Just In
- 1 hr ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 6 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 9 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 9 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சென்னை மழை வெள்ளத்தால் உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவோரைக் காப்பாற்ற சில வழிகள்!!!
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் சென்னை மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள பல இடங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள் நிரம்பி, தண்ணீரை திறந்துவிட வேண்டிய சூழ்நிலையினால் வெள்ளம் வந்து, வீடுகளில் எல்லாம் தண்ணீர் புகுந்து, ஏராளமான மக்கள் தங்களின் வீட்டை இழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, தங்குவதற்கு இடம், உண்ண உணவு, குடிக்க நீர் ஏதுமின்றி, பலர் பசியால் வாடுகின்றனர். அப்படி மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகித் தவித்து வரும் மக்களுக்கு ஏராளமானோர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமல்லவா? எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிலவற்றை மனதில் கொண்டு அதன்படி நடக்க முயலுங்கள்.
சுடுநீரில் சர்க்கரை மற்றும் உப்பு
உணவு எதுவும் கிடைக்காத பட்சத்தில் 1 லிட்டர் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 5-6 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அடிக்கடி குடித்து வர, 3 நாட்கள் உணவின்றி இருக்க முடியும். மேலும் இது அனைத்து வயதினருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
மழை நீர் குடிநீர்
வெள்ளம் வந்ததால், குடிக்கும் நீரின் விலையை கூட மனசாட்சியின்றி அதிகரித்துவிட்டனர். இருப்பினும் மழை நீரை சேகரித்து, அதனை நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடிக்கலாம். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் நேராது.
ப்ளீச்சிங் பவுடர் அல்லது உப்பு
உங்கள் வீட்டில் முழங்கால் அளவில் தண்ணீர் புகுந்துவிட்டால், அந்த நீரில் ப்ளீச்சிங் பவுடர் அல்லது உப்பைத் தூவி விடுங்கள். இதனால் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் அல்லது கிருமிகள் அழிந்துவிடும். இம்முறை நீரிழிவு நோயாளிகளின் கால்களில் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
சாதம் வடித்த தண்ணீர்
சாதத்தை குக்கரில் வைக்காமல், பாத்திரத்தில் சமைக்கும் போது, அதில் உள்ள எஞ்சிய தண்ணீரை வடிகட்டுவோம். அப்படி வடிகட்டிய தண்ணீரைக் குடித்தால், நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.
ராகி உருண்டை
வெள்ளத்தால் உணவு கிடைக்காமல் வாடுபவர்களுக்கு சாதத்தை தான் வழங்க வேண்டுமென்ற அவசியமில்லை. உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலும், அவர்களின் ஆற்றல் தக்க வைக்கும் படியும், அடிக்கடி பசி ஏற்படாதவாறான உணவுப் பொருளைக் கூட வழங்கலாம். அதற்கு சிறந்தது ராகி உருண்டை. ராகி உருண்டையை உட்கொண்டால், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும், கொல்ஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
பெட்ரோலியம் ஜெல்லி அல்லது வேஸ்லின்
எங்கும் முழங்கால் அளவு நீர் இருப்பதால், கடுமையான கிருமிகளின் தாக்கத்தால் சரும பிரச்சனைகள் வராமல் இருக்க, பெட்ரோலியம் ஜெல்லி அல்லது வேஸ்லின் தடவிக் கொள்ளுங்கள்.