Just In
- 58 min ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 3 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 11 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 13 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- News ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு புதுவை, தெலுங்கானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Movies ராஜமெளலி படத்துல மகேஷ் பாபு இந்த கெட்டப்புல நடிக்கிறாரா?.. வெளியான வெறித்தனமான ஸ்டில்!
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
நூறு வயசு வர வாழறத்துக்கு, தினமும் இந்த சின்ன சின்ன விஷயத்த மறக்காம செய்யுங்க...!
பலருக்கு நூறு வயசு வரை வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், அவர்களில் பாதி பேர் 50 வயதை கூட தாண்டுவதில்லை. காரணம் பலவித நோய்கள் நமது உடலை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, பின் மரண வாசலுக்கான டிக்கெட்டை பரிசாக கொடுத்து விடும். இது போன்ற நிலை முன்பெல்லாம் இல்லை. நமது முன்னோர்கள் பலரும் 100 வயசை சாதாரணமாக கடந்தும் வாழ்ந்தார்கள். நாமோ, இதற்கு தலைக்கீழாக இருக்கின்றோம்.
இன்றைய காலகட்டத்தில் நமது இனிமையான வாழ்க்கையே 50 வயதுக்கு மேல் தான் தொடங்குகிறது என ஒரு ஆய்வு சொல்கிறது. காரணம், நாம் பிறந்ததில் இருந்தே பள்ளி, கல்லூரி, வேலை, பணம், குழந்தைகளை கவனித்தல், அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருதல் போன்றவற்றிற்கே அதிக நேரம் செலுத்துவோம்.
இந்த கடமைகள் அனைத்துமே நிறைவேற எப்படியும் 50 வயது ஆகி விடும். நமக்கு குறைந்தது 100 வருடமாவது ஆரோக்கியமாக வாழ தேவைப்படுகிறது. சரி, எப்படி நூறு வயசு வரைக்கும் நோய்நொடி இல்லாமல் வாழறதுனு கேக்குறீங்களா..? அதற்கான தீர்வு தான் இந்த பதிவு.
சூரியனே போதும்..!
நீங்க 100 வயசு வரைக்கும் வாழ முதலில் இத கடைபிடிங்க. ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடம் சூரிய ஒளி உங்கள் மீது பட வேண்டும். இது வைட்டமின் டி-யை உங்கள் உடலுக்கு அதிகம் உற்பத்தி செய்து நீண்ட நாட்கள் வாழ வழி வகுக்கும்.
இந்த நிலை வேண்டாமே..!
சின்ன சின்ன பிரச்சினைக்கும் மன உளைச்சல் அடையாமல் இருங்கள். உங்களது மகிழ்ச்சியான மன நிலைதான் ஹார்மோனை சமமான அளவு சுரக்க செய்து உங்களது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைக்கும். எனவே, மன அழுத்தத்திலே எப்போதும் இருக்காதீர்கள்.
ஒரே இடத்திலையா..?
கணினி முன் வேலை செய்யும் பலரும் இந்த தவறை செய்கின்றனர். அதாவது, எந்த ஒரு இடத்திலும் 2 மணி நேரத்திற்கு உட்கார்ந்திருக்க கூடாதாம். இது பலவித உடல்நல குறைபாட்டை ஏற்படுத்துமாம். மேலும், இதய பிரச்சினைகள், தசை சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இந்த செயல் உங்கள் ஆயுளை குறைக்க கூடும்.
அதிகமா..? குறைவா..?
பலரும் இந்த தவறை செய்கின்றனர். நாம் உழைக்கும் உழைப்புக்கு ஏற்ற தூக்கமே போதுமானது. அளவுக்கு அதிகமாக தூங்குவதும், அளவுக்கு குறைவாக தூங்குவதும் உங்கள் ஆயுளை குறைத்து விடும். எனவே, 7 மணி நேரம் தூக்கமே உங்களுக்கு சராசரியாக போதுமானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
MOST READ: சர்க்கரை நோய் முதல் கொலஸ்ட்ரால் வரை- தீர்வுக்கு கொண்டு வரும் ஊதா நிற உணவுகள்..!
மாத்திரைகளே எமன்..!
எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடும் பழக்கம் இன்று பலருக்கும் உள்ளது. இது பலவித ஆபத்தை நமக்கு தரவல்லது. சிறிது நேரம் தூக்கம் வரவில்லை என்றாலும் மாத்திரை போட்டு தூங்கும் பழக்கம் தொடர்ச்சியாக மாறிவிட்டது. இது போன்ற பழக்கம் தான் உங்கள் ஆயுளை நிச்சயம் குறைத்து விடும்.
இத சாப்பிடுங்க..!
நீங்கள் 100 வயசு வரைக்கும் வாழ வேண்டுமென்றால் இந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும். பீன்ஸை உணவில் சேர்த்து கொண்டால் ஆயுள் நீளும். அத்துடன் இதய ஆரோக்கியமும் அதிகரிக்க கூடும்.
இதுவும் தேவைதான்..!
தம்பதிகள் இனிமையான வாழ்க்கை வாழ்ந்தாலே ஆயுள் கூடும் என ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தாம்பத்தியம் வைத்து கொள்வது சிறந்தது. இது உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதோடு, ஆயுளையும் நீட்டிக்கும்.
அதிகம் தேவை..!
பக்கத்தில் இருக்கும் கடைக்கு கூட பைக்கில் போகும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. இந்த மாதிரியான பழக்கங்கள் சோம்பேறித்தனத்தை தந்து, நமது ஆயுளை குறைத்து விடும். எனவே, எவ்வளவு தூரம் நடக்கிறீர்களோ அதை பொருத்து தான் உங்களின் ஆயுள் கூடும்.
MOST READ:ஆண்களே! இது போல ஹேர்ஸ்டைல் வைச்சிருந்தா பெண்களுக்கு உங்கள பிடிக்காதாம்..!
இனிப்பு இவ்வளவா..?
"சுவீட் எடு.! கொண்டாடு.!" என்கிற வாசகத்தை தாரக மந்திரமாக எடுத்து கொள்ளலாம், மிக குறைவான அளவே இனிப்பு வகைகளை உங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த வகை உணவுகள் உங்களது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து எடுத்து விடும்.
கொழுப்பு உணவுகளுக்கு நோ நோ..!
மனதில் நினைக்கும் அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை முதலில் மாற்றி கொள்ளுங்கள். இது பலவித அபாயத்தை உங்களுக்கு ஏற்படுத்த வல்லது. குறிப்பாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவோருக்கு ஆயுள் குறையும் என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த கொழுப்பு உணவுகள் உங்களின் ஆயுளில் பாதி நாட்களை பறித்து கொள்ளும்.
புகை ஆயுளுக்கு பகை..!
புகை பழக்கத்தை பற்றி எவ்வளவோ பிரசாரம் செய்தாலும் நாம் இதை விட்டபாடு இல்லை. புகைப்பவர்களின் ஆயுளை மெல்ல மெல்ல குறைத்து விட கூடிய தன்மை இதற்கு உண்டு. புகையினால் மோசமான கோரமான மரணம் வேண்டுமானால் உங்களுக்கு பரிசாக கிடைக்கலாம்.
எதிர்மறை எண்ணங்கள் வேண்டாமே..!
100 வயசு வரை வாழ வேண்டுமென்றால் முதலில் இதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, எப்போதும் எதிர்மறையான எண்ணங்களை நினைக்காமல் நேர்மறையான எண்ணங்களை பெற்றியே எண்ணுங்கள். இது தான் உங்களுக்கு 100 சதவீத வாழ்வை தரும்.
MOST READ: திருமணத்திற்கு பின் ஆண்களின் உடலில் ஏற்பட கூடிய புதுவித மாற்றங்கள் என்னென்ன..?