Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பலரும் அறியாத மனித உடலில் மறைந்திருக்கும் சில புதிரான இரகசியங்கள்!
இவ்வுலகில் இன்றளவும் முழுதாக கண்டறியப்படாத ஓர் மெக்கானிசம் இருக்கிறது எனில், அது மனித உடல் தான். ஆம், இன்றளவும் நமது தலையில் இருந்து கால் வரை கண்டறியப்படாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. நாம் இங்கு காணவிருக்கும் பல விஷயங்கள் நிச்சயமாக நீங்கள் இதற்கு முன்பு அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
இந்த உலகில் சில இடங்களில் மட்டுமல்ல, நமது உடலிலும் கூட இன்னும் அறியப்படாத புதிரான இரகசியங்கள் இருக்க தான் செய்கிறது. அமுக்குவான் பேய் என்று ஒன்று கூறப்படுகிறது, அது ஸ்லீப்பிங் பாரலசிஸ் ஆகும். "பயந்தே சாவாதடா.." என்று நாம் கூறுவோம். ஆம், நிஜமாகவே உங்கள் பயம் உங்களை கொல்லும்.

புதிர் இரகசியம் #1
உறக்கம்!
15 நிமிடங்கள் அசையாமல் படுத்திருந்தால் நீங்கள் தானாக உறங்கிவிடுவீர்கள்.

புதிர் இரகசியம் #2
எழுந்த பின்!
நீங்கள் உறங்கி எழுந்த பின், நடக்கும் முதம் மூன்று நொடிகள் நடக்கும் செயல்கள் எதுவும் உங்களால் நினைவுகூர்ந்து பார்க்க முடியாது.

புதிர் இரகசியம் #3
அச்சம்!
உங்களது பயத்தினாலே நீங்கள் இறக்க வாய்ப்பிருக்கிறது. ஆம், நீங்கள் அதிகமாக அச்சம் கொண்டால், உடலில் அட்ரினலின் அதிகமாக வெளிப்படும். அதிகளவில் அட்ரினலின் வெளிபடுதல் நச்சுத்தன்மை உடையது ஆகும்.

புதிர் இரகசியம் #4
கண்ணாடி!
கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே புகழ்ந்து, பெருமையாக பேசுவதால், உங்களது மனநிலை அதிகரிக்கும், வலிமையாக மாறும்.

புதிர் இரகசியம் #5
வெட்கம்!
அதிகமாக வெட்கப்படும் நபர்கள் ஸ்மார்ட்டாகவும், மிகவும் நம்பத்தக்க நபர்களாகவும் இருப்பார்கள்.

புதிர் இரகசியம் #6
அழுகை!
ஒருவர் அழுகும் போது, தனது வாழ்வில் நடந்த பழைய சோகமான நிகழ்வுகளை எண்ணி, அதிகமாக அழுகிறார்கள். இதை, ஸ்கம்பக் பிரையின் என்று கூறுகிறார்கள். அதாவது, மூளையின் அசுத்தமான செயலாக இது கருதப்படுகிறது.

புதிர் இரகசியம் #7
பாரலசிஸ்!
நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது, உடலின் ஒருபகுதி பாரலசிஸ் நிலைக்கு செல்கிறது. இதனால், நீங்களாக உங்களை அறியாமல் உறங்கும் போது எந்த ஒரு தீங்கு விளைவிக்கும் செயல்கள் செய்துவிடாமல் உடல் தடுக்கிறது.

புதிர் இரகசியம் #8
சோகம்!
உளவியல் ரீதியாக கூறப்படுவது என்னவெனில், நீங்கள் சோகமாக இருக்கும் போது, எப்போதுமே, உங்களை சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என எண்ண துவங்குவீர்கள்.

புதிர் இரகசியம் #9
கிச்சுகிச்சு!
கிச்சுகிச்சு மூட்டுவது ஒருவரை மகிழ்சிக்கும் செயல் என நாம் அனைவரும் கருதி வருகிறோம். ஆனால, உண்மையில், கிச்சுகிச்சு மூடுவது ஒருவரை துன்புறுத்தும் செயல் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதிர் இரகசியம் #10
தும்மல்!
நீங்கள் தும்மும் போது ஓர் நொடி இறக்கிறீர்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆம், நாம் தும்மும் போது ஒரு நொடி நமது இதயம் செயல்பாட்டை இழக்கிறது என்றும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications