Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
புகைப்பிடிக்காமல் இருந்தாலும் நுரையீரல் புற்று நோய் வருமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!
புற்று நோய் பயங்கரமான நோய்தான். ஆட்கொல்லிதான்.. ஆனால் அதனை ஆரம்ப காலக்கட்டங்களிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். அப்படி நுரையீரல் புற்று நோயை எபப்டி கண்டறிவது என தெரியுமா?
நெஞ்சு வலிதான் நுரையீரல் புற்று நோயின் அறிகுறி என்பது எல்லாருக்கும் தெரிந்த அறிகுறிதான். ஆனால் அதைத் தவிர்த்து பல அறிகுறிகள் வெளிப்படும்.
அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். . ஆகவே எதையும் நேர்மறையாகவும், தைரியமாகவும் எதிர் நோக்கினால் நோய் நம்மை விட்டு விலகும்.

நுரையீரல் புற்று நோய்ப் பற்றி உங்களுக்கு தெரியா சில விஷயங்கள் இங்கே..தொடர்ந்து படியுங்கள்.

புகைப்பிடிக்காதவர்களுக்கு வருமா?
ஆமாம். வீடுகளில் உருவாகும் வாசமில்லா ரேடான் என்ற வாயுவினால் நுரையீரல் புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது. சுற்றுபுறத்தில் இருக்கும் மாசுபட்ட காற்றை தொடர்ந்து வெகு வருடங்கள் சுவாசிப்பதாலும் புற்று நோய் உருவாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தொடர்ந்து இருமல் :
தொடர்ந்து இருமல் மாதக்கணக்கில் இருந்தால், அவ்வப்போது ரத்தம் கலந்து சளி வெளிப்பட்டால் அல்லது பழுப்பு நிறத்தில் சளி உண்டானாலும் அது நுரையீரல் புற்று நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

நாள்பட்ட நுரையீரல் தொற்று :
மாதக்கணக்கில் நுரையீரல் பாதிப்பு இருந்தால், எப்போதும் கபத்தினால் சிரமப்பட்டால் அதுவும் ஒரு அறிகுறிதான். அடிக்கடி நுரையீரல் தொற்று உண்டாகி தொடர்ந்து இருமல் மற்றும் கபம் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

உடல் எடை குறைதல் :
காரணமில்லாமல் உடல் எடை குறைந்தால் உடனடியாக பரிசோதித்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி, டயட் இல்லாமல் இருந்தும் உடல் எடை குறைவதும் இதன் அறிகுறிகளில் ஒன்றாகும்.

எலும்பு வீக்கம் மற்றும் வலி :
நுரையீரல் புற்று நோய் பரவி மற்ற உறுப்புகளுக்கும் அடையும்போது, எலும்புகள், மூட்டுகளில் தாங்க முடியாத வலி உண்டாகும்.

முகம் மற்றும் கழுத்தில் வீக்கம் :
நுரையீரல் புற்று நோய் ஆரம்பித்த நிலையில் கழுத்து மற்றும் முகத்தில் வீக்கம் உண்டாகும். மேலும் தோள்பட்டைகளும், மார்பிலும் வலி உண்டாகும்.

மிக அதிகமான சோர்வு :
படுக்கையிலிருந்தே எழ முடியாத அளவிற்கு சோர்வு தலைதூக்கும். பெரும்பாலான நுரையீரல் புற்று நோய்களுக்கு மிக அதிகமான சோர்வு காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இடுப்பு தசைகள் பலவீனம் :
நுரையீரல் புற்று நோயின் அறிகுறிகளில் ஒன்று இடுப்பு தசைகள் பலவீனமாவதும். நாற்காலியிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு தசைகள் பலவீனப்படும்.

அதிக கால்சியம் :
அதிக கால்சியம் ரத்தத்தில் கலக்கும். அதோடு, சிறுநீரகம் வழியாகவும் அதிக கால்சியம் வெளியேறும். இதனை மருத்துவ பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications











