Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...!
இந்த 4 மாத்திரைகளும் உங்களை சோர்வடையச் செய்யும் என்பது தெரியுமா?
உடலின் சின்ன உபாதைகளை தவிர்த்து, பல பிரச்சனைகளுக்கு மாத்திரைகள் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைத்தால் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்படி மாத்திரை சாப்பிடும்போது ஏன் சோர்வு உண்டாகிறது என தெரியுமா?
தொட்டதெற்கெல்லாம் மாத்திரை சாப்பிடுபவர்களும் உண்டு. மாத்திரைகள் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவர் பரிந்துரைத்தாலும் சில வகை மாத்திரைகள் சாப்பிட்டதும் உங்களால் வேலை செய்ய முடியாமல் சோர்வாக இருப்பது போல் தெரிகிறதா?

தூக்கம் வருவது போல பெரும்பாலான ஆன்டிபயாடிக் இருக்கும். அது போலவே சில மாத்திரைகள் உங்களை களைப்படையச் செய்யும். எவையென பார்க்கலாம்.

மன அழுத்த மாத்திரைகள் :
மன அழுத்தத்திற்காக மாத்திரைகள் எடுப்பவர்கள் உண்டு. அதிலும் ஆண்களைக் காட்டிலும் இரு மடங்கு பெண்கள் மன அழுத்தத்திற்காக் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள் என கூறுகிறார்கள்.
செரடோனின் ஹார்மோன்தான் புத்துணர்விற்கும் நல்ல மன நிலைக்கும் காரணம். .இந்த மாத்திரைகள் செரடோனின் ஹார்மோனை ஒழுங்குபடுத்துகிறது.
அதே சமயம் மெலடோனின் சுரப்பையும் அதிகபபப்டுத்துகிறது. இதனால் மயக்க நிலை அளவுக்கு அதிகமாக ஏற்பட்டு உடலை சோர்வடையச் செய்கிறது.

அலர்ஜி மாத்திரைகள் :
நுரையீரல் தொற்று, மற்றும் ஆஸ்துமா போன்ற அலர்ஜிக்கு மாத்திரைகள் சாப்பிடும்போது, அவை மூளையில் நரம்பு மண்டல்த்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் மயக்க நிலை, தூக்கம் உண்டாகி உடலை சோர்வடையச் செய்கிறது.

ரத்த அழுத்த மாத்திரைகள் :
உயர் ரத்த அழுத்தத்திற்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் அட்ரினலின் சுரப்பை குறைக்கிறது. அட்ரினலின் இதய துடிப்பை வேகப்படுத்தும். ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துபவை. உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் இந்த ஹார்மோனை குறைப்பதால் சோர்வு உண்டாகிறது.

நரம்பு மற்றும் மனத் தளர்ச்சிக்கான மாத்திரைகள் :
மனப்பதட்டம் மற்றும் தளர்ச்சிக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் நரம்பு மண்டலத்தை கட்டொப்படுத்துகிறது, இதனால் பொதுவாக உடல் நிலை பலவீனமாகி உடல் சோர்வை உண்டாக்குகிறது.



Click it and Unblock the Notifications











