Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கண் பார்வை குறைபாடா? இந்த 8 எளிய பயிற்சிகள் மூலம் எளிதாக முன்னேற்றம் காணலாம்!
இந்தியாவில் கண்குறைபாடில்லாதோர் எண்ணிக்கை மிக குறைவு.அதுவும் 24/7 என கணிணி,மற்றும் மொபைலும் நம் உடலில் ஓர் அங்கமாக போய்விட்டது. ஆரம்ப நிலையிலுள்ள கிட்டபார்வைக்கும் தூரப் பார்வைக்கும் கண்ணாடியும்,கான்டாக்ட் லென்ஸும் மட்டும் தீர்வல்ல. கண்களுக்கு சில பயிற்சிகள் கொடுப்பதினாலும் அதனை நார்மலுக்கு கொண்டுவரலாம்.
இதோ கண்களை காப்பாற்ற 8 சுலபமான வழிகள்!

கண்களுக்கு ஓய்வு:
நீங்கள் கணிணியில் வேலை செய்பவர்களாக இருந்தால், அவ்வப்போது வெளிச்சம் குறைந்த அறைக்கு சில நிமிடங்கள் சென்று வாருங்கள். கணினியின் ஒளியை சற்று குறைத்து வேலை செய்யலாம்.
கண்ணாடி ஆபத்து:
நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், சில நிமிடங்களுக்கு கண்ணாடி அணிவதை தவிர்க்க வேண்டும். "கானா மருத்துவ இதழில்" எடுக்கப்பட்ட ஆய்விலும், ப்ரேஸில் மருத்துவ மாணவர்கள் எடுத்த ஆய்விலும் கண்ணாடி அணிவதால் கண்பார்வைக்கு தீங்கு விளைவிக்கும் என கண்டறிந்துள்ளார்கள்.
கண் மசாஜ்:
கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களால் கண்களை சுற்றியும் மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும்.அதேபோல் பின்னந்தலையில் மசாஜ் செய்வதனால் கண்களுக்கும் ரத்த ஓட்டம் அதிகம் பாய்ந்து கண்கள் சுறுசுறுப்படைகிறது.
20-20-20:
நீங்கள் தொடர்ச்சியாக கணிணி பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தள்ளிபோய் நின்று 20 நொடிகளாவது இடைவேளை தர வேண்டும். அதனை மனதில் வைத்துக் கொள்ளத்தான் 20-20-20.
இயற்கையோடு உறவாடு:
அலுவலகம் வீடு என ஒரே இடத்தில் அடைபட்டு கிடக்காமல், அவ்வப்போது மரம் பசுமை சூழ்ந்த இடங்களுக்கு செல்வது கண்களுக்கும் மனதிற்கும் அமைதி தரும்.
கண்களுக்கு ஒத்தடம்:
கண்களுக்கு இளஞ்சூட்டில் பருத்தி துணியில் ஒத்தடம் கொடுப்பதால், கண்கள் வறண்டு போகாமல்.ஈரப்பதத்துடன் இருக்கும்.
கேரட் மற்றும் சக்கரைவள்ளிக் கிழங்கு உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளவேண்டும். இதிலிருக்கும் உயர்ரக வைட்டமின் எ சத்து கண் பார்வைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













