அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு: நிபுணர் எச்சரிக்கை

By Siva

Water
லண்டன்: தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் நலத்திற்கு கேடு உண்டாகும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மார்க்கரட் தெரிவித்துள்ளார்.

அதிக அளிவில் தண்ணீ்ர் குடிப்பதால் தோல் இளமையாக இருக்கும், நினைவுத் திறன் அதிகரிக்கும், உடல் எடை குறையும், சிறுநீரக பாதிப்புகள் வராது என்று ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால் தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மார்க்கரட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

உடலுக்கு பொதுவாக நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். எனவே, அந்த அளவு குடித்தால் போதும். உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகையில் தாகம் எடுக்கும். அப்படி தாகம் எடுக்கையில் தண்ணீர் குடித்தால் போதும்.

தேவைக்கு மேல் தண்ணீர் குடிக்கக்கூடாது. அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உடல் உறுப்புகள் கூடுதல் பணிகளை செய்ய வேண்டியிருக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கப்படும். உடலில் கலோரியை எரிக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் போது தாகம் எடுக்கும் அதற்கு தகுந்தார்போல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைவலி ஏற்படும். எனவே, தலைவலி ஏற்பட்டால் தண்ணீர் குடிப்பது நல்லது. பாட்டலில் அடைத்து வைக்கப்படும் தண்ணீரைக் குடிப்பது ஆரோக்கியமானதன்று என்றார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, July 15, 2011, 13:46 [IST]
Desktop Bottom Promotion