Just In
- 22 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 38 min ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 3 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
Don't Miss
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பெண்களுக்கு புற்றுநோய் உள்ளதற்கான சில அறிகுறிகள்
பெண்களுக்கு மார்பக புற்றுநோய்தான் அதிகம் ஏற்படும் என்று நினைத்தால் அது தவறானது ஏனெனில் மார்பக புற்றுநோய் தவிர்த்து பல புற்றுநோய்கள் பெண்களை தக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிந்து விட்டால
உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு காரணம் பெண்களுடைய குறைவான நோயெதிர்ப்பு சக்தியும், புற்றுநோய் பற்றிய போதிய விழிப்புணர்வும் இல்லாததும்தான்.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய்தான் அதிகம் ஏற்படும் என்று நினைத்தால் அது தவறானது ஏனெனில் மார்பக புற்றுநோய் தவிர்த்து பல புற்றுநோய்கள் பெண்களை தக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிந்து விட்டால் இவற்றை குணப்படுத்துவது எளிது. இந்த பதிவில் பெண்கள் அலட்சியமாக நினைக்க கூடாத புற்றுநோயின் சில அறிகுறிகள் என்னவென்பதை பார்க்கலாம்.
வீக்கம்
அதிகம் சாப்பிட்ட பிறகோ, நீர் குடித்த பிறகோ அல்லது மாதவிடாயின் போதோ வயிற்று பகுதியில் வீக்கம் ஏற்படுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இந்த வீக்கம் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் இந்த வீக்கம் கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். பசியின்மை, அடிவயிற்றில் வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவையும் இதன் அறிகுறியாக இருக்கலாம்.
பிறப்புறுப்பில் துர்நாற்றம்
பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுதல், அடர் நிற சிறுநீர், போன்றவை கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாகும்.இது மாதவிடாய் காலத்திலோ, அதற்கு பிறகோ ஏற்படலாம். சிலசமயம் இரத்தக்கசிவு கூட ஏற்படலாம்.
சோர்வு
உடல் உழைப்பாலோ அல்லது ஓய்வின்மையாலோ ஏற்படும் சோர்வானது இரண்டு, மூன்று நாட்களில் குணமாகிவிடும். போதுமான ஓய்வு எடுத்தபின்னும் சோர்வு குணமடையவில்லை எனில் அது லூக்கோமியா அல்லது வயிறு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவேளை லூக்கோமியவாக இருப்பின் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரித்து பின்னர் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இது அனிமியா எனப்படும். சிவப்பு அணுக்கள் உற்பத்தியின் குறைவே சோர்வுக்கு காரணமாகும்.
எடை இழப்பு
உங்களின் முயற்சி எதுவும் இன்றி உடல் எடை தானாக குறைந்தால் அதற்காக மகிழ்ச்சி அடையாதீர்கள். ஏனெனில் இது நுரையீரல், கணையம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய் காரணமாக கூட இருக்கலாம். இந்த புற்றுநோய் வந்தால் 4 முதல் 5 கிலோ வரை காரணமே இன்றி எடை இழப்பு ஏற்படும். புற்றுநோய் செல்கள் அதிகரிக்க உங்கள் ஆற்றலை எடுத்துக்கொள்வதால் உங்களுக்கு எடை இழப்பு ஏற்படலாம்.
மார்பகத்தில் மாற்றம்
மாதவிடாயின் போதோ, கர்ப்பகாலத்தின் போதோ உங்கள் மார்பகத்தில் நீங்கள் சில மாற்றங்களை உணரலாம். மார்பகத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும் புற்றுநோய்க்கான அறிகுறி அல்ல ஆனால் அதற்காக அவற்றை அலட்சியமாக விடுவது நல்லதல்ல. ஏதேனும் கட்டிகள் இருந்தாலோ, அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, சிவப்பு நிறத்தில் தடிப்பு, அரிப்பு மற்றும் மார்பகத்திற்கு அடியில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
காய்ச்சல்
காரணம் கூற இயலாத அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் லூக்கோமியா அல்லது லிம்போமா நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த இரண்டுமே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் எளிதில் பல நோய்களுக்கு ஆளாவீர்கள்.
தொடர்ச்சியான இருமல்
இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல் இருப்பின் நீங்கள் மருத்துவரை அணுகவேண்டியது அவசியமாகும். தொடர்ச்சியான இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். சிலசமயம் இது மூச்சுக்குழலில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஏற்படலாம்.
மலத்தில் இரத்தம்
குடலில் ஏற்படும் புற்றுநோய் முதலில் தெரியாவிட்டாலும் வயிற்றுவலி, மலச்சிக்கல், சோர்வு, மலத்தில் இரத்தம் போன்றவற்றின் மூலம் இதனை கண்டறியலாம். இந்த குடல் புற்றுநோய் பெருங்குடல் அல்லது மலக்குடலில் ஏற்படும். இதனால் பெருங்குடலின் அகலம் அதிகரிக்கும்.
மூச்சு திணறல்
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனால் உணவுக்குழாயின் அளவு சுருக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சில பெண்களுக்கு தொண்டையில் ஏதோ சிக்கியுள்ள உணர்வு எப்பொழுதும் இருக்கும். இந்த புற்றுநோய் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டால் நீர்ம உணவுகளை உண்பதே கடினமாகிவிடும்.