Just In
- 2 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 30 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
Don't Miss
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த 2 நிமிட வீடியோவை பார்த்தால், இனி மேல் நீங்க பட்ஸ் யூஸ் பண்ணவே மாட்டீங்க!
நாம் காதில் உள்ள அழுக்கை அகற்ற, சுத்தம் செய்ய பயன்படுத்தும் பட்ஸ் சில சமயத்தில் காதுக்கு கோளாறாக அமைந்துவிடுகிறது. அதை பற்றிய ஒரு காணொளி பதிவு தான் இது.
காது குடைவது யாருக்கு தான் பிடிக்காது. 99% அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது காது குடைந்து விடுவார்கள். அது தரும் சுகமே தனி. ஆனால், காதை உட்புறத்தில் சுத்தம் செய்வது தவறென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், காதில் இருந்து நாம் அழுக்கு என எண்ணி சுத்தம் செய்யும் மெழுகு போன்ற பொருள் தான் காதின் ஆரோக்கியத்தை காக்கும் பொருளாகும். முக்கியமாக பட்ஸ், ஹேர் பின், கருவேப்பிலை குச்சி என எதையும் காது குடைய பயன்படுத்த வேண்டாம்...
சுகானுபவம்!
காது குடைவது என்பது நம்மில் பலருக்கு ஒரு சுகானுபவம் தான். அது ஹேர் பின்னாக இருக்கட்டும், கருவேப்பிலை குச்சியாக இருக்கட்டும், பட்ஸாக இருக்கட்டும். அது தரும் சுகமே தனி. இதற்காகவே சிலர் குளித்து முடித்து வந்தவுடன், அழுக்கை அகற்றுகிறேன் என காது குடைய ஆரம்பித்துவிடுவார்கள்.
மருத்துவர்கள் எச்சரிக்கை!
ஆனால், மருத்துவர்களோ, நமது காதுகளையும், அதன் மென்மையான உள் பாகங்களையும் பாதுகாப்பதே அந்த மெழுகு போன்ற ஒன்று தான். அது அழுக்கு அல்ல. எனவே, காதை உட்புறமாக குடைய வேண்டாம் என்கின்றனர். அதற்கு மாறாக, வெளிப்புற காதை மட்டும் சுத்தம் செய்துக் கொள்ளலாம்.
பட்ஸ் ஏன் கூடாது...
இந்தியாவை சேர்ந்த ஈ.என்.டி., மருத்துவர் குனால் அவரிடம் சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவரை பரிசோதித்த போது, அவரது காதுக்குள் பஞ்சு அடைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதை அவர் கருவிகள் கொண்டு தான் அகற்றினார்.
மற்றவை....
பஞ்சுக்கே இப்படி என்றால், ஹேர் பின், கருவேப்பிலை குச்சி போன்றவை மென்மையான, சென்சிடிவான காதின் உள் பகுதிகளை காயங்கள் உண்டாக காரணமாகிவிடும். எனவே, காதின் உட்பகுதியை சுத்தம் செய்வதை தவிர்த்து விடுங்கள். அது தான் காதுக்கும் நல்லது. மற்றபடி, அழற்சி பல தெரிந்தால், மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
காணொளிப்பதிவு!
ஈ.என்.டி., மருத்துவர் குனால் அவரிடம் சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவரை பரிசோதித்த போது எடுத்த காணொளிப்பதிவு...