Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஒருவரின் மரணத்தை இரத்த பரிசோதனை மூலம் அறியலாம் - ஆய்வில் தகவல்
ஒருவரின் மரணத்தை தெரிந்து கொண்டால், வாழும் நாட்கள் கொடியதாகிவிடும் என்று பலருக்கும் தெரியும். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தங்களின் மரணம் எப்போது நிகழும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இத்தகையவர்களுக்காக ஓர் எளிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில் ஒருவரின் மரணத்தை இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
இரத்த பரிசோதனையின் மூலம் ஒருவரின் வாழ்நாள் மற்றும் முதுமை போன்றவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளும்படியான இரத்த பரிசோதனை முறை வெளிவரவிருக்கிறது. இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள்!!!

செல்கள் மற்றும் குரோமோசோம்கள்
ஒருவரின் உடலில் இருக்கும் இரத்த செல்களை துல்லியமாக கணக்கிடுவது மற்றும் குரோமோசோம்களின் அளவு, அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆராய்வதன் மூலம், ஒருவரின் வாழ்நாள், அவருக்கு வரப்போகும் நோய்கள் என்னவென்று கணிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

டெக்சாஸ் பல்கலைகழக ஆய்வாளர்
இந்த சோதனையைப் பற்றி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மருத்து மைய செல் பயாலஜி பிரிவு வல்லுநர் ஜெர்ரி ஷே கூறியுள்ளார்.

டாக்டர். ஜெர்ரி ஷே
டாக்டர். ஜெர்ரி ஷே தலைமையிலான மருத்துவ குழு தான் இந்த பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளது. இந்த சோதனையானது இரத்த செல்கள் மற்றும் டெலோ மெரஸ் என்னும் குரோமோசோம்கள் மூலம் மேற்கொள்ளவுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இந்த இரத்த பரிசோதனை குறித்து ஜெர்ரி கூறியதாவது, விரைவில் அறிமுகமாகவிருக்கும் இந்த இரத்த பரிசோதனையின் மூலம் ஒருவரின் முதுமை, எப்போது இறக்கப் போகிறார் என்பது மட்டுமின்றி, என்ன நோய்கள் தாக்கக்கூடும் என்பதை அறிந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்த நோய்கள் தாக்காமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

பயாலாஜிக்கல் ஏஜ்
சிலர் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுவார்கள். அதற்கான காரணங்களையும் இந்த இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றும் டாக்டர் ஜெர்ரி கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications