Just In
- 2 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 15 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 17 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 18 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- News
புதிய சர்ச்சை.. பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்.. மத்திய அரசு விளக்கம்
- Movies
இதுக்குத்தானா...? மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறும் வயிற்றில் இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்..! மீறி செய்தால் மரண கூட ஏற்படலாம்..!
ஒரு சில செயல்களை இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்கிற வரையறை இருக்கிறது. அதனை மீறி செய்வதால் பல விளைவுகள் நமது உடலுக்கு ஏற்படுகிறது. உடலின் தன்மையை பொருத்தே இவை நமக்கு ஆபத்தை ஏற்படுத்துமா..? இல்லையா..? என்பது தெரியும்.
நாம் வெறும் வயிற்றில் செய்கின்ற ஒரு சில செயல்கள் நமக்கு பல வித ஆபத்துகளை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த செயல்கள் ஒவ்வொரு உறுப்புகளையும் பாதிக்க செய்து மரணத்தை கூட ஏற்படுத்தும். நாம் வெறும் வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

ஏன் செய்ய கூடாது..?
காலையில் எழுந்தவுடன் நாம் எதையும் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் பல வித செயல்கள் நம்மை அறியாமலே செய்வோம். இவை எந்த வித பாதிப்பை நமக்கு தரும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். வெறும் வயிற்றில் ஒரு சில விஷயங்களை செய்தாலும், அல்லது சாப்பிட்டாலும் உறுப்புகளின் செயல்திறன் மாறுதல் அடையும்.

டீயா..? காப்பியா..?
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், வெறும் வயிற்றில் இவற்றை குடித்தால், அமில தன்மை வயிற்றில் அதிகரித்து செரிமான பிரச்சினை, மலச்சிக்கல், வாந்தி ஆகிய பின்விளைவுகளை ஏற்படும். எனவே, இதற்கு பதிலாக டீ அல்லது காபியுடன் ஏதேனும் சேர்த்து சாப்பிடுவது சற்று நல்லது.

உடற்பயிற்சி செய்யலாமா..?
உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் செய்வதால் உடல் எடை சட்டென குறைந்து விடும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்த பயிற்சி கொழுப்புகளை குறைக்காமல் தசைகளையே குறைக்கும். ஆதலால், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாமல் ஏதேனும் சிறிய அளவில் சாப்பிட்டு விட்டு பயிற்சியை தொடங்குங்கள்.

ஜிவிங் கம் வேண்டாமே..!
பலருக்கு ஜீவிங்கம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனை மற்ற நேரத்தில் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்பை விட, வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் தான் அதிகம். வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் வாயு கோளாறு, அமில தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றான வர தொடங்கும்.
MOST READ: உங்கள் விரலில் இது போன்று இருந்தால் ஆபத்தா..? இந்த பிறை சின்னம் கூறும் உண்மை என்ன...?

குடல் பிரச்சினையா..?
வெறும் வயிற்றில் இந்த செயலை நிச்சயம் செய்ய கூடாது. அதாவது, சோடாக்கள் நிறைந்த பானங்களையோ, உணவுகளையோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், குடல் பகுதியில் அதிக எரிச்சல், வாந்தி ஏற்படுத்தும் தன்மை ஏற்படும். பல நாட்கள் இது தொடர்ந்தால் குடல் புண், உடல் எடை கூடுதல், பசியின்மை போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படும்.

காரசார உணவுகளா..?
காலையில் எழுந்ததும் உணவின் மீது உள்ள காதலால் காரசாரமான உணவுகளை சாப்பிடாதீர்கள். காலை உணவில் காரசாரமான உணவுகளை சாப்பிட்டால் வயிற்றில் அமில தன்மை அதிகரிக்க கூடும். பிறகு குடல் புண்கள் ஏற்பட்டு அதிக வலியை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஜாக்கிரதை..!
நீங்கள் வெறும் வயிற்றில் பாராசிட்டமால், ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை எடுத்து கொள்ள கூடாது. இவ்வாறு செய்வதால் இவற்றின் வீரியம் அதிகரிக்க கூடும். இவை மலத்தில் ரத்த போக்கை ஏற்படுத்தி பல வித பாதிப்புகளை தருமாம். ஆதலால், மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளாதீர்கள்.

கடைக்கு செல்லாதீர்கள்..!
இது என்ன புதுசா இருக்கேனு நினைக்கிறீங்களா..?! உண்மைதாங்க... நாம் வெறும் வயிற்றில் கடைக்கு சென்றால் பார்க்கின்ற அனைத்தையும் வாங்கி அடுக்கி கொள்வோம். குறிப்பாக இனிப்பு வகை உணவுகள், அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவுகள் போன்றவற்றை வாங்க தூண்டும். எனவே வெறும் வயிற்றில் கடைக்கு செல்லாதீர்கள்.
MOST READ: ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்...!

பசி இருந்தா, நீ நீயா இருக்க மாட்ட..!
இந்த விளம்பர வாசகம் நம் அனைவருக்கும் நன்கு மனப்பாடம் ஆன ஒன்று. இது உண்மையும் கூட. நமக்கு அதிக பசி இருக்கும் நேரத்தில் நம்மை அறியாமலே பலவற்றை செய்வோம். இதற்கு காரணம் பசி தான். பசி உள்ள நேரத்தில் குறிப்பாக யாருடனும் வாக்கு வாதம் வைத்து கொள்ளாதீர்கள். இது பெரிய பிரச்சினையாக மாற கூடும்.

காலையிலே இந்த பழக்கமா..?
நவீன நாகரீகம் என்கிற பெயரில் இந்த செயலை பலர் செய்து வருகின்றனர். அதாவது, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மது அருந்தும் பழக்கம் இப்போதெல்லாம் பரவலாக எல்லோரிடமும் தொற்றி வருகின்ற ஒரு கலாச்சாரமாக உள்ளது. ஆனால், வெறும் வயிற்றில் மது அருந்தினால் கல்லீரல், இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் சிதைவடையும்.

மறவாதீர்கள்..!
மேற்சொன்ன பழக்க வழக்கங்களை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் செய்யாதீர்கள். மீறி செய்தால் இவை உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும். மேலும், வாழைப்பழம், தக்காளி, சிட்ரஸ் பழங்கள், பச்சை காய்கறிகள் போன்றவற்றையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே.