வயிற்றில் கேஸ் பிரச்சனை ஏற்பட்டால் உடனே தவிர்க்க இதை செஞ்சு பாருங்க!

செரிமானம் ஆகாமல் வயிற்றில் சேரும் கேஸ் தான் தொப்பைக்கு முதன்மையான காரணம். இதை எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் தீர்க்கலாம்

செரிமானம் ஆகாமல் வயிற்றில் சேரும் கேஸ் தான் தொப்பைக்கு முதன்மையான காரணம். இன்று கணினி முன்பாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, துரித உணவுகளை எடுத்துக் கொள்வது, உடல் உழைப்பு என்பதே இல்லாமல் இருப்பது போன்றவற்றால் வயிற்றில் கேஸ் சேருவது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. உணவு வகைகளை குறைத்துவிட்டு நீராகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள், சூப், கஞ்சி, ஜூஸ் போன்று எளிதில் ஜீரணம் ஆககூடியவற்றை குடியுங்கள்.

remedies-stop-bloating

கடுகு கேஸ்ட்ரிக் பிரச்சனைகளை தீரப்பதில் வல்லது அதனால் தான் எல்லா உணவுகளிலும் தாளிக்க பயன்படுத்துகிறார்கள். கடுகு சூப் செய்து குடிக்கலாம்.இதைவிட நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில அவசியமான குறிப்புகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன செய்யலாம் :

என்ன செய்யலாம் :

வயிற்றில் கேஸ் சேர்ந்து வயிறு உப்பலாக இருந்தால் முதலில் தரையில் படுத்துக் கொள்ளுங்கள். தலையை உயர்த்தி உங்களின் உடல் கீழ் நோக்கி இருக்குமாறு தரையில் படுங்கள். கட்டில்,சோஃபா போன்றவற்றில் படுப்பதை தவிர்த்திடுங்கள்.

நீராகாரம் எடுத்துக் கொள்ளுங்கள் :

உணவு வகைகளை குறைத்துவிட்டு நீராகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள், சூப், கஞ்சி, ஜூஸ் போன்று எளிதில் ஜீரணம் ஆககூடியவற்றை குடியுங்கள்.

தாளித்தல் :

கடுகு கேஸ்ட்ரிக் பிரச்சனைகளை தீரப்பதில் வல்லது அதனால் தான் எல்லா உணவுகளிலும் தாளிக்க பயன்படுத்துகிறார்கள். கடுகு சூப் செய்து குடிக்கலாம்.

சூடான பானம் :

சூடான பானங்களை குடியுங்கள்டீ, காபி, க்ரீன் டீ போன்றவை குடிக்கலாம். இஞ்சி சாறு, இஞ்சி தேநீர் போன்றவற்றையும் குடிக்கலாம்.

பெருஞ்சீரகம் :

பெருஞ்சீரகம் :

பெருஞ்சீரகம் இதற்கு உடனடி தீர்வு வழங்கும். தண்ணீரை சூடாக்கும் போது அதில் ஒரு ஒரு சிட்டிகை பெருஞ்சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள் இதை அப்படியே குடிக்கலாம் அல்லது இதனோடு சிறிது புதினா இலையையும் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு :

பூண்டு :

உணவு ஜீரணத்திற்கும், கேஸ் ப்ராப்ளத்திற்கும் பூண்டு பெரும் பங்காற்றும். இரண்டு மூன்று பூண்டுகளை நெருப்பில் சுட்டு அப்படியே சாப்பிடலாம். அல்லது தண்ணீரில் பூண்டு,சீரகம்,மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடியுங்கள்.

பெருங்காயம் :

பெருங்காயம் :

நீரில் சிறிது பெருங்காயத்தை கலந்து குடிக்கலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி குடிக்கலாம். அதற்கு மேல் வேண்டாம். அதிகமாக குடித்தால் இது வயிற்றுப் போக்கை ஏற்படுத்திடும்.

இலவங்கப்பட்டை :

இலவங்கப்பட்டை :

இலவங்கப்பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது இலவங்கப்பட்டையை வறுத்துப் பொடி செய்து கொள்ளுங்கள் அதனை பாலில் கலந்து கூட குடிக்கலாம். இது உடனடி நிவாரணத்திற்கு கை கொடுக்கும்.

ஜங்க் உணவுகள் :

ஜங்க் உணவுகள் :

வயிறு உப்புசமாக இருக்கும் போது கண்டிப்பாக ஜங்க் உணவுகளை சாப்பிடக்கூடாது. அதே போல அதிக இனிப்புள்ள உணவுகள், கொழுப்பு நிறைந்தவை ஆகியவற்றையும் தவிர்த்துவிடுவது நல்லது.

குளிர வைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நன்று. இதே போல பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவையும் தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் இவை செரிமானத்தை தாமதப்படுத்தி வயிற்றில் பாக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் வயிற்றில் கேஸ் தொல்லை அதிகரிக்கும்.

ஃபைபர் :

ஃபைபர் :

அதிகமான ஃபைபர் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது உணவை சீக்கிரமாக ஜீரணமாக்க வைத்திடும். ஒரே நேரத்தில் மொத்தமாக இதைச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தானியங்கள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகள் :

காய்கறிகள் :

கேஸ் பிரச்சனை ஏற்பட்ட நேரத்தில் பச்சையான காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்த்து சமைத்த வேக வைத்த காய்கறிகளை சாப்பிடுவதே நல்லது. சமைக்கும் போது காய்கறிகளில் இருக்கக்கூடிய சில என்சைம்கள் அழிந்திடும். இதனால் வயிற்றுக்கு கூடுதல் சுமை ஏற்படாது அதே நேரத்தில் எளிதில் ஜீரணமாகும்.

காய்கறிகளை சமைக்கும் போது ஆவியிலேயே வேக வைத்திடுங்கள் தண்ணீரில் வேக வைப்பதினால் சில தண்ணீரில் கரையக்கூடிய நியூட்ரிசியன்கள் கரைந்திடும்.

டிரிங்க்ஸ் :

டிரிங்க்ஸ் :

மற்ற நாட்களை விட வாயுத் தொல்லை ஏற்படும் போது நீங்கள் குடிக்கும் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பழம், பழச்சாறுகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள், காபி டீ போன்ற பானங்களை தவிர்த்திடுங்கள்.

சோடா, செயற்கை சுவையூட்டிகள் கொண்ட ஜூஸ்கள்,மது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்.

தவிர்ப்பது நல்லது :

தவிர்ப்பது நல்லது :

வயிற்று தொல்லை ஏற்பட்டால் முதலில் உங்களின் டயட்டில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஒரு நாளைக்கு உங்களுக்கு 200மில்லி கிராம் உப்பு சேர்த்துக் கொண்டாலே போதுமானது. அதையும் தாண்டி அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அதன் ஆரம்ப கட்ட அறிகுறிகள் இப்படித்தான் தெரிந்திடும்.

அதிக காரமிக்க, மசாலா உணவுகளை சில நாட்களுக்கு ஒத்தி வைத்திடுங்கள். இது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரித்திடும்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் வயிறு உப்புசம் போன்ற உணர்வு ஏற்படும் இதை தவிர்ப்பதற்கு நீங்கள் கண்டிப்பாக எழுந்து நடப்பதோ அல்லது சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வதோ அவசியமாகும்.

இது உணவை செரிமானமாக்க உதவுவதுடன் வயிறு உப்புசத்தை தவிர்க்க பெரிதும் உதவிடும்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சியோ அல்லது வேறு ஏதேனும் பயிற்சியோ எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

உண்ணும் முறை :

உண்ணும் முறை :

யாரும் இதுவும் ஓர் காரணமா என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். உணவு சாப்பிடும் முறையும் இதற்கு ஓர் காரணமாக இருக்கிறது, சாப்பிடும் போது மென்று சாப்பிடாமல் அவசர அவசரமாக விழுங்குவதால் காற்றையும் சேர்த்தே வயிற்றுக்குள் செலுத்துகிறது.

ஒரு கட்டத்தில் வயிற்றில் அளவுக்கு அதிகமான காற்று சேர்வதே உங்களுக்கு வயிறு உப்புசத்தை ஏற்படுத்துகிறது. சாப்பிடும் போது மென்று நிதானமாக சாப்பிடுவது, வேறு வேலைகளில் கவனம் செலுத்தாமல் டிவி பார்த்துக் கொண்டே அல்லது மொபைல் பார்த்துக் கொண்டே சாப்பிடாமல் கவனமாக சாப்பிடுவதன் மூலமாகவே இந்த பிரச்சனையை தவிர்த்திடலாம்.

என்னென்ன சாப்பிடலாம் :

என்னென்ன சாப்பிடலாம் :

இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு உணவு சாப்பிடவே பிடிக்காது, மேலும் மேலும் ஹெவியானதைப் போன்ற உணர்வே மேலோங்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மேலே சொன்னவற்றை கடைபிடிப்பதோடு சிலவற்றை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். வாழைப்பழம், தயிர், செலரி, வெள்ளரி,பப்பாளிப்பழம்,எலுமிச்சை, வெந்தையம்,இஞ்சி ஆகியவற்றை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion