Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இந்த ஜூஸ் கீல்வாத வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் என்பது தெரியுமா?
இங்கு கீல்வாத வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாதங்களின் முனைகள், முழங்கால்கள், மூட்டுக்களில் கடுமையான வலி ஏற்படுகிறதா? அப்படியெனில் அது கீல்வாத வலிக்கான அறிகுறியாகும். கீல்வாதத்தால் ஏற்படும் வலி ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு லேசாகவும், இன்னும் சிலருக்கு தாங்க முடியாத அளவிலும் வலி இருக்கும்.

இந்த கீல்வாத வலிக்கான ஓர் அற்புத பானம் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் தயாரிப்பதற்கு பீட்ரூட், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை இருந்தால் போதும். இது உடனடி நிவாரணம் தரும் அற்புத பானமாக இருக்கும்.
சரி, இப்போது கீல்வாத வலிக்கான அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். அதைப் படித்து குடித்து, கீல்வாத வலியில் இருந்து விடுபடுங்கள்.

செய்முறை #1
ஒரு பீட்ரூட்டை எடுத்து, நீரில் கழுவி விட்டு தோலுரித்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் வெள்ளரிக்காயை எடுத்து தோலுரித்துவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின்பு ஒரு கேரட்டை எடுத்து, தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

செய்முறை #4
பிறகு மிக்ஸியில் பீட்ரூட், கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

குடிக்கும் முறை
இந்த பானத்தை கீல்வாத வலி உள்ளவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் கீல்வாத வலி நாளடைவில் போய்விடும்.



Click it and Unblock the Notifications