Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சென்னை மழை வெள்ளத்தால் உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவோரைக் காப்பாற்ற சில வழிகள்!!!
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் சென்னை மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள பல இடங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள் நிரம்பி, தண்ணீரை திறந்துவிட வேண்டிய சூழ்நிலையினால் வெள்ளம் வந்து, வீடுகளில் எல்லாம் தண்ணீர் புகுந்து, ஏராளமான மக்கள் தங்களின் வீட்டை இழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, தங்குவதற்கு இடம், உண்ண உணவு, குடிக்க நீர் ஏதுமின்றி, பலர் பசியால் வாடுகின்றனர். அப்படி மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகித் தவித்து வரும் மக்களுக்கு ஏராளமானோர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமல்லவா? எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிலவற்றை மனதில் கொண்டு அதன்படி நடக்க முயலுங்கள்.

சுடுநீரில் சர்க்கரை மற்றும் உப்பு
உணவு எதுவும் கிடைக்காத பட்சத்தில் 1 லிட்டர் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 5-6 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அடிக்கடி குடித்து வர, 3 நாட்கள் உணவின்றி இருக்க முடியும். மேலும் இது அனைத்து வயதினருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

மழை நீர் குடிநீர்
வெள்ளம் வந்ததால், குடிக்கும் நீரின் விலையை கூட மனசாட்சியின்றி அதிகரித்துவிட்டனர். இருப்பினும் மழை நீரை சேகரித்து, அதனை நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடிக்கலாம். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

ப்ளீச்சிங் பவுடர் அல்லது உப்பு
உங்கள் வீட்டில் முழங்கால் அளவில் தண்ணீர் புகுந்துவிட்டால், அந்த நீரில் ப்ளீச்சிங் பவுடர் அல்லது உப்பைத் தூவி விடுங்கள். இதனால் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் அல்லது கிருமிகள் அழிந்துவிடும். இம்முறை நீரிழிவு நோயாளிகளின் கால்களில் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

சாதம் வடித்த தண்ணீர்
சாதத்தை குக்கரில் வைக்காமல், பாத்திரத்தில் சமைக்கும் போது, அதில் உள்ள எஞ்சிய தண்ணீரை வடிகட்டுவோம். அப்படி வடிகட்டிய தண்ணீரைக் குடித்தால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.

ராகி உருண்டை
வெள்ளத்தால் உணவு கிடைக்காமல் வாடுபவர்களுக்கு சாதத்தை தான் வழங்க வேண்டுமென்ற அவசியமில்லை. உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலும், அவர்களின் ஆற்றல் தக்க வைக்கும் படியும், அடிக்கடி பசி ஏற்படாதவாறான உணவுப் பொருளைக் கூட வழங்கலாம். அதற்கு சிறந்தது ராகி உருண்டை. ராகி உருண்டையை உட்கொண்டால், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும், கொல்ஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

பெட்ரோலியம் ஜெல்லி அல்லது வேஸ்லின்
எங்கும் முழங்கால் அளவு நீர் இருப்பதால், கடுமையான கிருமிகளின் தாக்கத்தால் சரும பிரச்சனைகள் வராமல் இருக்க, பெட்ரோலியம் ஜெல்லி அல்லது வேஸ்லின் தடவிக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications