Latest Updates
-
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்...
100 வயது வரை வாழ இந்த 4 ஜூஸ் குடியுங்கள்!!
சாப்பிட வேண்டுமென தோன்றினால் உடனே பீஸா, ஃப்ரை சிப்ஸ், போன்ற மசால உணவுகளைத்தான் ஆர்டர் செய்து சாப்பிடுவோம். உங்களுக்கு அவை ஆரோக்கியமற்றது என தெரிந்தும் சாப்பிடுகிறீர்களென்றால் உங்களை உங்களுக்கே பிடிக்கவில்லையென்று அர்த்தம்.
உங்களுக்கு இவை சாப்பிட வேண்டாம் என நினைத்தாலும் நாவினை அடக்க முடியாமல் சாப்பிடுகிறீர்களா? இந்த ஆரோக்கிய சாறுகளை குடித்தால், நீங்களே மசாலா உணவுகளை சாப்பிட வேண்டாம் என ஒதுக்கி வைத்திடுவீர்கள்.
நெல்லிக்காய் சாறு:
அதியமான் இளமையாக இருக்கவேண்டுமென அவ்வை கொடுத்த நெல்லிக்கனியை எளிதில் மறக்க முடியாது. சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற நெல்லிக்காய் அவ்வளவு விசேஷமானது.

இது ஜீரண சக்தியை மேம்படுத்தும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். வைரல் தொற்று நோய்களை அண்ட விடாது. சுவாசப்பாதையை சீர்படுத்தும். இதனால் ஆஸ்துமா கட்டுப்படும். நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். மலச்சிக்கலை குணப்படுத்தும். வாயுவை தடுக்கும்.கண் பார்வையை அதிகப்படுத்தும்.
கூந்தலை நீண்டு வளரச் செய்யும்.இதனை ஊறுகாயாகவும், துவையலாகவும் சாப்பிடுவதுண்டு. ஆனால் நெல்லிக்காய் ஜூஸாக வாரம் இருமுறை சாப்பிட்டு வாருங்கள். உடல் உள்உறுப்புகள் எந்த வித பாதிப்பின்றி ஆரோக்கியமுடன் இருக்கும்.
பாவக்காய் சாறு:
இதனை கரேலா சாறு என வட மா நிலங்களில் குறிப்பிடுவதுண்டு. இதனை விதை நீக்கி சாறாக செய்து, இதில் வெல்லம், அல்லது தேன் கலந்து சாப்பிடலாம்.
இதனை வாரம் ஒருமுறை சாப்பிடால் எல்லாவித கல்லீரல் நோய்களும் குணமாகும். சிறு நீரக கற்கள் கரையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படோடு இருக்கும்.
புற்று நோயாளிகளுக்கு, புற்று நோய் செல்கள் பெருகாமல் தடுக்கும். மேலும் பலவிதமான் அபுற்று நோய்கள் வராமல் காக்கும். சரும நோய்கள் நெருங்காது.
சோற்றுக் கற்றாழை ஜூஸ்:
சோற்றுக் கற்றாழை வயிற்றுக்கு நிறைய நன்மைகள் தருபவை. அல்சரை குணமாக்கும். வயிற்று புண்களை ஆற்றும். ஜீரண சக்தியை தரும் சிறந்த ஆயுர்வேத மூலிகை இது.
நெஞ்செரிச்சலை குறைக்கும். செல்களை உடையச் செய்யும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழிக்கும். புற்று நோயை தடுக்கும். இதில் விட்டமின் பி, சி, ஈ ஆகியவை உள்ளது. சர்க்கரைவியாதி உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
சுரைக்காய் ஜூஸ்:
சுரைக்காய் அதிக நார்சத்து கொண்டுள்ளது. இது கர்ப்பப்பையை பலப்படுத்தும். கர்ப்பப்பை சம்பந்தமான வியாதிகளுக்கு தீர்வு தரும். உடல் எடையை குறைக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு இது அற்புதமான ஜூசாகும். இவை அதிக நீர்சத்துக் கொண்டுள்ளது.
கணிசமான உடல் எடையை குறிக்கும்.கல்லீரலுக்கு உகந்தது. சிறு நீரகத் தோற்று இருப்பவர்கள் இந்த ஜூஸை குடித்தால், தொற்று குணமாகிவிடும். மலச்சிக்கல் வராது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














