Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
கண் பார்வை குறைபாடா? இந்த 8 எளிய பயிற்சிகள் மூலம் எளிதாக முன்னேற்றம் காணலாம்!
இந்தியாவில் கண்குறைபாடில்லாதோர் எண்ணிக்கை மிக குறைவு.அதுவும் 24/7 என கணிணி,மற்றும் மொபைலும் நம் உடலில் ஓர் அங்கமாக போய்விட்டது. ஆரம்ப நிலையிலுள்ள கிட்டபார்வைக்கும் தூரப் பார்வைக்கும் கண்ணாடியும்,கான்டாக்ட் லென்ஸும் மட்டும் தீர்வல்ல. கண்களுக்கு சில பயிற்சிகள் கொடுப்பதினாலும் அதனை நார்மலுக்கு கொண்டுவரலாம்.
இதோ கண்களை காப்பாற்ற 8 சுலபமான வழிகள்!

கண்களுக்கு ஓய்வு:
நீங்கள் கணிணியில் வேலை செய்பவர்களாக இருந்தால், அவ்வப்போது வெளிச்சம் குறைந்த அறைக்கு சில நிமிடங்கள் சென்று வாருங்கள். கணினியின் ஒளியை சற்று குறைத்து வேலை செய்யலாம்.
கண்ணாடி ஆபத்து:
நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், சில நிமிடங்களுக்கு கண்ணாடி அணிவதை தவிர்க்க வேண்டும். "கானா மருத்துவ இதழில்" எடுக்கப்பட்ட ஆய்விலும், ப்ரேஸில் மருத்துவ மாணவர்கள் எடுத்த ஆய்விலும் கண்ணாடி அணிவதால் கண்பார்வைக்கு தீங்கு விளைவிக்கும் என கண்டறிந்துள்ளார்கள்.
கண் மசாஜ்:
கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களால் கண்களை சுற்றியும் மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும்.அதேபோல் பின்னந்தலையில் மசாஜ் செய்வதனால் கண்களுக்கும் ரத்த ஓட்டம் அதிகம் பாய்ந்து கண்கள் சுறுசுறுப்படைகிறது.
20-20-20:
நீங்கள் தொடர்ச்சியாக கணிணி பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தள்ளிபோய் நின்று 20 நொடிகளாவது இடைவேளை தர வேண்டும். அதனை மனதில் வைத்துக் கொள்ளத்தான் 20-20-20.
இயற்கையோடு உறவாடு:
அலுவலகம் வீடு என ஒரே இடத்தில் அடைபட்டு கிடக்காமல், அவ்வப்போது மரம் பசுமை சூழ்ந்த இடங்களுக்கு செல்வது கண்களுக்கும் மனதிற்கும் அமைதி தரும்.
கண்களுக்கு ஒத்தடம்:
கண்களுக்கு இளஞ்சூட்டில் பருத்தி துணியில் ஒத்தடம் கொடுப்பதால், கண்கள் வறண்டு போகாமல்.ஈரப்பதத்துடன் இருக்கும்.
கேரட் மற்றும் சக்கரைவள்ளிக் கிழங்கு உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளவேண்டும். இதிலிருக்கும் உயர்ரக வைட்டமின் எ சத்து கண் பார்வைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

