Just In
- 37 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Movies இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கண் எரிச்சல் மற்றும் வலிக்கு இது தான் காரணமாம்..!
கண்களில் ஏற்படும் வலி மற்றும் சோர்விற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நம்மில் பலர் கண் வலிகளுக்கு ஆளாகின்றனர். உண்மையில் கண் வறட்சி எதனால் ஏற்படுகிறது? கண்கள் சோர்வாகவும் வலியுடனும் இருக்கும் போது கண்களில் அரிப்பு ஏற்படுகிறது. சிலர் தூங்குவதற்காக கண்களை மூடும் போது வலியை உணர்கின்றனர். அவர்கள் மிகவும் சோர்வாக உணர்கின்றனர்.
சில சமயம் கண் வலி, தலைவலியை ஏற்படுத்தும். மேலும் உங்களை மயக்கமடைவது போலவும் செய்யும். கண்வலிகளுக்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
மூளை உடல் சோர்வு
கண்களில் வலி பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதிகமான வேலை, உடலை அதிகமாக வருத்திக்கொண்டு வேலை செய்வது, மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு வேலை செய்வது, மிக ஆழ்ந்த கவனத்தை செலுத்தி ஒரு பொருளை நீண்ட நேரம் பார்ப்பது கண்களுக்கு வலியை உண்டாக்கும்.
எக்ஸ்ட்ராக்கோகுலர் (Extraocular) தசை சோர்வு
கண்களுக்கு வேலை அதிகமாக இருக்கும் போது எக்ஸ்ட்ராக்கோகுலர் (Extraocular) தசை சோர்வடைகிறது. கண்களில் மொத்தம் ஆறு எக்ஸ்ட்ராக்கோகுலர் (Extraocular) தசைகள் உள்ளன. இவற்றில் இரண்டு, மீடியா ரெக்டி, ஒரு பொருளில் அதிகமான கவனம் செலுத்தும் போது இவை அதிக அளவு வேலை செய்கின்றன.
மிக நீண்ட நேரம் இந்த தசைகள் வேலை செய்தால் கண்கள் சோர்வடைகிறது. மிக நீண்ட நேரம் முன்னும் பின்னும் பார்ப்பதாலும் கண்கள் அதிகப்படியாக சோர்வடைகின்றன. தொடர்ந்து அதிக நேரம் முன்னும் பின்னும் திரும்பி வேலை செய்வதால், மூளையும் அதிகமாக சோர்வடைகிறது.
கண்களின் மேற்பரப்பு நோய்
நாம் ஒரு பொருளில் அல்லது கணினியில் அதிகமாக கவனம் செலுத்தி பார்க்கும் போது நமது கண்கள் இமைக்க மறக்கின்றன. கண்கள் போதுமான அளவு இமைக்காமல் இருப்பதனால், கண்களில் உள்ள நீரை புதுப்பிக்க முடியாமல் போகிறது. இதனால் கண்களில் வலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.
அதிகமான வெளிச்சம்
அதிகமான வெளிச்சம் கண்களுக்கு ஏற்றதல்ல. அலுவலகங்களில் சரியான அளவு வெளிச்சம் தரும் பல்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணினிகளில் சரியான அளவு ஒளியை வைத்து வேலை செய்வது சிறந்தது. கண்களில் ஏற்படும் கூச்சமானது கண்களை எரிய வைக்கும். மேலும் கண்களில் வலியை தரும். சரியான ஒளியளவில் வேலை செய்வது, வேலையை திறம்பட செய்ய உதவும். மிக குறைந்த அளவு ஒளியில் உற்று பார்த்து வேலை செய்வதும் கூடாது.