Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க யாரையும் நம்பாமல் இருப்பதுதான் நல்லது -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும்
இளம் வயதில் உங்கள் பார்வை திறன் குறைவதற்கான 6 முக்கிய காரணங்கள் என்ன என்று தெரியுமா?
கண் இந்த உலகத்தை பார்க்க எவ்வளவு முக்கியம் என்பதை பார்வை இழந்தவர்கள் உணர்வார்கள். எதுவும் இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை.
இப்போதெல்லாம் 4 வயது குழந்தையும் கண்ணாடி போடும் நிலைக்கு தள்ள்ப்படுகிறார்கள். 35 வயதிற்கு மேல் 60 % மேலான மக்கள் கண்பார்வை குறைப்பாட்டிற்கு ஆளாகிறார்கள்.
இதற்கு வெறும் மரபணு காரணமட்டுமில்லை. நமது பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையுமே குற்றவாளிகள். சிறு வயதிலேயே கண்பார்வை குறைவதற்கு என்ன காரணங்களை கூறலாம்? தொடந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எப்போதும் திரையை பார்க்கறீர்களா?
கம்ப்யூட்டர், மொபைல், லேப்டாப், டிவி என எல்லாம் மாறி மாறி நாம் தொடர்ந்து அவற்றின் சக்தி வாய்ந்த திரையை உற்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படி தொடர்ந்து 400 நிமிடங்கள் இந்த திரைகளை பார்ப்பதால் கண் பார்வை சிரமத்திற்கு ( digital eye strain- DES) ஆளாகிறோம்.
இதனால் கண் வலி, கண் மங்கலாக தெரிவது ஆகிய பிரச்சனைகளை உருவாக்குகிறது.
அதிர்ஷடவசமாக இந்த பிரச்சனையை நீங்களே சுலபமாக தீர்த்துக் கொள்ளலாம். 20-20- 20 என்ற கொள்கையை பின்பற்றுங்கள்.
20 நிமிடம் திரையை பார்த்தால் 20 அடி நடந்துவிட்டு வரவும் அல்லது 20 நொடிகள் கண்களை மூடுங்கள். இதனால் ரெட்டினா சிரமத்திற்குள்ளாவதை தடுக்கலாம்.

காண்டாக்ட் லென்ஸ் அதிக நேரம் போடுகிறீர்களா?
நாள் முழுவதும் காண்டாக்ட் லென்ஸ் போடுகிறீர்களென்றால் உங்கள் கண் அதிக வறட்சியாகும். அழுக்கு தூசிகள் எளிதில் கான்டாக்ட் லென்சில் படியும்.
இது கார்னியாவை பாதித்து பார்வை மங்கலாகிப் போக் வாய்ப்புகள் அதிகம். காண்டாக்ட் லென்ஸ் எப்போதும் ஆபத்தை உண்டாக்குபவை. ஆகவே லென்ஸை எடுத்துவிட்டு கண்ணாடி போடுவது நல்லது.

கார்னியாவில் பிரச்சனை :
உங்கள் கார்னியாவில் கீறல் விழுந்தால் அது உங்கள் பார்வை திறனை பாதிக்கும்.
தெரியாமல் நகத்தினால் கீறல் அல்லது காயம் பட்டிருந்தால் கண்ணில் வலி, உறுத்தல் தொடர்ந்து இருக்கும். கண் சிவந்து எரிச்சலோடு இருக்கும்.
மண் விழுந்தது போல் உணர்வு இருக்கும். இதனை கவனிக்காமல் விடும்போது கண்பார்வை குறைய வாய்ப்புகள் அதிகம் . உடனடியாக மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

கர்ப்பிணிகள் கவனிக்க :
கர்ப்பத்தின்போது சிலருக்கு இரண்டிரண்டு காட்சிகளாக தெரியும். மங்கலாக பார்வை தெரியும்.
இதற்கு காரணம் கர்ப்பத்தின்போது ஹார்மோன் மாற்றத்தால் கண்ணின் பின்பகுதியில் சுரக்கும் திரவத்தில் மாறுபாடு உண்டாகும்போது இந்த பிரச்சனை உண்டாகும்.
குழந்தை பிறந்ததும் இந்த பாதிப்பு நீங்கினாலும், அடிக்கடி கண்கள் வறண்டு போகும்.

அதிக மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறீர்களா?
அலர்ஜி, மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்த அழுத்தத்திற்காக மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் கண்ணீர் சுரப்பை தடுத்துவிடும்.
இதனால் கண்கள் அதிக வறட்சி அடைந்து பாதிப்பை உண்டாக்கும். கண் பார்வை மங்குதல், வலி, சிவந்து போதல் , ஆகிய பிரச்சனைகள் உண்டாகும்.

க்ளாகோமா :
இந்த பாதிப்பில் அதிக திரவம் சுரந்து அது கண் நரம்புகளை பாதிக்கும். இதனால் கண் பார்வை இழக்க நேரிடும். க்ளகோமா குணப்படுத்தக் கூடியதல்ல.
ஆனால் ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை கொடுக்கும்போது கண்பார்வை இழக்காமல் காக்க முடியும்.



Click it and Unblock the Notifications