Just In
- 2 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 7 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 8 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 8 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- Movies கனகாவின் காதலர் இவர்தான்.. போலீஸில் மாட்டிவிட பார்த்தார்.. செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாவை ஏமாற்றி வந்த பெப்ஸி, கோலாவின் பித்தலாட்டம் அம்பலம்!
சமீபத்திய ஆய்வில், சாஃட் ட்ரின்க்-களில் அளவுக்கு அதிகமாக பூச்சி கொல்லி கலப்பு இருக்கிறது என கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்திய ஆய்வில் இந்திய தரக்கட்டுப்பாடு ஆணையம் குறிப்பிட்ட அளவை விட, 24 மடங்கு அதிக பூச்சிக்கொல்லி சேர்ப்பு சாஃப்ட் ட்ரிங்க்ஸ்-ல் உள்ளதென கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய தரக்கட்டுப்பாடு ஆணையம் (BIS) தர மதிப்பை மீறி 140 மடங்கு அளவில் லிண்டேன் எனும் புற்றுநோய் உண்டாக்கும் பூச்சிக்கொல்லி சேர்க்கப்பட்டு வருகிறது என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
ஹெப்ட்ச்சலார் எனும் பூச்சிக்கொல்லி வகை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. இதுவும் 71% அளவில் சோதனைக்குட்படுத்தப்பட்ட மாதிரிகளில் ஆய்வாளர்கள் கண்டப்படித்துள்ளனர். இதுவும் இந்திய தரக்கட்டுப்பாடு தர மதிப்புக்கு எதிராக சேர்க்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.ஈ!
மத்திய அறிவியல் சுகாதார அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட புதிய ரிப்போர்ட்ட்டில் இப்போது சந்தையில் விற்கப்படும் பல சாஃப்ட் ட்ரிங்க்ஸ்-ல் அதிகளவில் பூச்சிக்கொல்லி கலப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 பிராண்டுகளின் 25 வகை பொருட்கள்!
இப்போது சந்தையில் பானம் விற்றுக் கொண்டிருக்கும் 11 பிராண்டுகளின் 25 சாஃப்ட் ட்ரிங்க்ஸ் பொருட்களில் பூச்சிக்கொல்லி அளவிற்கு அதிகமாக சேர்க்கப்படுகிறது. முக்கியமாக 12 மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கோகோ கோலா, பெப்ஸி நிறுவனங்களின் தொழிற்சாலைகளில்.
கோகோ கோலா, கோல்கட்டா!
கோல்கட்டாவில் இயங்கி வரும் கோகோ கோலா தொழிற்சாலையில் லிண்டேன் எனும் பூச்சிக்கொல்லி 140 மடங்கு அதிகமாக சேர்க்கப்படுகிறது என்றும், இது புற்றுநோய் செல்களை உண்டாக்கும் தன்மை கொண்டது என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
கோகோ கோலா, தானே!
தானேவில் இருக்கும் கோகோ கோலா தொழிற்சாலையில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இந்திய தரக்கட்டுப்பாடு ஆணையத்தின் தர மதிப்பை மீறி 200 மடங்கு அதிகமாக neurotoxin, Chlorpyrifos சேர்க்கப்படுகிறது.
பாதுகாப்பற்றது, ஆரோக்கியற்றது!
இந்த பூச்சிக் கொல்லிகளின் கலப்பு முழுக்க, முழுக்க பாதிகாப்பற்றது, ஆரோக்கியமற்றது என மத்திய அறிவியல், சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
விளம்பரம்!
சமீபத்தில் தனது விளம்பரத்திலேயே கோகோ கோலா நிறுவனம் இது குழந்தைகளுக்கு உகந்த பானம் அல்ல என குறிப்பிடிருந்தது கவனிக்கத்தக்கது.