Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இஞ்சி ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள்!
நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதில் இஞ்சியையும், மஞ்சளையும் கொண்டு பானம் தயாரித்துக் குடித்தால், உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
பொதுவாக உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் நமக்கு ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு இயற்கை பானங்கள் உதவி புரியும் என்பது தெரியுமா? அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது.
நம் முன்னோர்கள் கூட தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் தீர்வு கண்டார்கள். அதில் அதிகம் பயன்படுத்திய பொருட்கள் தான் இஞ்சி மற்றும் மஞ்சள். இந்த இரண்டையும் கொண்டு ஓர் பானம் தயாரித்துக் குடித்தால், நம் உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இங்கு அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும், அந்த பானத்தைக் குடித்தால் பெறும் நன்மைகள் குறித்தும் காணலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி - சிறிது
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
தேன் - சிறிது

தயாரிக்கும் முறை
மிக்ஸியில் இஞ்சி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சிறிது தேன் கலக்கவும். இந்த பானத்தை அவ்வப்போது காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நன்மை #1
இந்த பானம் உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் மற்றும் இரத்தத்தில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

நன்மை #2
மஞ்சள் கலந்த இஞ்சி ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. இதனைக் குடித்தால், அடிக்கடி வரும் தலைவலியைத் தடுப்பதோடு, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் விடுவிக்கும்.

நன்மை #3
இஞ்சி மற்றும் மஞ்சள் ஜூஸ், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவைக் குறைத்து, குமட்டல் உணர்வைக் குறைக்கும். மேலும் கர்ப்பிணிகள் இதைக் குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வு தடுக்கப்படும். இருந்தாலும் இதை கர்ப்பிணிகள் பருகும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

நன்மை #4
உடலினுள் உள்ள உட்காயங்கள் மற்றும் உடல் வலியை, இந்த பானம் குடிப்பதன் மூலம் தடுக்கலாம். குறிப்பாக உடற்பயிற்சிக்கு பின் இந்த பானத்தைக் குடிப்பது நல்லது.

நன்மை #5
இந்த இயற்கை பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரித்து, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

நன்மை #6
இஞ்சி மஞ்சள் பானம், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை நடுநிலையாக்கி, நாள்பட்ட செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

நன்மை #7
மஞ்சள் கலந்த இஞ்சி சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியைக் குறைக்கும்.



Click it and Unblock the Notifications