Just In
- 12 min ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 1 hr ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 1 hr ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 3 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
Don't Miss
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Movies பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அலோபதி மாத்திரைகள் உட்கொள்ளும் போது நீங்கள் செய்யும் தவறுகள் மற்றும் அதன் அபாயங்கள்!
ஆங்கில மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது நீங்கள் தொடர்ந்து செய்யும் இந்த தவறுகள் நாள்பட உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை சீர்கெடுக்கும்.
உங்கள் வீட்டில், உங்கள் நண்பர், உறவினர் ஏன் நீங்களே கூட இந்த தவறை தொடர்ந்து செய்து வரலாம். வீட்டில் அல்லது கைப்பையில் எப்போதுமே ஒரு மினி மெடிகல் ஷாப் குடியிருக்கும். சின்ன தலைவலி வந்தால் கூட ஒரு மாத்திரையை வாயில் போடு மடக்மடக்குன்னு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விழுங்கி விடுவார்கள்.
இதனால் உங்களுக்கு தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கும். மேலும், நாள்பட இந்த பழக்கம் உங்கள் உடல் பாகங்களின் ஆரோகியத்தையும் கெடுக்கும்.
#1
நம்மில் பலர் செய்யும் தவறுகள், காய்ச்சல் சளி வந்தால் கூட அதை ஒரே நாளில் சரிசெய்ய வேண்டும் என ஓவர்டோஸ் மருந்துகள் எடுத்துக் கொள்வது. இதை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் நாள்பட உடல் பாகங்களின் செயற்திறன் குறையும்.
#2
சளி என்றால் மூன்று நாள், காய்ச்சல் என்றால் ஐந்து நாள் என அந்தந்த நோய் சரியாக சில காலம் எடுத்துக் கொள்ளும். இதற்கு பொறுமை இல்லாமல் பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுக்க கூடாது.
#3
நீங்கள் ஒரு பிரச்சனைக்கு ஒரு மருத்துவ முறையை பின்பற்றினால் அது சீராகும் வரை அதே மருத்துவத்தை பின் தொடர வேண்டும். ஒரே நேரத்தில் அலோபதி, ஹோமியோபதி, ஆயிர்வேதம் என பல மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது.
#4
வேறு ஒரு நபருக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகளை, அதே பிரச்சனை தானே என கூறி நீங்கள் அதே மாத்திரையை எடுத்துக் கொள்ள கூடாது. அவருக்கு வேறு அறிகுறி, உங்களுக்கு வேறு அறிகுறியாக இருக்கலாம். இதனால் தான் தனித்தனியே மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.
#5
நீரிழிவு, இரத்த அழுத்தம், மனநோய் பிரச்சனைகள் உள்ளவர்கள், சீரான இடைவேளையில் மருத்துவரை பார்த்து அதே மாத்திரை உட்கொள்ளலாமா என கேட்டு, மீண்டும் அதன் வீரியம் அறிந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நீங்களாக நீண்ட காலம் ஒரே மருந்தை உட்கொள்ள கூடாது.
அபாயம்!
மேல் கூறியுள்ளவற்றில் நீங்கள் தொடர்ந்து செய்யும் தவறுகள் உடலின் முக்கிய பாகங்களான சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றின் செயலாற்றலை பாதிக்கக்கூடும்.