Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?
கோடை காலத்தில் உங்கள் அன்றாட உணவில் மூங், மாட்கி மற்றும் சிவப்பு சாவ்லி ஆகியவற்றைச் சேர்க்க ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கிறார். ஏனெனில் இவை ஜீரணிக்க எளிதானவை,
இந்திய உணவு வகைகள் உலகின் மிக சத்தான ஒன்றாக கருதப்படுகின்றன. மேலும், இதில் பருப்பு வகைகளும் அடங்கும். பருப்பு வகைகள் நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகும். தற்போதைய சூழ்நிலையில், மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பெறுவது மக்களுக்கு கடினமாக இருக்கும். இந்நிலையில், முழுமையான ஊட்டச்சத்துக்காக பருப்பு வகைகளை நாம் முழுமையாக நம்பலாம். மேலும் அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சிறந்தவை.

பருப்பு வகைகள் உங்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன, மேலும் உங்களை மீட்டெடுப்பதற்கும் உதவுகின்றன (மீட்புக்கு பிந்தைய COVID உட்பட). பருப்பு முதல் தோசை வரை சாலட் வரை பல வழிகளில் அவற்றைப் பயன்படுத்தலாம். உங்கள் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய பருப்பு வகைகள், எவ்வாறு உட்கொள்வது மற்றும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பருப்பு வகைகளின் ஆரோக்கிய நன்மைகள்
பருப்பு வகைகளில் இரும்பு, துத்தநாகம், வைட்டமின்கள், செலினியம் மற்றும் லைசியீன் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுகிறது, மேலும் பசியைக் கட்டுப்படுத்துகிறது.

கோடை காலத்தில் நீங்கள் உட்கொள்ள வேண்டிய பருப்பு வகைகள்
கோடை காலத்தில் உங்கள் அன்றாட உணவில் மூங், மாட்கி மற்றும் சிவப்பு சாவ்லி ஆகியவற்றைச் சேர்க்க ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கிறார். ஏனெனில் இவை ஜீரணிக்க எளிதானவை, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இவை இருக்கும்.

அதிக பருப்பு வகைகளை யார் சாப்பிட வேண்டும்?
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயமாக அதிக பருப்பு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது தவிர, முடி உதிர்தல், பி.சி.ஓ.டி, வீக்கம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களும் அதிக பயறு மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் அதிக இன்சுலின் எதிர்ப்பைக் கொண்டிருந்தால், பருப்பு வகைகள் அதைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

பருப்பு வகைகளை அதிகரிப்பது எப்படி?
பருப்பு வகைகளை மொத்தமாக ஊறவைத்து அவற்றை முளைக்கட்டிய பயிராக எடுத்துக்கொள்ளலாம். பின்னர் அவை பின்வரும் வழிகளில் பயன்படுத்தப்படலாம்
- காலை உணவுக்கு தோசை / அடை
- அவற்றை வதக்கி, மதிய உணவுக்கு அரிசியுடன் சாப்பிடுங்கள்
- சாலடுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
-ரொட்டி, அரிசி மற்றும் காய்கறிகளுடன் சாம்பார் அல்லது குழம்பில் சேர்க்கலாம்



Click it and Unblock the Notifications