Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இவையெல்லாம் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் எனத் தெரியுமா?
இங்கு புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
என்ன தான் புற்றுநோயைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தாலும், ஏராளமான மக்கள் இறக்கின்றனர். இதற்கு காரணம் இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காமல் இருப்பது தான். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கவனித்து ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தால், அதனால் உயிரிழப்பதைத் தடுக்கலாம்.

ஆனால் பலருக்கும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உஷாராகிக் கொள்ளுங்கள்.

அறிகுறி #1
மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்கிறீர்களா? அப்படியெனில் அதை சாதாரணமாக விடாதீர்கள். ஏனெனில் நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்வார்களாம்.

அறிகுறி #2
பலவகையான புற்றுநோய்களான இரத்த புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிற்கு நாள்பட்ட இருமல் மற்றும் நெஞ்சு வலி ஆரம்ப கால அறிகுறிகளாகும். அதிலும் நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு பகுதியில் வலி ஆரம்பித்து தோள்பட்டை வரை இருக்கும்.

அறிகுறி #3
இரத்த புற்றுநோய் இருந்தால், அடிக்கடி காய்ச்சல் வரக்கூடும். எனவே அடிக்கடி காரணமின்றி காய்ச்சல் வந்தால், உடனே மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்ளுங்கள்.

அறிகுறி #4
உணவு அல்லது நீர் விழுங்குவதில் சிரமத்தை உணர்ந்தால், தொண்டை அல்லது உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அறிகுறி #5
நிணநீர் மண்டலத்தில் அடிக்கடி வீக்கங்கள் ஏற்பட்டால், அது புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

அறிகுறி #6
அளவுக்கு அதிகமான சோர்வு மற்றும் பலவீனம், பல வகையான புற்றுநோய்க்கு அறிகுறிகளாகும். அதுவும் எந்த ஒரு காரணமும் இல்லாமல், அளவுக்கு அதிகமாக தூக்க உணர்வைப் பெற்றாமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

அறிகுறி #7
பெண்கள் வயிற்று உப்புசத்துடன், அடிவயிற்றில் தொப்பை வர ஆரம்பித்தால், உடனே மருத்துவரை அணுகி கருப்பை புற்றுநோய் உள்ளதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

அறிகுறி #8
எதுவும் சாப்பிடாமல் வயிறு நிறைந்திருப்பதை உணர்ந்தால், அதை சாதாரணமாக விடாதீர்கள். ஏனெனில் அது கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.

அறிகுறி #9
இடுப்பு அல்லது அடிவயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டு, வயிற்று உப்புசத்தை உணர்ந்தால், அதையும் சாதாணமாக நினைக்காதீர்கள். அதிலும் பல நாட்களால் இம்மாதிரியான உணர்வு இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

அறிகுறி #10
மலம் கழிக்கும் போது, அதில் இரத்தம் கலந்திருந்தால், அது மலக்குடல் புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

அறிகுறி #11
காரணமின்றி உடல் எடை குறைகிறதா? அப்படியெனில் அது குடல் மற்றும் செரிமான மண்டல புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.

அறிகுறி #12
வயிற்று பிடிப்புகள் அல்லது அடிக்கடி வயிறு அசௌகரியமாக இருந்தால், அது குடல் புற்றுநோய் இருப்பதற்கு வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது.



Click it and Unblock the Notifications