Just In
- 1 hr ago Today Rasi Palan 22 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகள் எடுக்க மிகவும் சாதகமான நாள்...
- 7 hrs ago கண்களுக்குக் கீழே கருவளையம் உள்ளதா? அது உங்கள் அழகைக் கெடுக்கிறதா?
- 8 hrs ago 10 ஆண்டுகளுக்கு பின் கிருத்திகை நட்சத்திரத்திற்கு செல்லும் குரு: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிக்காரர்கள்!
- 10 hrs ago வெயில்காலத்தில் ஏன் கரும்புச்சாறு அவசியம் குடிக்கணும் தெரியுமா? இனிமே வெளிய பார்த்தா உடனே வாங்கி குடிங்க...!
Don't Miss
- Finance தண்ணீர் இல்லை, மணல் கிடையாது.. அலமாரியில் சோளம் விளைவிக்கும் நாமக்கல் விவசாயி..!!
- News ஆஹா.. மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்.. முய்சு கட்சிக்கு பெரிய வெற்றி! சீனாவுக்கு கொண்டாட்டம் தான்! ஏன்
- Sports வாயை மூடுங்க டுபிளசிஸ்! ரோகித் சர்மாவை பார்த்து திருந்துங்க.. ரெய்னா கடும் தாக்கு
- Automobiles 2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
- Technology மே 1 முதல் அமல்.. ICICI BANK-ன் புது ரூல்ஸ்.. IMPS உட்பட பல சேவைகளின் Service Charge-ல் திடீர் மாற்றம்!
- Movies கில்லி அளவுக்கு ’கோட்’ வந்தா நான் பினிஷ்.. வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்களின் ஒரே கோரிக்கை இதுதான்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றணுமா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க...
நுரையீரலில் இறுகிய நிலையில் உள்ள சளியை எளிதில் உடைதெறிய உதவும் அற்புதமான ஓர் நிவாரண வழி தான் வெந்தய டீ. மேலும் இது அனைவரது சமையலறையிலும் இருக்கக்கூடிய ஒரு மசாலாப் பொருள்.
தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் இதர வெளிப்புற காரணிகளால் ஒருவரது நுரையீரலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒருவரது சுவாசத்தில் இரண்டு நுரையீரல்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன. வளர்ந்த ஐரோப்பாவில் மொத்த இறப்பு விகிதத்தில் 8 சதவீதம் மூச்சுத் திணறல் பிரச்சனையால் ஏற்பட்டதாக ஒரு ஆய்வு காட்டும் போது எவ்வளவு ஆச்சரியமாக உள்ளது. காற்று மாசுபாடு, புகைப்பிடித்தல், குப்பைகளை எரித்தல், கெமிக்கல்களின் பயன்பாடு மற்றும் தற்போது உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் போன்றவை நுரையீரலின் சரியான செயல்பாட்டிற்கு இடையூறை ஏற்படுத்துபவை.
நகரமயமாக்கல், கால அட்டவணைகள் மற்றும் பிற காரணிகளை மாற்றுவதன் மூலம், சுவாச நோய்களின் வழக்குகளில் நிலையான உயர்வு காணப்படுகிறது. ஒருவரது நுரையீரலை நோய்கள் அதிகமாக தாக்கும் போது, அது சுவாச மண்டலத்திற்கு மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தி, நுரையீரலின் சுவாசத் திறனைக் குறைக்கிறது.
எனவே அவ்வப்போது நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்களில் இருந்து இரட்டிப்பு பாதுகாப்பை நுரையீரலுக்கு அளிக்க, ஒட்டுமொத்த உலகமும் மாற்று சிகிச்சைகளை தேடி வருகிறது.
சளி
இன்று பலரது நுரையீரலில் சளி அதிகம் தேங்கியுள்ளது. இப்படி சளி வெளியேறாமல் நுரையீரலிலேயே தங்கியிருந்தால், இருமலால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். அதே சமயம் அதிகப்படியான சளித் தேக்கம் உடலின் நோயெதிர்ப்பு திறனை எவ்வாறு குறைக்கும் என்பது தெரியுமா? உடலில் சளி அதிகம் தேங்கும் போது, அது பாக்டீரியா, கிருமிகள், வைரஸ்கள் போன்றவற்றை உடலிலேயே தங்க வைத்து, உடலின் நிலைமையை மோசமாக்குகிறது. பொதுவாக நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியை அகற்ற உடலில் நடைபெறும் சில வேறுபட்ட வழிமுறைகள் தான் இருமல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல்.
MOST READ: கொரோனாவின் புதிய அறிகுறியை கூறிய ஸ்பானிஷ் நிபுணர்கள்... அது என்ன அறிகுறி?
வழக்கத்திற்கு அதிகமான சளி
சிலருக்கு வழக்கத்திற்கு அதிகமாக சளி தேங்கியிருக்கும். இப்படி அதிகப்படியான சளியைக் கொண்டவர்கள் மாதக்கணக்கில் இருமல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். இப்படி உடலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றுவதற்கு, முதலில் அதை உடைக்க வேண்டும். அதற்கு சிறப்பான வழி சுடுநீர் ஆவி பிடிப்பது. சளியால் அவஸ்தைப்படுபவர்கள் ஆவி பிடிக்கும் போது, வெதுவெதுப்பான காற்றை நாசிகளின் வழியே உள்ளிழுக்கும் போது, இறுகிய நிலையில் இருந்த சளி இளகி, எளிதில் வெளியேறுவதற்கு ஏற்றவாறு மாறும்.
சளியை உடைதெறிவதற்கான மாற்று வழி
நுரையீரலில் இறுகிய நிலையில் உள்ள சளியை எளிதில் உடைதெறிய உதவும் அற்புதமான ஓர் பொருள் தான் வெந்தயம். இது அனைவரது சமையலறையிலும் இருக்கக்கூடிய ஒரு மசாலாப் பொருள். மேலும் இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தன்னுள் கொண்டது. இப்போது சளியை எளிதில் இளகச் செய்ய வெந்தயத்தை எப்படி உட்கொள்வது என்று காண்போம்.
வெந்தய டீ செய்முறை
* ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் வடிகட்ட வேண்டும்.
* வேண்டுமானால், இத்துடன் சிறிது மிளகையும் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளலாம்.
எவ்வாறு மற்றும் எப்போது குடிக்க வேண்டும்?
* சிறப்பான பலன் கிடைக்க வெந்தய டீயை தினமும் காலையில் ஒரு கப் மற்றும் மாலையில் ஒரு கப் என குடிக்க வேண்டும்.
* மிளகை இந்த பானத்துடன் சேர்ப்பதால் இந்த பானத்தின் நன்மை இரட்டிப்பாகும். மிளகில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வலி நிவாரணப் பண்புகள் உள்ளது மற்றும் இது சளியை எளிதில் உடைத்தெறிந்து வெளியேற்றும்.
இப்போது நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்ற உதவும் இதர சில வழிகளைக் காண்போம்.
MOST READ: மக்களே உஷார்..! கொரோனா வைரஸ் காற்றிலும் பரவுமாம்.. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்..
எலுமிச்சை தேன்
ஒரு டம்ளர் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும். இதனால் தேன் தொண்டை மற்றும் நெஞ்சு பகுதிக்கு இதமளிக்கும் மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.
வெதுவெதுப்பான பால்
வெதுவெதுப்பான பாலில் தேன், மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கிருமிகளை அழிக்க உதவும். மிளகு செரிமானத்திற்கும், இருமல் மற்றும் சளியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். இந்த பானத்தல் தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.
சுடுநீர்
சுடுநீரை எப்போதும் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அது நெஞ்சு பகுதியில் சளி தேங்குவதைத் தடுத்து, சுவாசப் பாதையில் உள்ள சளியை எளிதில் வெளியேற்றும். ஆகவே இனிமேல் குளிர்ந்த நீரைப் பருகாமல் சுடுநீரைப் பருகும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
ப்ளாக் காபி
சளித் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் ப்ளாக் காபி குடித்தால், தற்காலிக நிவாரணம் கிடைப்பதோடு, நெஞ்சு பகுதியில் உள்ள சளியை இளக உதவும். ஆனால் ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் காப்ஃபைன் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
MOST READ: கொரோனா வைரஸ் குறித்து ஒவ்வொருவரின் மனதில் எழும் கேள்விகளும்... அதற்கான பதில்களும்...
மஞ்சள்
சுடுநீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் மஞ்சளில் உள்ள குர்குமின், சளியை இளகச் செய்யும் மற்றும் நெஞ்சு சளிக்கு நிவாரணம் அளிக்கும் மற்றும் அதில் உள்ள மருத்துவ பண்புகள் பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் சளி, இருமல் தொந்தரவைப் போக்கும்.