Just In
- 4 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 7 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 7 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 9 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆல்கஹால் குடிப்பதால் இந்த ஆபத்து ஏற்படும் அபாயம் 35% சதவீதம் அதிகரிக்குமாம் தெரியுமா?
பக்கவாதம் பொதுவாக மிக அதிகமான உயர் இரத்த அழுத்த அளவுகளால் தூண்டப்படுகிறது. ஆபத்து காரணிகளில், அனைத்தையும் மாற்றியமைக்க முடியும், ஆனால் ஆபத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடிய ஒன்று உள்ளது
பக்கவாதம் ஒரு பொதுவான மற்றும் இயலாமையை ஏற்படுத்தும் நோயாகும். அதிகமாக காணப்படும் பொதுவான பக்கவாதங்களுக்கு மூளையில் ஒரு தமனியின் இரத்த ஓட்டத்தை திடீரென குருதியுறை தடுப்பதே காரணமாக உள்ளது. பக்கவாதம் என்பது மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபடும் ஒரு பிரச்சனையாகும். இது ஒரு ஆபத்தான நிலை மற்றும் உங்கள் உணவு, உடல் செயல்பாடு, புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் ஆகியவை உங்கள் ஆபத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள். 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இந்த நிலை அரிதானது.
பக்கவாதம் பொதுவாக மிக அதிகமான உயர் இரத்த அழுத்த அளவுகளால் தூண்டப்படுகிறது. ஆபத்து காரணிகளில், அனைத்தையும் மாற்றியமைக்க முடியும், ஆனால் ஆபத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடிய ஒன்று உள்ளது. அது மது அருந்துதல். மது அருந்துவதால், பக்கவாதம் ஏற்படும் பிரச்சனையை பற்றி ஆய்வு என்ன கூறுகிறது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் பானம்
லேசான மற்றும் மிதமான ஆல்கஹால் உட்கொள்வது கூட இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தி லான்செட்டில் வெளியிடப்பட்ட மரபணு ஆய்வின்படி, ஆல்கஹாலை தொடர்ந்து உட்கொண்டால், காலப்போக்கில் அது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இங்கிலாந்து மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 5 லட்ச சீன மக்களை 10 ஆண்டுகளாகப் பின்தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
குடிப்பழக்கம் இல்லாதவர்கள்
தற்போது, இங்கிலாந்தில் 16 சதவீத ஆண்களும், பெண்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சுத்தமாக குடிப்பழக்கம் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு பானங்களை குடிக்க ஆரம்பித்தாலும், இரண்டு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
38 சதவீதம் அதிகரிக்கிறது
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு அரை பாட்டில் ஒயின் ஒரு நாளில் உட்கொள்ளும் போது பக்கவாதம் ஏற்படும் அபாயம் 38 சதவீதம் அதிகரிக்கிறது.
ஆல்கஹால் மற்றும் பக்கவாதம் இடையே உள்ள இணைப்பு
ஒரு நபரின் பக்கவாதம் ஏற்படும் அபாயத்துடன் ஆல்கஹால் வலுவாக தொடர்புடையது. சமீபத்திய ஆய்வின்படி, ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு பானங்கள் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 10-15 சதவீதம் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மது அருந்துபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 35 சதவீதமாக உள்ளது.
ஆபத்தான நோய்கள்
இது மட்டுமின்றி, மது அருந்துவதால் உடல் பருமன், கல்லீரல் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
இறுதிகுறிப்பு
மேலும், குறைந்த அளவு மது உட்கொள்ளும் போது கூட பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதற்கு இடையே உறுதியான தொடர்பை நிபுணர்கள் கண்டறியவில்லை. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரின் கூற்றுப்படி, ஒயின் மற்றும் பீர் பக்கவாதத்திற்கு எதிராக பாதுகாப்பு விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நபர் எவ்வளவு அதிகமாக குடிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆல்கஹாலின் அபாயத்தைக் குறைக்கும் போது, பாதுகாப்பான அளவு எதுவும் உட்கொள்ள முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.