Latest Updates
-
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுது! -
செஃப் ஷான்ஜித் ஸ்பெஷல் தக்காளி தம்புலியை எப்படி செய்யணும் தெரியுமா? -
கண் ஆரோக்கியத்திற்கான சிறந்த தென்னிந்திய உணவுகளை பட்டியலிட்ட டாக்டர் ஆதித்ரேய வர்மன்! -
பங்குனி உத்திரம் ஏன் கொண்டாடப்படுகிறது? முருகன் அருள் பெற ராசிப்படி செய்ய வேண்டிய தானங்கள்! -
ஏப்ரல் 1-ல் சொந்த நட்சத்திரம் செல்லும் சந்திரன்: இன்று இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கும்... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 டம்ளர் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் கட்டுப்படும்... -
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினை அதிகரிக்குமாம்...! -
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
பங்குனி உத்திரத்துக்கு 1 கப் பச்சை பயறு இருந்தா இந்த மாதிரி டக்குனு பாயாசம் பண்ணுங்க...டேஸ்ட் அமோகமா இருக்கும்
ஒருவரின் மரணத்தை இரத்த பரிசோதனை மூலம் அறியலாம் - ஆய்வில் தகவல்
ஒருவரின் மரணத்தை தெரிந்து கொண்டால், வாழும் நாட்கள் கொடியதாகிவிடும் என்று பலருக்கும் தெரியும். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தங்களின் மரணம் எப்போது நிகழும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இத்தகையவர்களுக்காக ஓர் எளிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில் ஒருவரின் மரணத்தை இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
இரத்த பரிசோதனையின் மூலம் ஒருவரின் வாழ்நாள் மற்றும் முதுமை போன்றவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளும்படியான இரத்த பரிசோதனை முறை வெளிவரவிருக்கிறது. இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள்!!!

செல்கள் மற்றும் குரோமோசோம்கள்
ஒருவரின் உடலில் இருக்கும் இரத்த செல்களை துல்லியமாக கணக்கிடுவது மற்றும் குரோமோசோம்களின் அளவு, அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆராய்வதன் மூலம், ஒருவரின் வாழ்நாள், அவருக்கு வரப்போகும் நோய்கள் என்னவென்று கணிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

டெக்சாஸ் பல்கலைகழக ஆய்வாளர்
இந்த சோதனையைப் பற்றி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மருத்து மைய செல் பயாலஜி பிரிவு வல்லுநர் ஜெர்ரி ஷே கூறியுள்ளார்.

டாக்டர். ஜெர்ரி ஷே
டாக்டர். ஜெர்ரி ஷே தலைமையிலான மருத்துவ குழு தான் இந்த பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளது. இந்த சோதனையானது இரத்த செல்கள் மற்றும் டெலோ மெரஸ் என்னும் குரோமோசோம்கள் மூலம் மேற்கொள்ளவுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த இரத்த பரிசோதனை குறித்து ஜெர்ரி கூறியதாவது, விரைவில் அறிமுகமாகவிருக்கும் இந்த இரத்த பரிசோதனையின் மூலம் ஒருவரின் முதுமை, எப்போது இறக்கப் போகிறார் என்பது மட்டுமின்றி, என்ன நோய்கள் தாக்கக்கூடும் என்பதை அறிந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்த நோய்கள் தாக்காமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

பயாலாஜிக்கல் ஏஜ்
சிலர் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுவார்கள். அதற்கான காரணங்களையும் இந்த இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றும் டாக்டர் ஜெர்ரி கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











