Latest Updates
-
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்!
கடந்த 10, 20 வருடங்களாக கொடிய வகையில் ஏமாற்றப்பட்டு வருகிறோம்!
காலையில் நீங்கள் பல் துலக்குவதில் இருந்து இரவு உண்ணும் உணவு வரை அனைத்துலும் மறைமுகமாக பல காலமாக ஏமார்ந்து வருகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? எங்கோ செய்தியில் படித்து கூறியது போல இருந்த புற்றுநோய் இன்று அக்கம், பக்கத்து வீடுகளை வரை நெருங்கி விட்டது.
ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
பரம்பரை வியாதி எனக் கூறப்பட்ட சர்க்கரை நோய் இன்று வீட்டில் இருக்கும் அனைவரையும் தாக்கும் நோயாக உருவாகிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன? சரியாக ஒவ்வொரு முறையும் ஆண்டு பட்ஜெட் தீர்வு செய்யும் போது புதியதாக ஓர் வைரஸ் தாக்கம் உண்டாவது ஏன்? இவற்றை பற்றி என்றாவது நீங்கள் யோசித்து உண்டா?
ஆரோக்கியத்தை சீரழிக்கும் அழகு சாதனப் பொருட்கள்!

மரபணு மாற்றப்பட்ட விதைகள்
இன்று நாம் உண்டு வரும் பெரும்பாலான காய்கறி, பழங்கள் மரபணு மாற்றப்பட்டவை. பணத்திற்காக, கொள்ளை லாபத்திற்காக நச்சு, இரசாயனப் பொருள் கலப்புள்ள விதைகள் விற்கப்படுகின்றன.

தேனீக்கள்
விவசாயத்தின் தோழனான தேனீக்கள் கோடிக்கணக்கில் இறப்பது ஏன்? இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். மரபணு மாற்றப்பட்ட விதைகளால் விளைந்த உணவுகளால் தேனீக்கள் அதிகளவில் இறக்கின்றன. மேலும் இவை தான் மனிதர்கள் மத்தியில் புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.

பொருளாதாரம்
சரியாக ஒவ்வொரு முறையும் உலகநாடுகள் அவரவர் ஆண்டு பட்ஜெட், துறை சார்ந்த நிதி ஒதுக்கும் தருவாயில் ஏதேனும் ஒரு புதிய வைரஸ் சார்ந்த நோய்கள் பரவுவது / அதிகரிப்பது ஏன்?

மருத்துவ போர்
முன்பெல்லாம் நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இன்று நோயை கண்டுபிடித்து வளரும் மற்றும் ஏழை நாடுகளில் அதை பரவ செய்து மருத்துவ உலகம் பணம் சம்பாதித்து வருகிறது. உண்மையில் கண்ணுக்கு தெரியாமல் நடந்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலகப்போர் இது தான்.

புற்றுநோய்
எங்கோ ஏதோ ஊரில், நண்பருக்கு தெரிந்தவரின் உறவினர் எவருக்கோ புற்றுநோய் என்று கேள்விப்பட்டு வந்தோம். ஆனால் இன்று? நமக்கே நேரடியாக தெரிந்தவர், நண்பர், ஏன் நம் வீட்டு நபருக்கே கூட புற்றுநோய் இருக்கிறது என்பது மிக சாதாரணமாக மாறி இருப்பதற்கு என்ன காரணம்?

உணவும், அழகு சாதன பொருட்களும்
பதப்படுத்தப்பட்ட உணவுகள், பூச்சி மருந்து அடிக்கப்பட்ட காய்கறி பழங்கள், தீய இரசாயனங்கள் கலப்பு செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள் என நமக்கே தெரியாமல், நாம் பயன்படுத்தி வரும் இவற்றால் நாள்பட உடலில் புற்றுநோய் செல்களும், கட்டிகளும் உண்டாகின்றன.

நீரிழிவு
20 வருடங்கள் முன்பு வரை சர்க்கரை நோய் என்பது பரம்பரை நோய், ஆனால் இன்று? பரம்பரையில் அனைவருக்கும் இருக்கும் நோயாக மாறிவிட்டது.

சோடா மற்றும் வெள்ளை சர்க்கரை
இதற்கு காரணம் சோடா பானங்களும், வெள்ளை சர்க்கரை பயன்பாடு, உணவுகளில் கலக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் தான். நாம் அனைவரும் அறிந்தது தான் இது. ஆனால், பிறகு ஏன் இவை எல்லாம் முற்றிலுமாக தடை செய்யப்படவில்லை?

இயற்கை மருத்துவம் எங்கே?
பாட்டி வைத்தியம், சித்த வைத்தியம் என நமது வீட்டு சமையல் பொருள்கள் மற்றும் இயற்கை தாவர மூலிகைகளை மருந்தாக உட்கொண்டு வந்த வரை நமது உடல் ஆரோக்கியமாக தான் இருந்து வந்தது. ஆனால், இன்று?

கரியும், உப்பும்
ஆரம்பம் முதலே கரியும், உப்பையும் வைத்து தான் பல் துலக்கி வந்தோம். திடீரென பற்பசை பயன்படுத்துங்கள் என வெள்ளையாக ஒன்றை காட்டியவுடன் அதற்கு மாறினோம். பற்கள் பலவீனம் அடைந்தன, உடனே அதற்கென தனி ஸ்பெசல் பற்பசை. ஒரு கம்பெனி பலவகை பற்பசை விற்று பெரும் லாபம் அடைகிறது. நாம் பல் இழித்துக் கொண்டு நிற்கிறோம்.

முடிவு நம் கையில்!
இதற்கான முடிவு அரசாங்கத்தின் கையில் இல்லை. நமது கையில் தான் இருக்கிறது. நமக்கு இவ்வளவு கேடு விளைவிக்கும் பொருட்களை இனியும் வாங்கி பயன்படுத்த தான் போகிறோமா? அல்லது இனியாவது நமது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது நல்லது என அறிந்து செயலப்பட போகிறோமா?

தலைமுறை
முடி உதிர்வு, ஆண்மை குறைபாடு, உடல் பருமன் என பல உடல் நலக் கோளாறுகளை வெறும் 10 வருடங்களில் அதிகமாக சம்பாதித்து விட்டோம். இதை உங்களது குழந்தைகளுக்கும் பரிசளித்து விடாதீர்கள். இல்லையேல் நமது அடுத்த தலைமுறை வால் ஈ (Wall -E) படத்தில் காண்பிக்கப்பட்டதை போல மாறிவிடும்.



Click it and Unblock the Notifications