Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
ஏன் செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிக்க வேண்டும்?
அந்த காலத்தில் நம் தாத்தாக்களெல்லாம் செம்பு பாத்திரங்களில்தான் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள்.அதில்தான் குடிப்பார்கள்.இப்போதும் கோவில்களிலும்,பூஜைகளிலும் செம்பு பாத்திரங்களில்தான் தீர்த்தம் கொடுக்கப்படும்.நாம் வீட்டில் பேருக்காக காப்பர் பாட்டம் கொண்ட பாத்திரங்களை வாங்கி சமைக்கின்றோம்.காப்பர் பாட்டம் கொண்ட பாத்திரங்கள் நிஜமான செம்பு அல்ல.ரசாயனம் கலந்தவை.

எதற்காக செம்பு நல்லது?
அந்த காலத்தில் இரவு தூங்குவதற்கு முன் ,செம்பிலான சொம்பில் நிறைய தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டு மறு நாள் காலையில் அதனை குடிப்பார்கள்.காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள்செய்யவில்லை.குறைந்தது 8 மணி நேரமாவது நீர் செம்புப் பாத்திரத்தில் இருக்க வேண்டும். அதன்பின்னே குடிக்க வேண்டும்.ஏனெனில் நீர் செம்புடன் வினை புரிந்து மிக நல்ல விளைவுகளை நமக்கு தருகிறது.
செம்பு தரும் நன்மைகள்:
செம்பு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை குறிப்பாக டயாரியாவிற்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது. செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை குடிக்கும்போது அது ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
குடலில் ஏற்படும் தொற்று மற்றும் அதனால் உண்டான வீக்கத்தை குணப்படுத்துகிறது. வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை கட்டுபடுத்தி ,அசிசிடியைத் தடுக்கிறது.செம்பு நீர், கல்லீரல் மற்றும் கிட்னியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
உடலில் தங்கும் கொழுப்பினை குறைக்கிறது. முறையான உடற்பயிற்சியுடன் செம்பு நீரும் குடித்தால், ஆரோக்கியமான உடலைப் பெறலாம். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், செம்பு பாத்திரங்களில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் உள்ளது. அவை உடலில் உருவாகும் ஃப்ரீ ரேடிகள்ஸை அழித்து , முதுமை அடைவதை தடுத்து இளமையை நீட்டிக்கச் செய்கிறது.
செம்பு நீர் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. அதேபோல் சத்துக்களை ரத்தத்தில் உறிஞ்சுகொள்ள உதவிபுரிகிறது. இன்னும் செம்பு நீரின் முக்கியமான நன்மை என்னவென்றால் அது மூளையின் செயல்திறனை தூண்டுகிறது. புத்தியின் வேகம் கூடி , அறிவாற்றல் பெருகும்.
இத்தனை நன்மைகளைக் கொண்ட செம்புப் பாத்திரங்களை இனிமேலாவது நாம் உபயோகபடுத்த வேண்டும். எனவே டியர் லேடிஸ் அண்ட் ஜென்டில்மென். உடலுக்கு கெடுதலை மட்டுமே தரும் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிப்பதை இனிமே விட்டுவிட்டு, செம்பு பாத்திரங்களில் குடியுங்கள். நாம் இயங்க ஆதாரமான இந்த உடலுக்கு நன்மைகளையே கொடுத்திடுங்கள். உங்கள் வாழ்வு இன்னும் மேம்படட்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


