Latest Updates
-
கேஸ் அதிக தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி... இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
ஐம்புலன்களைத் தாண்டி மனிதர்களுக்கு இருக்கும் இந்த புலன்களை பற்றித் தெரியுமா!
மனிதர்களிடம் ஐம்புலன்களை தவிர ஏராளமான புலன்கள் இருக்கிறது அவற்றில் சில பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
மனிதர்களுக்கு ஐம்புலன்கள் இருக்கும் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது, சில ஆராய்ச்சிகளுக்கு பிறகு ஒன்பது புலன்கள் இருக்கிறது என்றார்கள். ஆனால் மனிதர்களுக்கு 21 புலன்கள் இருப்பதாக ஆராய்சியாளர்களர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மூளையில் கிடைக்கப்பெறும் தகவல்களை வைத்து தான் இந்த புலன்கள் எல்லாமே இயங்குகிறது. மனிதர்களுக்கு பார்ப்பது,கேட்பது, நுகர்வது, பேசுவது, உணர்வது தவிர வேறு என்ன புலன்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தெர்மோசெப்ஷன் :
மனிதர்களால் சூட்டையும் குளிரையும் பிரித்துணர முடியும். உணர்சியில் வேறுபாடு இருந்தால் அதனை உணர்வார்கள்.

தேவை :
உடலுக்கு தேவைப்படும் போது தண்ணீர் தாகம், பசியுணர்வு உண்டு. இந்நேரத்திற்கு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட அளவு போதும் என்ற நிறைவான உணர்வு தரும்.
தேவை என்பதும் போதும் என்பதையும் நினைவுப்படுத்தும்.

கீமோரிசிப்டார் :
மூளையில் மெடுலா என்னும் இடத்தில் வருகின்ற ரத்த ஓட்டத்திற்கு ஏற்ப இந்த உணர்வு மேலோங்கும். சில சமயங்களில் ஹார்மோன் மாற்றங்கள், எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் கூட இந்த உணர்வு வரலாம். இந்த உணர்வு மேலோங்கினால் வாந்தி வருவது போலத் தோன்றும்.

ஸ்ட்ரெச் ரெசிப்டார் :
இது உள்ளே தோன்றிடும் உணர்வு இதன் அறிகுறிகள், விளைவுகள் மட்டுமே நம்மால் உணர முடியும். குடல், வயிறு,சிறுநீர்ப்பை,போன்ற இடங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அஜீரணம் ஆகாமல் இருந்தால் அதனை உணர்த்த இந்த ஸ்ட்ரெச் ரெசிப்டார் தேவை.
அதன் அறிகுறியாக நமக்கு வயிற்று வலி தெரியும்.

ஈக்வலிப்ரியோசெப்சன் :
இந்த நம் உடலை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று உதவிடுகிறது. புவியீர்ப்பு விசைக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் நம் உடல் நாம் மூளை இடுகின்ற கட்டளைகளை கேட்டபடி நடக்க இந்த உணர்வு பயன்படுகிறது.

நாசிசெப்ஷன் :
இதனை ஒரு விதத்தில் வலி என்று குறிப்பிடலாம். எளிதாக வலி என்று சொல்வதை விட வலியை நம்மால் இது எத்தகைய வலி என்பதை பிரித்து உணர வைக்கும். சருமத்தில், எலும்பில் உள்ளுறுப்புகளில் என்று நாம் வலியை பிரித்து உணர முடியும்.



Click it and Unblock the Notifications











