Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்!
தினமும் சாவாசனம் செய்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!
யோகாசனம் பற்றி தெரிந்தவர்களுக்கு நிச்சயம் சாவாசனம் பற்றி தெரியும். ஆனால் சாவாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? ஆம், சாவாசனம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். இப்போது சாவாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
ஆசனங்களிலேயே சாவாசனம் செய்வது மிகவும் ஈஸி. மேலும் பலருக்கும் மிகவும் பிடித்தமான ஆசனமாகவும் இருக்கும். ஏனெனில் இந்த ஆசனம் செய்வதற்கு உடலை வளைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு பிணம் போன்று படுத்திருந்தால் போதும். ஆனால் இந்த ஆசனம் செய்யும் போது, மனதால் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
என்ன தான் இந்த ஆசனம் மிகவும் ஈஸியாக இருந்தாலும், உங்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டும்.

உடலை ரிலாக்ஸ் செய்யும்
சாவாசனம் செய்யும் போது, படுத்துக் கொண்டு இருப்பதால், அவை உடல் முழுவதும் ரிலாக்ஸ் அமடையச் செய்யும். அப்படி கண்களை மூடிக் கொண்டு உடலை ரிலாக்ஸ் செய்யும் போது, உடலில் பாதிக்கப்பட்ட செல்கள் அனைத்தும் தானாக ரிலாக்ஸ் ஆகும்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
சாவாசனம் செய்வதான் முலம், இரத்த அழுத்தத்தின் அளவு குறையும். மேலும் பதற்றத்தின் அளவும் குறையும். இப்படியே தினமும் சாவாசனம் செய்து வந்தால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

தூக்கமின்மை
ஆய்வு ஒன்றும், சாவாசனம் செய்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனை நீங்கும் என்று சொல்கிறது. உங்களால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாவிட்டால், இந்த யோகாசனம் செய்து வர, இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

தளரச் செய்யும்
நல்ல கடுமையான உடற்பயிற்சிக்கு பின், இந்த சாவாசனத்தை செய்து வந்தால், உடல் தளர்ந்து குளிர்ச்சியடைந்து ரிலாக்ஸ் ஆகும்.

சாவாசனம் செய்யும் முறை
இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். பின்னர், பக்கவாட்டில் கைகளானது உடலோடு ஒட்டியோ அல்லது இடைவெளிவிட்டோ, ஆனால் உள்ளங்கைகள் மேலே பார்த்து இருக்குமாறு வைக்க வேண்டும். மேலும் இந்த ஆசனத்தின் போது மூச்சை மட்டும் சீராக இழுத்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications