வாய் துர்நாற்றம் உங்களை அசௌகரியமா உணர வெக்குதா? அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்!

வாய் துர்நாற்றம் என்பது நிறைய பேர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகும். ஒருவரது வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால், அருகில் வந்து பேசுவோர் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதுடன், அடுத்த முறை அருகில் வரக்கூட யோசிப்பார்கள். இம்மாதிரியான சூழ்நிலை நிச்சயம் பலருக்கு அசிங்கமாக இருக்கும்.

வாய் துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மோசமான வாய் சுகாதாரம், ஆரோக்கிய பிரச்சனைகள், வெங்காயம், பூண்டு போன்ற உணவுகள், வாய் வறட்சி, புகைப்பிடித்தல், மருந்துகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இங்கு வாய் துர்நாற்றத்தைப் போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி வாய் துர்நாற்றத்தைப் போக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிராம்பு

கிராம்பு

கிராம்பில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் உள்ளது. இது வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் 2-3 கிராம்பை வாயில் போட்டு மென்று வாருங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் உட்பொருட்கள் பாக்டீரியாக்களை அழித்து, ஈறு நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் எலுமிச்சையில் இருந்து வீசும் மணம், வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு தினமும் எலுமிச்சை

நீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை வாயைக் கொப்பளியுங்கள்.

பார்ஸ்லி

பார்ஸ்லி

பார்ஸ்லி கீரையும் வாய் துர்நாற்றத்தைப் போக்கும். இதில் உள்ள குளோரோபில் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு சிறிது பார்ஸ்லி கீரையை வாயில் போட்டு மெல்ல வேண்டும்.

புதினா

புதினா

புதினாவும் வாய் துர்நாற்றத்திற்கான ஓர் அற்புத பொருள். இதனை தினமும் வாயில் போட்டு அடிக்கடி மென்று வந்தால், வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

துளசி

துளசி

உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால், தினமும் துளசியை வாயில் போட்டு, மென்று வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, வாய் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

ஏலக்காய்

ஏலக்காய்

ஏலக்காயினுள் உள்ள விதைகளை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்கி, வாய் புத்துணர்ச்சி அடைவதோடு, சோர்ந்துள்ள மனநிலையும் மேம்படும்.

சோம்பு

சோம்பு

சோம்பில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும். எனவே வாய் புத்துணர்ச்சியுடன் இருக்க சோம்பு டீ அல்லது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள்.

பட்டை

பட்டை

பட்டை வாயில் உள்ள பாக்டீரியாக்களின் பெருக்கத்தைக் குறைக்கும். அதற்கு கொதிக்கும் நீரில் பட்டையைப் போட்டு , அத்துடன் பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து கொதித்ததும் இறக்கி, வடிகட்டி குளிர வைத்து, அந்நீரால் தினமும் இரண்டு முறை வாயைக் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

பேரிக்காய்

பேரிக்காய்

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது வாயில் எச்சிலின் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, நீண்ட நேரம் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். ஆகவே தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வாய் துர்நாற்றத்தைப் போக்குங்கள்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா பாக்டீரியாக்களை எதிர்த்து, வாயில் அமிலங்களின் அளவை சீராக வைத்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, வாயைக் கொப்பளியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion