Just In
- 3 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 4 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 7 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 9 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உங்க மூக்குல இந்த மாதிரியான பிரச்சனையை சந்திச்சா அது கொரோனாவாம்... எச்சரிக்கையா இருங்க...
எப்போது ஒருவருக்கு காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சு விடுவதில் சிரமம், விவரிக்கமுடியாத சோர்வு போன்றவற்றுடன் மூக்கடைப்பு, மூக்கு ஒழுகலை சந்தித்தால், அவர்களுக்கு கொரோனா தாக்கியிருப்பதற்கான வாய்ப்புள்ளது.
தற்போது நாவல் கொரோனா வைரஸ் உலகளவில் சுமார் 37 மில்லியனுக்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள சாதனைப் புரிந்த விஞ்ஞான சமூகம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் முயற்சிகளால் கூட இன்னும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், இதற்கான முயற்சிகளில் தீவிரமாக உள்ளதால், இன்னும் குறைந்தது நான்கு முதல் ஆறு மாதங்களில் தடுப்பூசி மக்களுக்கு கிடைத்திடலாம். அதே சமயம் ஒரு தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. ஒரு பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பு மருந்து தயாரிப்பதன் பின்னனியில் பல விஷயங்கள் உள்ளன. சொல்லப்போனால் இதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்.
ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் குறித்து புதிய புதிய விஷயங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிய வருவது போல், இந்த கொரோனா வைரஸில் புதிய புதிய அறிகுறிகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்த கொடிய வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
அதிலும் தற்போது பருவநிலை அவ்வப்போது மாறிக் கொண்டிருப்பதால், பலரும் சளி, இருமல் பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும். இந்த சூழ்நிலையில் இம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் எந்த வழியிலும் ஒருவரை அண்டக்கூடும்.