Latest Updates
-
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
அஞ்சறை பெட்டிய கண்டா, அஞ்சி ஓடும் நோய்கள்!
அஞ்சறை பெட்டி! தினந்தோறும் நாம் சமையல் அறையில் பயன்படுத்தி வரும் நறுமணப் பொருட்கள் ஆகும். இது, சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தையும் கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்யும் தன்மை வாய்ந்ததும் ஆகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலும் நமது தமிழ் காலச்சார உணவுகளே பல நோய்களுக்கு மருந்துகளாக பயன் தரும். அதில் முக்கிய பங்கு வகிப்பவை அஞ்சறை பெட்டியில் உள்ள மசாலா பொருட்கள்.
மஞ்சளை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!!
வாழ்க்கையும், அஞ்சறை பெட்டியும் ஒன்றுதான். அனைத்து சுவைகளையும் கலந்த ஒன்று. இது இன்றி எப்படி உணவு சுவைக்காதோ. அதே போல தான், கலவையான உணர்வுகள் இன்றி வாழ்க்கை சுவைக்காது. அஞ்சறை பெட்டியை பயன்படுத்தாத சமையல் அறை நறுமணம் இன்றி தான் இருக்கும். இன்ப துன்பம் கலந்திடாத வாழ்க்கையும் சுவாரஸ்யம் இன்றி தான் இருக்கும். அஞ்சறை பெட்டி ஒரு வாழ்க்கை தத்துவம். இனி, அஞ்சறை பெட்டியில் உள்ள மசாலா பொருட்களின் மூலம் நாம் அடையும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...
மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மஞ்சள்
நறுமணப் பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது. இது மங்களகரமான ஒன்றாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. சிறந்த கிருமி நாசினியாகவும், வயிற்றுப்புண்ணை சரி செய்யவும் உதவுகிறது. மேலும் தோல் அழகை மெருகேற்றவும் உதவுகிறது.

மல்லி
மணக்கும் மல்லி, பித்தத்தை அகற்றுவதில் கில்லி. உணவின் சுவையை சமநிலைப்படுத்துவதோடு உடல் நிலையையும் சீராக்கும் தன்மையுடையது.

சீரகம்
தாய்மையடைந்த பெண் முதல் அனைத்துப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் காலமாற்றத்தினால் ஏற்படும் சளித் தொல்லையைக் கட்டுப்படுத்த உதவி உடல்நலத்தை சீராக்கும் சீரகம்.

கசகசா
கரகரவென இருக்கும் கசகசா வயிற்று வலியை போக்கும் தன்மையுடையது. நரம்புகளை இரும்பாக்கும். மூளைக்கு பலம் தரும். மற்றும் நல்ல தூக்கம் தரும்.

மிளகு
மிளகு சாப்பிடும் போது காட்டமாகவும், காரமாகவும் இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

கிராம்பு
கிராம்பு அசைவ உணவுகளின் சுவையை அதிகரிக்க மட்டுமல்ல.., தசைப்பிடிப்பு, நெஞ்சு சளி, பல்வலி, ஈறு வலியை போக்குவதிலும் சிறந்தது. இதை தினமும் உணவில் சேர்ப்பது நல்ல ஆரோக்கியம் தரும். ஆனால், சரியான அளவு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அஞ்சறைப்பெட்டியின் அருமருந்து ரகசியத்தை அறிந்து பயன்படுத்தி உடல்நலம் பெறுங்கள்.



Click it and Unblock the Notifications