இந்த தீபாவளிக்கு உங்க உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாம ஆரோக்கியமாக இருக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள்!

சிறந்த முடிவுகளுக்கு, உங்கள் உணவுகளில் புதிய அல்லது கரிம மஞ்சள் தூள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். இவை இரண்டும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான இந்து பண்டிகை தீபாவளி. தமிழகத்தில் இந்த பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். தீபாவளி பண்டிகை என்பது மக்கள் அனைத்து நல்ல உணவுகளை சாப்பிடும் நேரம். அந்த நேரத்தில், மக்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுவது மிகக்குறைவு. மேலும், உடலுக்குத் தேவையில்லாத பல உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர். இனிப்பு பலகாரங்கள் மற்றும் அசைவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரித்து, உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். சிறந்த ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு, தீபாவளிக்குப் பிறகு மக்கள் 7-15 நாள் பஞ்சகர்மா (நச்சு நீக்கம்) திட்டத்தைப் பின்பற்றுவது அவசியம்.

Healthy Ayurvedic tips for Diwali in tamil

இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவும். சிஜிஎச் எர்த் ஆயுர்வேதத்தின் சில எளிய மற்றும் வீட்டிலேயே உள்ள ஆயுர்வேத வழிகாட்டுதல்கள் ஆரோக்கியமான உடலை அடைய உதவும். இந்த தீபாவளிக்கு ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்பதற்கான ஆயுர்வேத குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரத்திற்கு சாப்பிட வேண்டும்

நேரத்திற்கு சாப்பிட வேண்டும்

நேரத்திற்கு சாப்பிட வேண்டியது மிக அவசியம். பசிக்கவில்லை என்றால், லேசான உணவை மட்டும் சாப்பிடுங்கள். பிரதான உணவுக்கும் பிரதான உணவுக்கும் இடையில் 4-6 மணிநேரமாவது இடைவெளியை வைத்திருங்கள். நீங்கள் பசியாக உணர்ந்தால் அல்லது பசியாக இருந்தால் மட்டுமே சில நட்ஸ்கள், பழங்கள் அல்லது சாலடுகள் மற்றும் பழங்கள்/காய்கறி சாறுகளை சாப்பிடலாம். இது உங்கள் வளர்சிதை மாற்றம் திறமையாக செயல்படுவதையும், உங்கள் உடலுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குவதையும் உறுதி செய்யும்.

எந்த மசாலாவை பயன்படுத்த வேண்டும்?

எந்த மசாலாவை பயன்படுத்த வேண்டும்?

சிறந்த முடிவுகளுக்கு, உங்கள் உணவுகளில் புதிய அல்லது கரிம மஞ்சள் தூள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். இவை இரண்டும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

வசதியான உணவை உண்ணுதல்

வசதியான உணவை உண்ணுதல்

அரிசிக் கஞ்சி மற்றும் கிச்சடி போன்ற சௌகரியமான உணவு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், தென்னிந்தியாவின் கஞ்சி போன்ற புரோபயாடிக் உணவுகளைச் சேர்ப்பது நல்லது. இது கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

என்ன பானங்கள் தேர்வு செய்ய வேண்டும்?

என்ன பானங்கள் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு கிளாஸ் அறை வெப்பநிலை நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும். குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் க்யூப்ஸைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. சர்க்கரைக்கு பதிலாக ஆர்கானிக் வெல்லம் அல்லது தேன் சேர்த்துகொள்ளலாம். மேலும், உங்கள் உணவில் மஞ்சள் கலந்த பால் இருக்க வேண்டும். இந்த மஞ்சள் கலந்த பால் தயாரிக்க, ஒரு சிட்டிகை ஆர்கானிக் மஞ்சள் பொடியை சூடான பாலில் சேர்க்கவும், இனிப்பிற்கு தேன் சேர்க்கலாம். இந்த பானத்தை பொதுவாக இரவு நேரங்களில் குடிக்க வேண்டும்.

எதை தவிர்க்க வேண்டும்?

எதை தவிர்க்க வேண்டும்?

இந்த நேரத்தில், முடிந்தவரை குளிர்ந்த, உறைந்த, பாதி சமைத்த மற்றும் ஆழமாக வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட அல்லது அனைத்து வகை மாவு (மைதா) கொண்டு தயாரிக்கப்பட்ட எந்த உணவையும் தவிர்க்கவும். எனவே, இந்த பட்டியலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் வெள்ளை ரொட்டி, பன்கள், ரஸ்க், பரோட்டாக்கள், பேக்கரி பொருட்கள் மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட மாவு வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

 வேறு என்ன செய்யலாம்?

வேறு என்ன செய்யலாம்?

ஒருவர் ஒவ்வொரு நாளும் 1-2 இந்திய நெல்லிக்காய் (அம்லா) சாப்பிடலாம். இருப்பினும், உடலில் தொற்று ஏற்படும் போது பச்சை உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும். மசாலா மற்றும் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகை தேநீரையும் நீங்கள் பகலில் சாப்பிடலாம்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

உணவு, உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவை ஆரோக்கியத்தின் மூன்று தூண்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிடுவதையும், போதுமான உடற்பயிற்சியையும் ஆரோக்கியத்தையும் பெறுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, October 22, 2022, 12:41 [IST]
Desktop Bottom Promotion