Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
கண் பார்வை குறைபாடா? இந்த 8 எளிய பயிற்சிகள் மூலம் எளிதாக முன்னேற்றம் காணலாம்!
இந்தியாவில் கண்குறைபாடில்லாதோர் எண்ணிக்கை மிக குறைவு.அதுவும் 24/7 என கணிணி,மற்றும் மொபைலும் நம் உடலில் ஓர் அங்கமாக போய்விட்டது. ஆரம்ப நிலையிலுள்ள கிட்டபார்வைக்கும் தூரப் பார்வைக்கும் கண்ணாடியும்,கான்டாக்ட் லென்ஸும் மட்டும் தீர்வல்ல. கண்களுக்கு சில பயிற்சிகள் கொடுப்பதினாலும் அதனை நார்மலுக்கு கொண்டுவரலாம்.
இதோ கண்களை காப்பாற்ற 8 சுலபமான வழிகள்!

கண்களுக்கு ஓய்வு:
நீங்கள் கணிணியில் வேலை செய்பவர்களாக இருந்தால், அவ்வப்போது வெளிச்சம் குறைந்த அறைக்கு சில நிமிடங்கள் சென்று வாருங்கள். கணினியின் ஒளியை சற்று குறைத்து வேலை செய்யலாம்.
கண்ணாடி ஆபத்து:
நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், சில நிமிடங்களுக்கு கண்ணாடி அணிவதை தவிர்க்க வேண்டும். "கானா மருத்துவ இதழில்" எடுக்கப்பட்ட ஆய்விலும், ப்ரேஸில் மருத்துவ மாணவர்கள் எடுத்த ஆய்விலும் கண்ணாடி அணிவதால் கண்பார்வைக்கு தீங்கு விளைவிக்கும் என கண்டறிந்துள்ளார்கள்.
கண் மசாஜ்:
கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களால் கண்களை சுற்றியும் மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும்.அதேபோல் பின்னந்தலையில் மசாஜ் செய்வதனால் கண்களுக்கும் ரத்த ஓட்டம் அதிகம் பாய்ந்து கண்கள் சுறுசுறுப்படைகிறது.
20-20-20:
நீங்கள் தொடர்ச்சியாக கணிணி பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தள்ளிபோய் நின்று 20 நொடிகளாவது இடைவேளை தர வேண்டும். அதனை மனதில் வைத்துக் கொள்ளத்தான் 20-20-20.
இயற்கையோடு உறவாடு:
அலுவலகம் வீடு என ஒரே இடத்தில் அடைபட்டு கிடக்காமல், அவ்வப்போது மரம் பசுமை சூழ்ந்த இடங்களுக்கு செல்வது கண்களுக்கும் மனதிற்கும் அமைதி தரும்.
கண்களுக்கு ஒத்தடம்:
கண்களுக்கு இளஞ்சூட்டில் பருத்தி துணியில் ஒத்தடம் கொடுப்பதால், கண்கள் வறண்டு போகாமல்.ஈரப்பதத்துடன் இருக்கும்.
கேரட் மற்றும் சக்கரைவள்ளிக் கிழங்கு உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளவேண்டும். இதிலிருக்கும் உயர்ரக வைட்டமின் எ சத்து கண் பார்வைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

