Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
கைரேகை மட்டுமில்ல உங்க உடம்போட இந்த பாகங்களும் உங்கள மாதிரி வேற யாருக்குமே இருக்காதாம் தெரியுமா?
உலகத்தில் ஒரே மாதிரியான கைரேகை இருவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கைரேகை மட்டும்தான் இப்படி தனித்துவம் வாய்ந்ததா என்று கேள்விகேட்டால் அதற்கு இல்லை என்பதுதான் பதில்.
நமது உடல் என்பது பல அதிசயங்கள் நிறைந்த ஒன்றாகும். ஏனெனில் மருத்துவம் வானளவு வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் மனித உடல் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முடிந்த பாடில்லை, மனித உடலைப் பற்றிய ஒவ்வொரு ஆராய்ச்சியும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மனித உடலில் இருக்கும் முக்கியமான அதிசயங்களில் ஒன்று நம்முடைய கைரேகை ஆகும்.

உலகத்தில் ஒரே மாதிரியான கைரேகை இருவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கைரேகை மட்டும்தான் இப்படி தனித்துவம் வாய்ந்ததா என்று கேள்விகேட்டால் அதற்கு இல்லை என்பதுதான் பதில். ஏனெனில் நமது உடலில் இருக்கும் வேறு சில உறுப்புகளும் கூட இப்படி தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதன்படி உங்களுக்கு இருப்பது போல வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை. இந்த பதிவில் உடலின் எந்தெந்த பாகங்கள் இப்படி தனித்துவத்துடன் இருக்கும் என்று பார்க்கலாம்.

கருவிழிப் படலம்
உங்கள் கண்கள்தான் உங்களின் ஆன்மாவிற்கும், உங்களுக்குமான அடையாளமாகும். கண்ணுக்குள் எவ்வளவு ஒளி நுழைய வேண்டும் என்பதை கருவிழிப் படலம்தான் முடிவு செய்கிறது, இது சிறிய உரை வடிவங்களைக் கொண்டுள்ளது. கருவளர்ச்சியின் போது டி.என்.ஏ கருவிழியின் நிறத்தையும் கட்டமைப்பையும் தீர்மானிக்கிறது, அதன் சீரற்ற குழிகள், உரோமங்கள், சுழல்கள் மற்றும் பிளவுகள் கருவின் வளர்ச்சியின் போது நிகழ்கின்றன. இது ஒவ்வொரு கருவிழியையும் தனித்துவமாக்குகிறது.

காது
உங்கள் காதுகளின் விளிம்புகளை கவனியுங்கள். அதன் வளைவுகள் மற்றும் முகடுகளை உணருங்கள். அந்த வடிவமும், அமைப்பும் உங்களுக்கு மட்டும்தான் இருக்கும். பிரிட்டிஷ் ஆய்வில் ஒருவரை தனித்துவமாக அடையாளம் காண்பதில் ஒருவரின் காது 99 சதவீதம் துல்லியமாக இருப்பதாக கூறுகிறது.

உதடு ரேகை
தடயவியல் மற்றும் பல அறிவியல் ஆய்வுகளின் படி உதடு ரேகை என்பது கைரேகைகள் போல தனித்துவம் வாய்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. உதடு ரேகையை நீதிமன்றங்கள் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளும். ஒருவரின் உதடு ரேகை போல மற்றவருக்கு இருக்காது.

நாக்கு
கைரேகையைப் போலவே நாக்கும் தனக்கென சொந்த வடிவத்தையும், அமைப்பையும் கொண்டுள்ளது. அதில் இருக்கும் சிறிய புள்ளிகள் மற்றும் முகடுகள் ஒவ்வொரு நாக்கிற்கும் வித்தியாசப்படும். நாக்கு வாய்க்குள் பாதுகாக்கப்படுவதால் விரல் நுனிகளைப் போலல்லாமல், இது வடுவாக மாறக்கூடும். காலப்போக்கில் இந்த வடிவங்கள் அரிதாகவே மாறுகின்றன.

கால் அச்சு
குழந்தைகள் கருவில் இருக்கும்போது கைரேகைகள் உருவாகும்போது கால் அச்சும் உருவாகிறது. வெளிநாடுகளில் குற்றவாளிகளின் கைரேகைகள் மட்டுமில்லாமல் கால் ரேகைகளையும் பதிவு செய்கிறார்கள். கருவில் இருந்து உருவாகுவதால் கைரேகையைப் போலவே கால் அச்சும் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகும். ஒருவரின் கால் அச்சு போலவே மற்றவருக்கு இருக்காது.

பற்கள்
உங்கள் பற்கள் உங்கள் டி.என்.ஏவை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல்களை அடையாளம் காண பல் பதிவுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை உங்கள் தனிப்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். பல்வேறு விதமான பழக்கங்களாலும், சுற்றுசூழல் காரணங்களாலும் இரட்டை பிறவிகள் கூட வெவ்வேறு விதமான பற்கலிக் கொண்டுள்ளனர்.

விழித்திரை
கண்ணின் பின்புறம் இருக்கும் விழித்திரை உங்கள் நரம்பு மண்டலத்தின் துல்லியமான பிரதிபலிப்பு ஆகும், இது உங்களுக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூளையின் ஆரோக்கியம் கூட குறைந்து வருவதைக் கண்டறிய உங்கள் கண் மருத்துவர் கவனிக்கும் இரத்த நாளங்களின் வடிவத்தை இது காட்டுகிறது. இது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். இரட்டைப் பிறவிகளுக்குக் கூட விழித்திரை ஒரே மாதிரி இருக்காது.



Click it and Unblock the Notifications