Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
பைல்ஸ் அல்லது மூல நோயில் இருந்து விரைவில் விடுபட உதவும் ஓர் அற்புத வழி!
இங்கு பைல்ஸ் அல்லது மூல நோயில் இருந்து விரைவில் விடுபட உதவும் ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மூல நோய் இருப்பவர்கள் கோடைக்காலத்தில் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். மூல நோய் ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம். அதில் மலச்சிக்கல், உடல் பருமன், பரம்பரை நோய்கள், எளிதில் செரிமானமாகாத உணவுகளை அதிகம் உட்கொள்வது மற்றும் கர்ப்பம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மூல நோயில் இருந்து விடுபட நார்ச்சத்து மிகுந்த சரிவிகித டயட்டுடன் அன்றாட உடற்பயிற்சி மிகவும் சிறந்த வழியாகும். அதோடு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியைப் பின்பற்றினால், மூல நோயினால் சந்திக்கும் அவஸ்தையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
சரி, இப்போது மூல நோயில் இருந்து எளிதில் விடுபட உதவும் இயற்கை வழி குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:
கற்றாழை இலை - 1
அலுமினிய தகடு

செய்முறை #1
முதலில் கற்றாழை இலையின் மேல் உள்ள பச்சை தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் அந்த ஒவ்வொரு துண்டுகளையும் அலுமினிய தகடு கொண்டு சுற்றி, ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.

செய்முறை #3
பின்பு இரவில் படுக்கும் முன் உறைய வைத்த ஒரு கற்றாழை துண்டை எடுத்து, அலுமினிய தகடை நீக்கி, பின் அதை குத வாயில் சொருக வேண்டும்.

குறிப்பு
இந்த செயலை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மூல நோயால் சந்திக்கும் அசௌகரியங்களில் இருந்து விடுபட்டிருப்பதைக் காணலாம்.

மூல நோய் அசௌகரியங்கள்
மூல நோயால் சந்திக்கும் அசௌகரியங்கள் என்பது, வலி, எரிச்சல், இரத்தம் வடிதல், குத வாயின் வழியே சளி வெளியேற்றம், குத வாயில் அரிப்பு போன்றவையாகும்.



Click it and Unblock the Notifications