Latest Updates
-
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா?
உணவில் பெருங்காயத் தூள் சேர்ப்பதால் பெறும் நன்மைகள்!
அன்றாடம் சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தும் ஓர் பொருள் தான் பெருங்காயத் தூள். இந்த பெருங்காயத் தூள் பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதனால் தான் சமையலில் அதனை சேர்த்து வருகிறோம்.
பெருங்காயத் தூளில் ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நியாசின், கரோட்டீன், ரிபோஃப்ளேவின் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஆன்டி-வைரல் போன்றவையும் உள்ளது.
இப்போது உணவில் பெருங்காயத் தூளை சேர்ப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். இனிமேல், அதன் நன்மை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

சுவாச கோளாறுகள்
பெருங்காயத் தூளில் உள்ள ஆன்டி-பயாடிக், ஆன்டி-வைரல், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவற்றினால் சுவாசக் கோளாறுகளான ஆஸ்துமா, வறட்சி இருமல் போன்றவை குணமாகும். மேலும் இது நெஞ்சு சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும். அதற்கு பெருங்காயத் தூளில், சுக்குப் பொடி மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் மூன்று முறை உட்கொண்டு வாருங்கள்.

வயிற்று பிரச்சனைகள்
பெருங்காயத் தூள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் குணமாக்க உதவும். அதில் செரிமானமின்மை, வயிற்று பொருமல், வயிற்றுப்புழுக்கள், சீரற்ற குடலியக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆகவே தினமும் சமைக்கும் போது உணவில் தவறாமல் பெருங்காயத் தூளை சேர்த்து வாருங்கள்.

தலைவலி
பெருங்காயத் தூளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மையினால், இது அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும். உங்களுக்கு தினமும் தலைவலி கடுமையாக வருமாயின், ஒரு டம்ளர் நீரில் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, தினமும் 3 முறை குடித்து வாருங்கள்.

வாய் பிரச்சனைகள்
பெருங்காயத் தூள் பல் வலி மற்றும் ஈறு நோய்களில் இருந்தும் நல்ல பாதுகாப்பு அளிக்கும். முக்கியமாக இது ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுக்கும்.

காது வலி
பெருங்காயத் தூள் காது வலியில் இருந்து விடுதலை அளிக்கும். அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் பெருங்காயத் தூளை சேர்த்து, அதனை காதில் சில துளிகள் விட காது வலி குறையும்.

புற்றுநோய்
பெருங்காயத் தூளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழித்து, ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து உடலைப் பாதுகாக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், உணவில் பெருங்காயத் தூளை தவறாமல் சேர்த்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications











