Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
ஏன் செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிக்க வேண்டும்?
அந்த காலத்தில் நம் தாத்தாக்களெல்லாம் செம்பு பாத்திரங்களில்தான் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள்.அதில்தான் குடிப்பார்கள்.இப்போதும் கோவில்களிலும்,பூஜைகளிலும் செம்பு பாத்திரங்களில்தான் தீர்த்தம் கொடுக்கப்படும்.நாம் வீட்டில் பேருக்காக காப்பர் பாட்டம் கொண்ட பாத்திரங்களை வாங்கி சமைக்கின்றோம்.காப்பர் பாட்டம் கொண்ட பாத்திரங்கள் நிஜமான செம்பு அல்ல.ரசாயனம் கலந்தவை.

எதற்காக செம்பு நல்லது?
அந்த காலத்தில் இரவு தூங்குவதற்கு முன் ,செம்பிலான சொம்பில் நிறைய தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டு மறு நாள் காலையில் அதனை குடிப்பார்கள்.காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள்செய்யவில்லை.குறைந்தது 8 மணி நேரமாவது நீர் செம்புப் பாத்திரத்தில் இருக்க வேண்டும். அதன்பின்னே குடிக்க வேண்டும்.ஏனெனில் நீர் செம்புடன் வினை புரிந்து மிக நல்ல விளைவுகளை நமக்கு தருகிறது.
செம்பு தரும் நன்மைகள்:
செம்பு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை குறிப்பாக டயாரியாவிற்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது. செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை குடிக்கும்போது அது ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
குடலில் ஏற்படும் தொற்று மற்றும் அதனால் உண்டான வீக்கத்தை குணப்படுத்துகிறது. வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை கட்டுபடுத்தி ,அசிசிடியைத் தடுக்கிறது.செம்பு நீர், கல்லீரல் மற்றும் கிட்னியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
உடலில் தங்கும் கொழுப்பினை குறைக்கிறது. முறையான உடற்பயிற்சியுடன் செம்பு நீரும் குடித்தால், ஆரோக்கியமான உடலைப் பெறலாம். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், செம்பு பாத்திரங்களில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் உள்ளது. அவை உடலில் உருவாகும் ஃப்ரீ ரேடிகள்ஸை அழித்து , முதுமை அடைவதை தடுத்து இளமையை நீட்டிக்கச் செய்கிறது.
செம்பு நீர் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. அதேபோல் சத்துக்களை ரத்தத்தில் உறிஞ்சுகொள்ள உதவிபுரிகிறது. இன்னும் செம்பு நீரின் முக்கியமான நன்மை என்னவென்றால் அது மூளையின் செயல்திறனை தூண்டுகிறது. புத்தியின் வேகம் கூடி , அறிவாற்றல் பெருகும்.
இத்தனை நன்மைகளைக் கொண்ட செம்புப் பாத்திரங்களை இனிமேலாவது நாம் உபயோகபடுத்த வேண்டும். எனவே டியர் லேடிஸ் அண்ட் ஜென்டில்மென். உடலுக்கு கெடுதலை மட்டுமே தரும் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிப்பதை இனிமே விட்டுவிட்டு, செம்பு பாத்திரங்களில் குடியுங்கள். நாம் இயங்க ஆதாரமான இந்த உடலுக்கு நன்மைகளையே கொடுத்திடுங்கள். உங்கள் வாழ்வு இன்னும் மேம்படட்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














