Just In
- 21 min ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 6 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
Don't Miss
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வியாதிகளைப் போக்கி புத்துணர்வு தரும் அரோமா தெரபியை பயன்படுத்தும் முறை!
ஆயுர்வேத உலகில் அரோமா தெரபியும் மிக முக்கியமான ஒன்று. அது தரும் நன்மைகளிய இந்த கட்டுரையில் காணலாம்.
சங்ககாலம்தொட்டு இன்றுவரை, தெய்வீகத் தலங்கள், விழா வைபவங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளிலும் முதன்மையான இடம் பிடிப்பது மலர்களே!
மலர்களின் மணமும் அவற்றின் அழகிய கண்ணைக்கவரும் தோற்றமும் பார்ப்போரை தம்வயப்படுத்தும் ஆற்றல்மிக்கவை என்றால் அது மிகையில்லை.
மலர்கள், அழகுக்காக மட்டுமன்றி, உடல் பிணி நீக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது என்பதை நாம் தாமரை, ரோஜா உள்ளிட்ட பலவகை மலர்களின் மருத்துவ குணங்களின் மூலம் அறிந்திருப்போம்.
பூக்களின் நறுமணம்! இதை சுவாசித்து உணர, நமது மூக்குக்கு நுகரும் சக்தியைக் கொடுத்தது மட்டுமல்லாமல், அவற்றின் மூலம் நமது சோர்வை நீக்கி, உற்சாகம், உடல் வேதனைகள் தீர்த்தல் போன்ற பல அரிய நற்பலன்களையும் தந்திருக்கிறார் இறைவன்.
நமது மூக்கில் உள்ள உணர்ச்சியை அறியும் செல்கள் மூலம் நாம் நுகரும் மணத்தை மூளையில் உள்ள செல்கள் உள்வாங்கி, நல்ல மணத்தை, மகிழ்ச்சியான மனநிலை மூலமும், கெட்ட மணத்தை சோர்வான மனநிலை முலமும் நமக்கு உணர்த்துகின்றன. மேலும் சில செயற்கை மணங்கள் நமக்கு தலைவலி உள்ளிட்ட ஒவ்வாமையை உண்டாக்கும், இதன்மூலம் வாசனைகள், மனித உடலை ஆள்வதை உணரலாம்.
வாசனைமருத்துவம், பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமதுதேசத்தில் வழக்கத்தில் இருந்திருந்தாலும், தற்கால நவநாகரீக மங்கையரின் முக,உடல் அழகுக்கலையில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், தற்போது பிரபலமாகி வருகிறது.
வாசனைப்பூக்கள் மூலம் தயாராகும் எசன்ஷியல் ஆயில் எனப்படும் பூத்தைலம், நிறைய மருத்துவ பலன்கள் கொண்டது. அரோமாதெரபிக்கு இதுபோன்ற ஆயிலே, மூலமாகும்.
அரோமா தெரபியின் மூலம் உடல் அழகை பொலிவாக்க, தடுமாறும் மனதை அமைதிப்படுத்த, உடலில் அசுத்தத்தை நீக்கி, இரத்தத்தை சீராக்க, பயன்படுத்தலாம் என்கின்றனர்.
நாம் சிலஇடங்களுக்கு அலுவல் நிமித்தமாகவோ அல்லது வேறு காரணமாகவோ செல்லும்போது, திடீரென அந்தச்சூழல் நமக்கு பரிச்சயமானதுபோல தோன்றும், அந்த இடங்களில் காற்றில் கலந்திருக்கும் நறுமணம், நம் மனதை அமைதியாக்கும்.
இயற்கையான மணமூட்டிகளான பச்சைக்கற்பூரம், இறைவனுக்கு அணிவிக்கும் நறுமணம்கொண்ட மலர்கள், சாம்பிராணி மற்றும் ஊதுவத்திகளின் மணங்கள் இணைந்த கோவில்களின் தெய்வீக சூழல்கள், மனதுக்கு அமைதியை அளித்து, நம்மை அந்த சூழ்நிலையில் ஒன்ற வைக்கின்றன.
மனதையும் உடலையும் ஒருங்கிணைக்க, இந்த நறுமணங்களையே வகைப்படுத்தி, மனதின், உடலின் பல்வேறு நிலையிலான வியாதிகளை தீர்க்கலாம், மனம், முகம் மற்றும் உடல் அழகை பொலிவாக்கலாம் என்கிறது, அரோமா தெரபி.