Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
அலோபதி மாத்திரைகள் உட்கொள்ளும் போது நீங்கள் செய்யும் தவறுகள் மற்றும் அதன் அபாயங்கள்!
ஆங்கில மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது நீங்கள் தொடர்ந்து செய்யும் இந்த தவறுகள் நாள்பட உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை சீர்கெடுக்கும்.
உங்கள் வீட்டில், உங்கள் நண்பர், உறவினர் ஏன் நீங்களே கூட இந்த தவறை தொடர்ந்து செய்து வரலாம். வீட்டில் அல்லது கைப்பையில் எப்போதுமே ஒரு மினி மெடிகல் ஷாப் குடியிருக்கும். சின்ன தலைவலி வந்தால் கூட ஒரு மாத்திரையை வாயில் போடு மடக்மடக்குன்னு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விழுங்கி விடுவார்கள்.
இதனால் உங்களுக்கு தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கும். மேலும், நாள்பட இந்த பழக்கம் உங்கள் உடல் பாகங்களின் ஆரோகியத்தையும் கெடுக்கும்.

#1
நம்மில் பலர் செய்யும் தவறுகள், காய்ச்சல் சளி வந்தால் கூட அதை ஒரே நாளில் சரிசெய்ய வேண்டும் என ஓவர்டோஸ் மருந்துகள் எடுத்துக் கொள்வது. இதை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் நாள்பட உடல் பாகங்களின் செயற்திறன் குறையும்.

#2
சளி என்றால் மூன்று நாள், காய்ச்சல் என்றால் ஐந்து நாள் என அந்தந்த நோய் சரியாக சில காலம் எடுத்துக் கொள்ளும். இதற்கு பொறுமை இல்லாமல் பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுக்க கூடாது.

#3
நீங்கள் ஒரு பிரச்சனைக்கு ஒரு மருத்துவ முறையை பின்பற்றினால் அது சீராகும் வரை அதே மருத்துவத்தை பின் தொடர வேண்டும். ஒரே நேரத்தில் அலோபதி, ஹோமியோபதி, ஆயிர்வேதம் என பல மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது.

#4
வேறு ஒரு நபருக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகளை, அதே பிரச்சனை தானே என கூறி நீங்கள் அதே மாத்திரையை எடுத்துக் கொள்ள கூடாது. அவருக்கு வேறு அறிகுறி, உங்களுக்கு வேறு அறிகுறியாக இருக்கலாம். இதனால் தான் தனித்தனியே மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.

#5
நீரிழிவு, இரத்த அழுத்தம், மனநோய் பிரச்சனைகள் உள்ளவர்கள், சீரான இடைவேளையில் மருத்துவரை பார்த்து அதே மாத்திரை உட்கொள்ளலாமா என கேட்டு, மீண்டும் அதன் வீரியம் அறிந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நீங்களாக நீண்ட காலம் ஒரே மருந்தை உட்கொள்ள கூடாது.

அபாயம்!
மேல் கூறியுள்ளவற்றில் நீங்கள் தொடர்ந்து செய்யும் தவறுகள் உடலின் முக்கிய பாகங்களான சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றின் செயலாற்றலை பாதிக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications