Latest Updates
-
ஏப்ரல் மாதத்தில் நஷ்டங்களையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சுப யோகம்: ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கபோவது இந்த 5 ராசிக்காரங்க தான்! -
பச்சை பயறு தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
சனி-செவ்வாயின் மோசமான சேர்க்கை: ஏப்ரல் 02 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் ஒன்றிணையும் சனிபகவான்-செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுதாம்...! -
1/2 கப் வேர்க்கடலையும், 1 கப் தயிரும் இருந்தா டக்குனு இந்த சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
IPL 2026: தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் சிஎஸ்கே வீரர்கள்! இதுல உங்களுக்கு பிடிச்சவங்க யாரு? -
கோடிகளில் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் மற்றும் திறமையுடன் பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஈவ்னிங் டைம்-ல காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க.. ருசியானதும்.. கண் பார்வையும் மேம்படும்..
எப்போதும் சோர்வை உணர்கிறீர்களா? அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்...!
தற்போது சோர்வு என்ற ஒன்று பலரையும் தொற்றி, எதையும் நிம்மதியாக செய்யவிடாமல் தடுக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்களுக்கு சோர்வு அதிகமாக உள்ளதா? அதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லையா? எப்போதும் சோர்வை உணர்வதால், உங்களுக்கே உங்கள் மீது கோபம் வருகிறதா?
அதுமட்டுமின்றி சோர்வு அதிகம் இருப்பதால், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், விருந்தினர்கள் போன்றவர்களுடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்கவிடாமல் செய்வதோடு, அலுவலகத்தில் கூட எளிதான வேலையை விரைவில் செய்து முடிக்காமல் செய்து, வாழும் வாழ்க்கையையே மோசமாக்கிவிடும்.
எனவே சோர்வு எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து விடுபடுவது எப்படி என சில வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கூறவிருக்கிறது. அதைப் படித்து தெரிந்து சோர்வில் இருந்து விடுபட்டு, உடலின் ஆற்றலை அதிகரித்து சந்தோஷமாக வாழுங்கள்.

சோர்வுக்கான காரணங்கள்
வேலை, பயணம், நிலையான வாழ்க்கை, வயது போன்றவற்றுடன், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளான நீரிழிவு, இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் போன்றவைகளும் எப்போதும் சோர்வுடன் இருப்பதற்கான காரணங்களாகும்.

உடற்பயிற்சி
தினமும் காலையில் எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம். எனவே ரன்னிங், வாக்கிங், யோகா, சைக்கிளிங் போன்ற சிம்பிளான சில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டு வாருங்கள். இதனால் நிச்சயம் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

தண்ணீர்
கார் எப்படி பெட்ரோல் இருந்தால் தான் இயங்குமோ, அதேப்போல் தான் உடலுக்கு தண்ணீர் போதிய அளவில் இருந்தால் தான் சீராக இயங்கும். உடலில் நீர் சரியான அளவில் இல்லாவிட்டால், உடலியக்கம் குறைந்து, மிகுந்த சோர்வை உண்டாக்கி, கவனச்சிதறலை அதிகரித்துவிடும். எனவே அவ்வப்போது தண்ணீரைக் குடித்து வாருங்கள். இதனால் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

தூக்கம்
தூக்கமின்மை சோர்வை உண்டாக்குவதோடு, ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே தினமும் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்வதோடு, ஒரே நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் உடலின் ஆற்றல் சீராக இருக்கும்.

அதிகப்படியான எடை
உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள்.

அடிக்கடி சாப்பிடவும்
கொஞ்சம் கொஞ்சமாக பலமுறை சாப்பிடவும் மற்றும் சிறு இடைவெளியில் ஏதேனும் ஆரோக்கியமான உணவுப் பொருளை சாப்பிட்டவாறு இருக்கவும். இப்படி சாப்பிடுவதால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். அதுமட்டுமின்றி காலை உணவை தவறாமல சாப்பிட வேண்டும். ஒரு நாளில் காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. காலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தாலேயே, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.



Click it and Unblock the Notifications











