Latest Updates
-
ஜூலையில் 3 முறை உருவாகும் யுதி யோகம்: இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... -
சனி-கேது உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் வீட்டில் அடிக்கடி பல்லியை பார்ப்பது நல்லதா? கெட்டதா? சாஸ்திரம் சொல்லும் உண்மை என்ன? -
ஆறு விரல்களை கொண்டவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா? -
5 தக்காளி இருந்தா இந்த செட்டிநாடு தக்காளி கொத்தமல்லி சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
தலைமுடி ஆரோக்கியமா, அடர்த்தியா வளரணுமா? அப்ப கிச்சனில் உள்ள இந்த நேச்சுரல் ஷாம்புக்களை ட்ரை பண்ணுங்க.. -
30 வயதுக்கு பின் கோடீஸ்வரராகும் யோகமுள்ள 4 நட்சத்திரங்கள் - நீங்க பிறந்த நட்சத்திரம் இதுல இருக்கா? -
தினமும் காபி, டீ-க்கு பதிலா.. ஈவ்னிங் டைம்-ல கேரட் பால் செஞ்சு குடிங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
உங்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதற்கு காரணம் இதுதானாம் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி - ஷாக் ஆகாதீங்க -
ஜூலை இறுதியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
இஞ்சி ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள்!
நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதில் இஞ்சியையும், மஞ்சளையும் கொண்டு பானம் தயாரித்துக் குடித்தால், உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
பொதுவாக உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் நமக்கு ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு இயற்கை பானங்கள் உதவி புரியும் என்பது தெரியுமா? அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது.
நம் முன்னோர்கள் கூட தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் தீர்வு கண்டார்கள். அதில் அதிகம் பயன்படுத்திய பொருட்கள் தான் இஞ்சி மற்றும் மஞ்சள். இந்த இரண்டையும் கொண்டு ஓர் பானம் தயாரித்துக் குடித்தால், நம் உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இங்கு அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும், அந்த பானத்தைக் குடித்தால் பெறும் நன்மைகள் குறித்தும் காணலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி - சிறிது
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
தேன் - சிறிது

தயாரிக்கும் முறை
மிக்ஸியில் இஞ்சி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சிறிது தேன் கலக்கவும். இந்த பானத்தை அவ்வப்போது காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நன்மை #1
இந்த பானம் உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் மற்றும் இரத்தத்தில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

நன்மை #2
மஞ்சள் கலந்த இஞ்சி ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. இதனைக் குடித்தால், அடிக்கடி வரும் தலைவலியைத் தடுப்பதோடு, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் விடுவிக்கும்.

நன்மை #3
இஞ்சி மற்றும் மஞ்சள் ஜூஸ், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவைக் குறைத்து, குமட்டல் உணர்வைக் குறைக்கும். மேலும் கர்ப்பிணிகள் இதைக் குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வு தடுக்கப்படும். இருந்தாலும் இதை கர்ப்பிணிகள் பருகும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

நன்மை #4
உடலினுள் உள்ள உட்காயங்கள் மற்றும் உடல் வலியை, இந்த பானம் குடிப்பதன் மூலம் தடுக்கலாம். குறிப்பாக உடற்பயிற்சிக்கு பின் இந்த பானத்தைக் குடிப்பது நல்லது.

நன்மை #5
இந்த இயற்கை பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரித்து, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

நன்மை #6
இஞ்சி மஞ்சள் பானம், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை நடுநிலையாக்கி, நாள்பட்ட செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

நன்மை #7
மஞ்சள் கலந்த இஞ்சி சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியைக் குறைக்கும்.



Click it and Unblock the Notifications