Just In
- 1 hr ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தீராத வயிற்றுவலியையும் இந்த எளிய சமையலறை பொருட்களை கொண்டு குணப்படுத்தி விடலாம் தெரியுமா?
நமது வயிற்றில் சிறுகுடலும், பெருகுடலும் சந்திக்கின்ற இடத்தில் வால் போன்ற ஒரு பகுதி இருக்கும். இங்கு ஏற்படும் பிரச்சினைதான் குடல்வால் அழற்சி என்று அழைக்கப்படுகிறது.
இன்று இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால் அது குடல்வால் அழற்சி ஆகும். நமது வயிற்றில் சிறுகுடலும், பெருகுடலும் சந்திக்கின்ற இடத்தில் வால் போன்ற ஒரு பகுதி இருக்கும். இங்கு ஏற்படும் பிரச்சினைதான் குடல்வால் அழற்சி என்று அழைக்கப்படுகிறது.
இந்த வால்பகுதியில் ஏற்படும் அழற்சி குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை தடுக்கும். இதனால் வயிற்றுப்பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட வயது ஒரு தடையில்லை, ஏனெனில் இது எந்த வயதில் வேண்டுமென்றாலும் ஏற்படலாம். இதனை அறுவைசிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும். இந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சில பொருட்களை உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும். எந்தெந்த உணவுப்பொருட்கள் குடல்வால் அழற்சி ஏற்படமால் தடுக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்தயம்
வெந்தயம் இயற்கையாகவே குடல்வால் அழற்சியை தடுக்கக்கூடிய குணம் கொண்டதாகும். அடிப்படையில் வெந்தயமானது குடல் பகுதியில் சளி மற்றும் சீழ் சேருவதை தடுக்கிறது, இதன்மூலம் அந்த பகுதியில் வலி ஏற்படுவதை தடுக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் குடிக்கவும். இது உங்களுக்கு குடல்வால் அழற்சி ஏற்படாமல் தடுப்பதுடன் குடல் பிரச்சினைகள் இருந்தால் அதனையும் குணப்படுத்தும்.
பாதாம் எண்ணெய்
குடல்வால் பிரச்சினை மற்றும் குடல் வீக்கத்தை கட்டுப்படுத்த பாதாம் எண்ணெய் ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். இந்த எண்ணெயை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம். அடிவயிற்றிலும், பாதிக்கப்பட்ட பகுதியிலும் சூடான தண்ணீரில் துண்டை நனைத்து அந்த துண்டை கொண்டு சுத்தம் செய்யவும். பின்னர் பாதாம் எண்ணெயை கொண்டு பதிக்கப்பட்ட இடத்திற்கு மசாஜ் செய்யவும். உங்களுக்கு வித்தியாசம் தெரியும்வரை இதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஜின்செங்
குடல்வால் அழற்சி நோயை குணப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த மூலிகை இந்த ஜின்செங் ஆகும். இதற்கு குணசிங்கி என்ற ஒரு பெயரும் உள்ளது. இந்த பிரச்சினை ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் இரண்டு கப் ஜின்செங் டீ குடிக்க வேண்டும். இந்த பிரச்சினை இருந்தாலும் தொடர்ந்து இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல மாற்றங்கள் தெரியும்.
காய்கறி ஜூஸ்
காய்கறி ஜுஸ்களான கேரட் ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ் போன்றவை குடல்வால் அழற்சியால் ஏற்படும் வலியை உடனடியாக குறைக்கும் தன்மை கொண்டவை. இந்த நோயிலிருந்து தப்பிக்கவும், இதனால் ஏற்படும் வழியை குறைக்கவும் இந்த பழச்சாறுகளை தினமும் இரண்டு முறை குடிக்கவும். இந்த பழச்சாறுகள் மட்டுமிநரி முள்ளங்கி பழச்சாறு, கொத்தமல்லி சாறு போன்றவற்றையும் வலியை குறைக்க பயன்படுத்தலாம்.
MOST READ: இந்த 4 குணங்கள் கொண்ட நண்பர்களால் உங்கள் வாழ்வில் பேரழிவு ஏற்படும் என்கிறார் பீஷ்மர்...!
புதினா
இயற்கை மூலிகையான புதினா குடல்வால் பிரச்சினையை தடுப்பதிலும், குணப்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது குடல்வால் பிரச்சினையின் அறிகுறிகளான குமட்டல், வாயுக்கோளாறு, வாந்தி போன்ற அதன் ஆரம்ப நிலைகளிலேயே குணப்படுத்தக்கூடியது. புதினாவில் டீ தயாரித்தோ அல்லது பச்சையாக சாப்பிட்டோ குடல்வால் அழற்சி ஏற்படுவதில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.
அறிகுறிகள்
குடல்வால் அழற்சி பிரச்சினை உங்களுக்கு இருப்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். தொப்புள் பகுதியை சுற்றி வலி, வயிற்றின் வலது புறத்தில் கடுமையான வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அடிவயிற்றில் வீக்கம், பசியின்மை போன்றவை குடல்வால் அழற்சி நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மேலே கூறப்பட்ட சிகிச்சை முறைகளை பயன்படுத்தவும்.
காரணங்கள்
குடல் பகுதியில் வீக்கம் ஏற்பட பொதுவான காரணம் கிருமிகளின் தொற்றாகும். இந்த குடல்வாலின் ஒரு முனை திறந்திருக்கும், மற்றொரு முனை பெருங்குடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறிய குடல்வாயில் வீக்கம் ஏற்படும்போதோ அல்லது அதிகளவு பிணைப்பில் பிரச்சினை ஏற்படும்போதோ இந்த பிரச்சினை ஏற்படலாம். குடல் பகுதியில் உள்ள நிணநீர் முனையங்களில் வீக்கம் ஏற்பட்டால் கூட இந்த பிரச்சினை ஏற்படலாம். இவை தவிர காய்கறி மற்றும் பழங்களின் விதைகள், வயிறு புழுக்கள் மற்றும் X- Rays கூட இந்த பிரச்சினையை ஏற்படுத்தும்.
MOST READ: அட! இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு எப்பவுமே பிரச்சினைதாம்பா... நீங்களும் அதுதானே!