Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
கண் பார்வை குறைபாடா? இந்த 8 எளிய பயிற்சிகள் மூலம் எளிதாக முன்னேற்றம் காணலாம்!
இந்தியாவில் கண்குறைபாடில்லாதோர் எண்ணிக்கை மிக குறைவு.அதுவும் 24/7 என கணிணி,மற்றும் மொபைலும் நம் உடலில் ஓர் அங்கமாக போய்விட்டது. ஆரம்ப நிலையிலுள்ள கிட்டபார்வைக்கும் தூரப் பார்வைக்கும் கண்ணாடியும்,கான்டாக்ட் லென்ஸும் மட்டும் தீர்வல்ல. கண்களுக்கு சில பயிற்சிகள் கொடுப்பதினாலும் அதனை நார்மலுக்கு கொண்டுவரலாம்.
இதோ கண்களை காப்பாற்ற 8 சுலபமான வழிகள்!

கண்களுக்கு ஓய்வு:
நீங்கள் கணிணியில் வேலை செய்பவர்களாக இருந்தால், அவ்வப்போது வெளிச்சம் குறைந்த அறைக்கு சில நிமிடங்கள் சென்று வாருங்கள். கணினியின் ஒளியை சற்று குறைத்து வேலை செய்யலாம்.
கண்ணாடி ஆபத்து:
நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், சில நிமிடங்களுக்கு கண்ணாடி அணிவதை தவிர்க்க வேண்டும். "கானா மருத்துவ இதழில்" எடுக்கப்பட்ட ஆய்விலும், ப்ரேஸில் மருத்துவ மாணவர்கள் எடுத்த ஆய்விலும் கண்ணாடி அணிவதால் கண்பார்வைக்கு தீங்கு விளைவிக்கும் என கண்டறிந்துள்ளார்கள்.
கண் மசாஜ்:
கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களால் கண்களை சுற்றியும் மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும்.அதேபோல் பின்னந்தலையில் மசாஜ் செய்வதனால் கண்களுக்கும் ரத்த ஓட்டம் அதிகம் பாய்ந்து கண்கள் சுறுசுறுப்படைகிறது.
20-20-20:
நீங்கள் தொடர்ச்சியாக கணிணி பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தள்ளிபோய் நின்று 20 நொடிகளாவது இடைவேளை தர வேண்டும். அதனை மனதில் வைத்துக் கொள்ளத்தான் 20-20-20.
இயற்கையோடு உறவாடு:
அலுவலகம் வீடு என ஒரே இடத்தில் அடைபட்டு கிடக்காமல், அவ்வப்போது மரம் பசுமை சூழ்ந்த இடங்களுக்கு செல்வது கண்களுக்கும் மனதிற்கும் அமைதி தரும்.
கண்களுக்கு ஒத்தடம்:
கண்களுக்கு இளஞ்சூட்டில் பருத்தி துணியில் ஒத்தடம் கொடுப்பதால், கண்கள் வறண்டு போகாமல்.ஈரப்பதத்துடன் இருக்கும்.
கேரட் மற்றும் சக்கரைவள்ளிக் கிழங்கு உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளவேண்டும். இதிலிருக்கும் உயர்ரக வைட்டமின் எ சத்து கண் பார்வைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

