண்டுமென்று தோன்றும் போது, திராட்சை ஜூஸ் குடியுங்கள். உங்கள் மனது எவ்வளவு கேட்கிறதோ, அவ்வளவு திராட்சை ஜூஸைக் குடிக்கலாம். இதனால் விரைவில் குடிப்பழக்கத்தைக் கைவிட முடியும். வேண்டுமானால், ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கும் ஒருமுறை திராட்சையை சாப்பிடலாம்.

பேரிச்சம் பழம்
குடிப்பழக்கத்தைக் கைவிட உதவும் மற்றொரு அற்புதமான இயற்கை வழி தான் இது. சில துண்டுகள் பேரிச்சம் பழத்தை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் பேரிச்சம் பழத்தை கையால் நசுக்கி, அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை குடிக்க, விரைவில் குடிப்பழக்கத்தைக் கைவிட முடியும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
மீன்களான டூனா, சார்டைன், ட்ரௌட் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இது மதுவின் மீதுள்ள நாட்டத்தைத் தடுக்கும் மற்றும் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட உதவும். எனவே இந்த வகை மீன்களை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

சிவப்பு மிளகாய்
வீட்டு சமையலறையில் இருக்கும் பொதுவான ஒரு மசாலாப் பொருள் தான் சிவப்பு மிளகாய். இதை ஜூஸ் வடிவில் உட்கொண்டால், அது தூக்கமின்மை, பதற்றம் மற்றும் எரிச்சல் உணர்வு போன்றவைக் குறையும். அதோடு பசியைத் தூண்டிவிடும் மற்றும் மதுவின் மீதுள்ள நாட்டமும் குறையும். அதற்கு சுடுநீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அத்துடன் சிறிது சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
இயற்கை வைத்தியங்களைத் தவிர, சில குறிப்புக்களின் உதவியுடனும் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடலாம். அவை என்னவென்று காண்போம்.

வேறு சில குறிப்புக்கள்
* அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
* ஆரோக்கியமான சீரான உணவை உண்ண வேண்டும்.
* போதுமான நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
* தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications