Just In
- 1 hr ago மோனாலிசா ஓவியத்தில் இருக்கும் பெண் மோனாலிசாவே இல்லையாம்...ஆறு குழந்தைக்கு தாயான இந்த பெண்ணின் பெயர் இதுதானாம்!
- 4 hrs ago இந்திய வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றங்களை செய்த கொடூர அரசர்கள்... இவர்கள் அரசர்கள் இல்லை அரக்கர்கள்...!
- 7 hrs ago இந்த 4 ராசி ஆண்கள் குறும்புத்தனத்தால அவங்க மனைவியை படாதபாடு படுத்துவர்களாம்... உங்க கணவர் ராசி இதுல இருக்கா?
- 11 hrs ago 1 கைப்பிடி புதினாவும், 1 கப் வேர்க்கடலையும் இருந்தா.. இந்த மாதிரி ஒருமுறை செய்யுங்க.. செமயா இருக்கும்..
Don't Miss
- Movies Actor Ajith: பிரியாணி சமைத்துவிட்டு ஹாயாக என்ஜாய் செய்த அஜித்.. ரீசண்ட் கிளிக்ஸ் இதோ!
- News விடாத கெஜ்ரிவால்.. அமலாக்கத்துறை காவலுக்கு எதிராக டெல்லி கோர்ட்டில் மனு.. அவசரமாக விசாரிக்க கோரிக்கை
- Automobiles 100 கி.மீ மைலேஜ் தரும் பைக், சென்னை டூ பெங்களூரு விரைவு வந்தே பாரத் என இந்த வாரத்தின் டாப் 10 செய்திகள்!
- Finance அலேக்கா, 12 வீடுகளை வாங்கிய ரேகா ஜூன்ஜூன்வாலா.. அதவும் 'இந்த' ஏரியாவுல.. வாவ்..!!
- Sports ரூ.11.75 கோடி கொடுத்து வாங்குனதுக்கு.. கடைசி ஓவரில் 25 ரன்கள்.. ஹர்சலை பொளந்த டெல்லி இளம் வீரர்!
- Travel பெங்களூரில் உள்ள ‘ஸ்னோ சிட்டி’ – உங்கள் வீட்டு குழந்தைகளுடன் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்!
- Technology 5352 நகரங்கள்.. அம்புட்டு பேருக்கும் 1000GB.. கிள்ளி கொடுக்குற பழக்கமே அம்பானி கிட்ட இல்ல.. அள்ளி தர்றாரு!
- Education டிஎன்பிஎஸ்சி குரூப்-1 நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி
எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா? அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...!
அப்போதுதான் தண்ணீர் குடித்திருந்தாலும் அடுத்த நிமிடமே சிலருக்கு தாகம் எடுக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம் நமது சில அலட்சியான தினசரி பழக்கவழக்கங்களும், நோய்களும்தான்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். நமது உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காத போது அது பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இதே பிரச்சினைதான் அதிகளவு தண்ணீர் குடிக்கும்போதும். எனவே அளவான தண்ணீர் குடிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிலருக்கு எப்பொழுதும் அதிக தாகம் இருந்து கொண்டே இருக்கும். அப்போதுதான் தண்ணீர் குடித்திருந்தாலும் அடுத்த நிமிடமே அவர்களுக்கு தாகம் எடுக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம் நமது சில அலட்சியான தினசரி பழக்கவழக்கங்களும், நோய்களும்தான். இந்த பதிவில் தண்ணீர் குடித்த பிறகும் தாகமெடுக்க காரணம் என்னவென்று பார்க்கலாம்.
எப்போது தண்ணீர் குடிக்கலாம்?
சீரான இடைவெளிகளுக்கு இடையில் தண்ணீர் குடிப்பது நல்ல விஷயம். மேலும் கடுமையான உடற்பயிற்சி, காரமான உணவுகள் சாப்பிட்ட பிறகு, சோர்வான நேரங்கள், காலை எழுந்தவுடன் போன்ற சமயங்களில் தண்ணீர் குடிப்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் எப்போதும் தாகமாக இருந்தால் உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது.
சில பொதுவான காரணங்கள்
தினமும் அதிக காரம் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் உணவுகள் சாப்பிடுவது உங்களுக்கு அதிக தாகம் எடுப்பதற்கான காரணம் ஆகும். மேலும் வியர்வை, சோர்வு, தூக்கமின்மை அதிக உடற்பயிற்சி போன்றவை கூட உங்களுக்கு அதிக தீரா தாகத்திற்கான காரணமாக இருக்கலாம்.
வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டுமே உங்கள் உடலில் அதிகளவு நீர் இழப்பை ஏற்படுத்தும். இந்த நோய்கள் உங்கள் உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் நீரிழப்பு, மயக்கம், சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே வயிற்றுப்போக்கு ஏற்படும் போது உப்பு அல்லது சர்க்கரை கலந்த நீரை குடிப்பது எலக்ட்ரோலைட் சமநிலையை பாதுகாக்கும்.
அதிகளவு கார்போஹைட்ரேட்
நீங்கள் அதிக பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் அதிக கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களின் அதீத தாகத்திற்கு காரணமாக அமைகிறது. கொழுப்பு மற்றும் புரோட்டினை விட கார்போஹைட்ரேட் அதிகளவு தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும். இதனால் நீங்கள் அதிகளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். மேலும் இது உங்களை தொடர்ந்து தாகமாக வைத்திருக்கும்.
அதிக இரத்த இழப்பு
உங்கள் உடலில் இருந்து அதிக இரத்தம் வெளியேறும்போது அது உங்கள் உடலில் நீரின் அளவை குறைத்து உங்களை தாகமாக உணரச்செய்யும். பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும், அதிகளவு அல்சர் தாக்குதல் இருக்கும்போதும் இந்த பிரச்சினை ஏற்படும். மாதவிடாய் காலம் பொதுவாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஸ்ட்ரோஜன் அளவை மாற்றியமைப்பதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.
தைராய்டு மற்றும் சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் மற்றும் தைராய்டின் முதன்மையான அறிகுறிகளில் ஒன்று அதிக தாகமாகும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகாரிக்கும் போது அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வார்கள் அதற்கு காரணம் போதுமான ஹார்மோன் சுரப்பு இல்லாததுதான். து. நீரிழிவு நோயாளிகளைப் போலவே ஹைப்போ தைராய்டு உள்ளவர்களும் தாகத்தைத் தூண்டும் ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
MOST READ:இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு உலகம் முழுவதையும் சுற்றி பார்க்க வாய்ப்புள்ளதாம்...!
மனஅழுத்தம்
மன அழுத்தம் அட்ரீனல் சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கும், இதனால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படலாம். தொடர் மனஅழுத்தம் தாகம், சோர்வு, பதட்டம் போன்றவற்றுடன் தொடர்புடையது. முறையற்ற உணவு மற்றும் தூக்கம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கிறது. எனவே உங்கள் தாகத்தை குறைக்க மனஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியமாகும்.